முதலில் நீதி தேவதை ஏன் பெண்ணாக இருக்கிறாள்? ஆணாக இருக்கக்கூடாதா ? என்பதைப் பார்ப்போம்.

இது தான் பெண் தெய்வம் ஜஸ்ட்டியா ரோமானியர்களின் பெண் தெய்வம். கிரேக்க கடவுளுக்கு இணையானவள். ஒழுங்கு, சட்டம், இயற்கை நீதி, மற்றும் பண்பாடு ஆகியவற்றின் புனித வடிவம்.
ஏன் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கிறாள்?
சட்டம் ஒரு குருடு என்பதை உணர்த்தவே . அதாவது சட்டம் எந்த வித்தியாசமும் பார்க்காது. ஏழை பணக்காரன், வலிமையானவன், பலவீனமானவன், சரியானவன், எமாற்றுக்காரன் என்று. அதாவது அவள் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எதிரில் இருப்பவரைப் பார்த்து நீதி வழங்குவது இல்லை என்பதையும் தன்னுடைய ஐம்புலன்களைக் கொண்டும் அல்ல என்றும் உணர்த்தவே. கண்ணும் ஐம்புலன்களும் ஏமாற்றலாம் என்பதால், மனம் சுதந்திரமானது என்பதால் நம்பிக்கை வைக்கக்கூடிய காரண காரியத்தைக்கொண்டும் ஆராய்ந்தும் முடிவு எடுக்கிறாள் என்று உணர்த்தவே.
இதில் சுவாரசியம் என்னவென்றால், 15ஆம் நூற்றாண்டில் தான் நீதி தேவதையின் கண்ணைக் கட்டி இருக்கும் உருவங்கள் புகுத்தப்பட்டன என்று ஆய்வுகள் சொல்கிறது.
அடுத்து தராசு ஏன் வைத்திருக்கிறாள்?
அதை நீதியின் தராசு என்பர். அது, இரண்டு தரப்பையும் சரி சமமாக விசாரித்து, இரண்டு தரப்பிலும் உள்ள சாட்சியங்கள் ஆதாரங்களை சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்வதைக் காட்டுகிறது. இந்த தராசும் எகித்திய பெண் தெய்வம் மாட் என்பதுடன் இருந்த தராசு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று விக்கீபீடியா சொல்கிறது
அடுத்து அவளின் கையில் உள்ள வாள். வாள் அதிகாரத்தின் உருவகம் என்று நமக்குத் தெரியும். ஆனால் நீதி தேவதையின் கையில் உள்ள வாளிற்கு சில சிறப்புகள் உண்டு. அது உடல் வலிமையை விட ஒரு முடிவிற்கான காரனத்திற்கான சக்தியை சுட்டுகிறது. இந்த சக்தியை தான் நாம் சட்டம் என்றும் அதை செயல்படுத்த முனைகிறோம். நீதியை வழங்குவதற்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அதிகாரம் தேவை என்பதை அது உணர்த்துகிறது. மக்களாகிய நாம்தான் அந்த சட்டங்களை செயல்படுத்த தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளோம். ஏனென்றால், நாம்தான் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று.நம் விருப்பத்தினால் தான் அது சட்டத்தை அமுல்படுத்துவர்களின் கையில் உண்மையான அதிகாரமாகக் கொடுக்கப்பட்டது. இன்னொன்று கவனித்தீர்களா? அந்த வாளிற்கு இரண்டு முனைகள் உண்டு. அதாவது அந்த காரணமானது சுய விருப்பு வெறுப்பு இன்றி எதிரும் புதிருமாகவும் பயன்படுத்தக்கூடியது என்பதால்.
ஒரே மாதிரி வாதம், கண்ணோட்டம் மற்றும் நோக்கம், தண்டனை கொடுக்க கூடிய வகையில் ஒருவருக்கு எதிராகவும், வேறொரு சூழ்நிலையில் உள்ள மற்ரோருவருவரை காக்கவும் பயன் படும் என்றும் சொல்கிறது. ஒட்டுமொத்தமாக அந்த வாள் உணர்த்துவது ஒன்று தான் அதிகாரம் நடுநிலையுடன் பயன்படுத்தப்படவேண்