திங்கள், 7 ஜூன், 2021

நேற்று பத்திரிக்கையாளர் பிரியாரமணி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அதன் தாக்கம் பணியிடங்களில் இருக்குமா? தமிழ் ஊடகங்கள் இதை எப்படி கையாளுகின்றன?

 

சனி, 29 மே, 2021

நேற்று பத்திரிக்கையாளர் பிரியாரமணி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அதன் தாக்கம் பணியிடங்களில் இருக்குமா? தமிழ் ஊடகங்கள் இதை எப்படி கையாளுகின்றன?

 #MeToo இயக்கத்தை அடுத்து முன்னாள் மத்திய மந்திரி அக்பருக்கு எதிராக பிரியா ரமணி பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அக்பர் ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது பல தசாப்தங்களுக்கு முன்னர் பாலியல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டி அவரை அவதூறு செய்ததாக ரமணி மீது 2018 அக்டோபர் 15 அன்று அக்பர் புகார் அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக வர் அக்டோபர் 17, 2018 அன்று மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனக்கு எதிரான #MeToo பிரச்சாரத்தின்போது முன்வந்த பெண்கள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்தார்.

தற்போது வெளிவந்த, எம்.ஜே. அக்பர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் இருந்து நீதிமன்றம் பத்திரிகையாளர் பிரியா ரமணியை விடுவித்தது ஒரு முக்கியமான தீர்ப்பு.

மீ டூ இயக்கம்"வலு பெற்ற போது,துணிந்து சமூக வெளியில், தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் பேச முன் வந்த போது, பலவிதமான கேள்விகணைகள், எதிர்பார்த்தது போலவே, அவர்கள் மீது பாய்ந்தன.

அவர்கள் ஒழுக்கம் விமர்சனம் செய்யப்பட்டது.

இத்தனை காலதாமதமாக வெளிக் கொணர்ந்தற்கு அவர்கள் மீதே தப்பிதமாக காரணம் கற்பிக்கப்பட்டது.

அவற்றை நிரூபிக்க அவர்களால் முடியாது என்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களை, வயதில் மூத்தவர்களை கேவலப்படுத்தும் செயல் என்று வக்காலத்து வாங்கப்பட்டது.

குற்றம் சாட்டும் பெண்ணின் கண்ணியம் பாழ்போவது. பற்றிக் கூடக் கவலைப்படாமல், குற்றம் சாட்டப்பட்டதாலேயே சம்பந்தப்பட்டவரின் மரியாதை குறைந்து விட்டதாக, அவருக்காக மற்றவர்கள் வாளை சுழற்றினர்!!

இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் விதமாக வந்துள்ளது இந்த தீர்ப்பு.!!

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான தருணம் இது என்று பரவலாக இந்த தீர்ப்பு பாராட்டப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பால் அக்பர் தனக்கு எதிராக குற்றச்சாட்டியவர்களில் ஒருவரை ஊமையாக்குவதற்கான (மற்றும் மற்ற அனைவரையும் மிரட்டுவதற்கான) இந்த குறிப்பிட்ட முயற்சியின் தோல்வி, தவறான செயல்கள்.செய்ய நினைக்கும், அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்ட, மற்ற ஆண்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக சிந்திக்க வைக்கும். .

"சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர்,நற்பெயர் பெற்றவர் கூட பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுஇருக்க முடியும்" என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

பிரபல எழுத்தாளர் அணுராதா ரமணனுக்கு நடந்தது மறக்க் முடியாதே…

அதே போல ‘எந்தவொரு தளத்திற்கு முன்னும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குறைகளைத் தெரிவிக்கும் உரிமை’ உண்டு என்றதும் தீர்ப்பின் சிறப்பு அம்சம்.

விசாகா வழக்கில், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் இருந்தும், அதன் பற்றாக்குறையை உணர்ந்த நேரத்தில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிறைய பெண்களைத் தைரியமாக பேச முன் வர வைக்கும்.

காலதாமதமாக புகார் சொல்வது குறித்து, “பெரும்பாலான நேரங்களில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் பாலியல் துன்புறுத்தல் கருதப்படுவதை புறக்கணிக்க முடியாது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான தாக்குதலை அறிந்திருக்க மாட்டார்கள். ரமணி மற்றும் (கசலா வஹாப்) குறிப்பிடும் நேரத்தில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை முறையுடுவதற்கான வழிமுறைகள் இல்லாததை நீதிமன்றம் அறிந்து கொள்கிறது. ”

பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் துன்புறுத்தலின் தாக்கத்தை சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

"கண்ணியத்திற்கான உரிமையின் விலையில் நற்பெயர் உரிமையை பாதுகாக்க முடியாது," என்று அது கூறியது.தான் தீர்ப்பின் உச்சம்

"பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு சாதாரண நபராக இருக்கலாம், அவர் புகழ் பெற்ற நபராகவும் இருக்க முடியும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலோர் களங்கம் மற்றும் அவரது தன்மை மீதான தாக்குதல் காரணமாக அடிக்கடி பேச முடியாது. ”

"பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்கள் சமூகத்தில் முன்னேறுவதைத் தடுக்காது" என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

Priya Ramani: ‘I spoke because women before me spoke up. I spoke so people after me can speak up’

இந்த தீர்ப்பு பெறுவதற்கு போராடிய பிரியா ராமனை வாழ்த்தி சமூகவெளியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

"இந்த தீர்ப்பு பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில், தகுதியான கவனத்தை ஈர்த்துள்ளது" என்றார் ரமணி.

"இது அதிகமான பெண்களைப் பேச வைக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் இது சக்திவாய்ந்த ஆண்கள், தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் மீது பொய் வழக்குகளைத் தாக்கல் செய்வதை ஊக்கப்படுத்தாது என்றும் நம்புகிறேன்" என்றார்.

ஊடகங்களும் ரமணிக்கு ஆதரவாக மகிழ்ச்சியை தெரிவித்தன. பத்திரிகையாளர் ரோஹினி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், "என்ன ஒரு சண்டை # பிரியரமணி. ஒவ்வொரு பாலியல் வேட்டையாடும் வீழ்ச்சியும் ஒரே வழி." என்றார்.

ராணா அய்யூப் ரமணியுடன் ஒரு படத்தை வெளியிட்டு, "இதை இடுகையிட வேண்டியிருந்தது. பிரியா ராமனின் அன்புக்காக" என்றார்.

தி வயர் அர்ஃபா கானும் ஷெர்வானி, “ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக நிற்கும்போது, ​​அவள் எல்லா பெண்களுக்கும் துணை நிற்கிறாள்” என்று ட்வீட் செய்துள்ளார். "எங்கள் அனைவருக்கும் துணை நின்றதற்கு # பிரியரமணி நன்றி. நீங்கள் எங்கள் ஹீரோ!" என்றது அவர் ட்வீட்.

ஆனால் உண்மையில் வருத்தம் என்னவென்றால் நமது தமிழ் ஊடகங்கள் இந்த தீர்ப்பு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..

யார் கண்டது…எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ?!


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...