பாகப்பிரிவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகப்பிரிவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

நிலம் விற்க அனைத்து வாரிசுகளும் வேண்டுமா? 7 வாரிசுதாரர்களில் ஒருவர் மறுத்தால் எவ்வாறு பதிய வேண்டும்?

 தாய் தந்தை இறந்த பின், அவரின் சொத்தை விற்க இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அவர் வாரிசுகள் என்ற முறையில், அந்த நிலத்தில், அவர்களுக்கு பிரிக்கப்படாத பங்கு உள்ளது.

நம்ம flat வாங்கும்போது சொல்வார்களே UDS என்று…undivided share என்று…பிரிக்கப்படாத பங்கு….அதே தான் நிலத்திலும் உண்டு.

ஒரு வாரிசு மறுத்தாலும் நிலத்தை அவரை விட்டு விட்டு பதிய வேண்டும் என்றால், அவருக்கு உள்ள பிரிக்கப்படாத பங்கை பிரித்துக் கொடுக்க வேண்டும்.

அது பணமாகவும் இருக்கலாம்.

அவர் நிலம் தான் வேண்டும் என்று கேட்டால், வாரிசுகளுக்குக் இடையில் செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி, அவருக்கு உண்டான பங்கு நிலத்திற்கு பதிய வேண்டும்.

பின்னர் சர்வேயரை வைத்து அளந்து நிலத்தில் உள்ள அவர் பங்கு நிலத்தை வரையறை செய்து, சர்வே உள் ஒதுக்கீடு செய்து, அவருக்கு ஒப்படைக்க வேண்டும்,

இது தாசில்தார் அலுவலகத்தில் செய்ய வேண்டிய நடைமுறை.

இதன் பின்னர் மீதமுள்ள வாரிசுகள் அந்த பிரித்த நிலத்தை விற்பனை செய்யலாம்.

இதில் நடைமுறை சிக்கல்கள், அலைச்சல் உள்ளதால், முடிந்தவரை மறுக்கும் வாரிசை சம்மதிக்க வையுங்கள்.

அல்லது கூடுதலாக பணம் கொடுத்தாவது அவரை சரி செய்ய பாருங்கள்

இதில் நீதிமன்றத்தில் எல்லாம் வேலை இல்லை. தவறாக அங்கும் போய் அலைய வேண்டாம்.

அரசு அலுவலங்களில் அலைந்து பணம் கொடுத்து அவஸ்தைப்படுவதை விட, சொந்த சகோதரர்/சகோதரிக்கு கூடக் கொஞ்சம் பணம் கொடுத்து முடிப்பது சிறப்பு..

உறவும் நீடிக்கும்.

மனமும் உடலும் மகிழும் 👌

 சில வாரிசுகள் வெளிநாட்டில் இருப்பதாலும், இது குறித்த ஆர்வம் காட்டாததாலும், சொத்து பிரிவினை செய்ய முடியவில்லை என தெரிவிக்கப் பட்டிருந்தது.

அவர்களுக்கு உண்மையில் சொத்தில் பங்கு பெறுவதில் ஆரவம் இல்லையெனில், தன் பங்கை விட்டுத் கொடுக்கும் விடுதலை பத்திரத்தை எழுதி அங்குள்ள சட்ட நடைமுறைப்படி அதற்கு சான்று பெற்று அதனைக் கொண்டு மற்ற வாரிசுகள் சொத்தினை தங்களுக்குள் பிரித்துக்கொள்ளலாம்.

பாகப்பிரிவினையில் நிலத்தை/வீட்டினை பிரிக்கும் போது கடைசி மகனுக்கு இந்த திசையும் மூத்த மகனுக்கு இந்த திசையும் பிரிக்கப்பட வேண்டுமென சட்டத்தில் ஏதேனும் திட்டவட்டமான வரையறை உள்ளதா? அப்படி பிரிக்கப்பட்ட சொத்தில் ஆட்சேபனை தெரிவிக்க நமக்கு உரிமை உள்ளதா?

 


அது போன்று சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை. அது சமூக வழக்கத்தின் அடிப்படையில் செய்வதுண்டு. ஒரு வீட்டின் தலை மகனுக்கு என்று சமூகம் சில கடமைகளை எதிர்பார்ப்பதுபோல, அவனுக்கு சில சலுகைகளை வழங்குகிறது. சொத்தில் பங்கு பிரிக்கும் போது தலைப்பங்கை கொடுப்பது, கூடுதலாக சில அடிகள் ஒதுக்குவது போன்றவற்றை இப்படி சொல்லலாம்.

ஒரு குடும்பத்தை தாய் தந்தைக்கு பிறகு அரவணைத்து செல்வது அவரே என்பதால், அப்படி எதிர்பார்க்கப்படுவதால் இவை செய்வதில் தவறில்லையே. எல்லாவற்றிற்கும் சட்ட அங்கீகாரம் எதிர்பார்க்கக்கூடாது. சமூக மரபுகள் சில காரணங்களுக்காக பின்பற்றப்படத் தான் வேண்டும்.

திங்கள், 7 ஜூன், 2021

எனது கொள்ளுத் தாத்தாவின் பெயரில் தற்போது வரை பிரிவினை செய்யப்படாமல் உள்ள சொத்தில் எனது தாத்தா தனக்கு வரும் பங்கை அவருடைய தம்பிக்கு எழுதி கொடுத்துள்ளார். அதனை மீட்க வழி உள்ளதா?

 பரம்பரை சொத்து என்ற முறையில், தாத்தாவிற்கு வந்த பாகத்தில், உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

  • சமரச மையத்தை (இது குறித்த விவரம் இந்த களத்தில் உள்ளது) அணுகி, தீர்வு காணலாம் அல்லது
  • அவர் எழுதிக் கொடுத்த பத்திரம் செல்லாது என்று முதலில் வழக்கறிஞர் அறிவிப்பு கொடுத்து, தீர்வு கிடைக்காத போது வழக்கு போடலாம்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு எனது தந்தை பூர்விக நிலத்தை எந்த வித எழுத்து முறை ஒப்பந்தம் இல்லாமல் அடகு வைத்துவிட்டார். பின்னர் இறந்துவிட்டார், ஆனால் அந்த நிலத்தை எங்களுக்கு அவர்கள் தர மறுக்கின்றனர். நான் என்ன செய்வது? ஏதேனும் சட்ட ஆலோசனை கூற முடியுமா?
  1. எந்த வித எழுத்து மூலம் இல்லாத அடமானம் செல்லாது.
  2. எழுதி பதிவு செய்யாததால் வில்லங்கத்தில் அது இடம் பெற வாய்ப்பில்லை
  3. அதனால் தந்தை சொத்தின் உரிமை மகனுக்கு மாற்ற எந்த தடையும் இல்லை
  4. உடன் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யவும்
  5. அடுத்து சொத்தில் விளம்புகை பலகை வைக்கவும்.அதை தடுக்க அவர்கள் வரும்போது, சொத்தை அனுபவிக்க தடுக்கிறார்கள் என போலீசில் புகார் கொடுக்கவும்.
  6. தேவையெனில் சமரச மையத்தை நாடவும்.சமரச மையம் குறித்து விளக்கம் இதே களத்தில் உள்ளது


நான்கு வாரிசுகளில் ஒருவர் மட்டும் தனக்கு வாய்மொழியாக ஒதுக்கப்பட்ட தந்தையின் சொத்தை சார்பதிவகத்தில் விற்பனை செய்ய சார்பதிவாளர் அனுமதிப்பாரா?மற்றவர்கள் இந்த சொத்து வேண்டாம் என ஒதுங்கி விட்டனர்.

 மற்றவர்கள் அனுமதி இல்லாத நிலையில்…என்கிறீர்கள்.

பிறகு. அவர்கள் சொத்து வேண்டாம் என்று விட்டனர் என்கிறீர்கள்..எது சரி?

இப்போதெல்லாம் வாய் மொழி சொத்து பிரிவினை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையை family arrangement deed என்று தயாரித்து, அதில் நீங்கள் சொன்ன மற்றவர்கள் தங்களுக்கு இந்த சொத்து வேண்டாம் என உரிமையை உங்களுக்கு விட்டுக்கொடுத்து கையெழுத்து போட வேண்டும்.

இது குடும்பத்திற்குள் நடக்கும் விஷயம் என்பதால், இதை பதிவு செய்ய தேவையில்லை.

இந்த பத்திரம் கொண்டு, உங்கள் பெயருக்கு சொத்தின் உரிமையை மாற்றி கொள்ளலாம்.

ஆனால் இதை அந்த மற்றவர்கள் எதிர்த்தால்…அனைத்தும் வீணாகும்.

ஞாயிறு, 6 ஜூன், 2021

எங்கள் அப்பாவுடன் பிறந்தவர்கள் 7 பேர். அதில் ஒருவர் சொத்தை விற்க விடாமல், எனக்கு பணம் வேண்டாம் இடம் தான் வேண்டும் என்கிறார். என்ன செய்யலாம்?

 


இரண்டு வழிகள் உள்ளன

  1. இடம் மட்டும் வேண்டும் என்பவரிடம் மொத்த நிலத்தையும், அவர் பங்கை தவிர்த்து, சந்தை மதிப்பிற்கு வாங்கிக்கொள்ள முடியுமா என விசாரியுங்கள்.

ஏனெனில் மற்ற பங்குகளை இன்னோருவரிடம் விற்கும் முன் இவருக்கு முன்னுரிமை உள்ளது

ஒத்துக்கொண்டால், அவரிடமே விற்கலாம்.

இல்லையெனில்

2. அவர் பங்கு நிலத்தை சர்வேயர் உதவியுடன், அளவிட்டு பிரித்துக் கொடுத்து விட்டு உங்கள் மற்ற அனைவரின் மொத்த நிலத்தை விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் யாருக்கும் மனக்கசப்பு ஏற்படாது. முயற்சி செய்யுங்கள்!!💐

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...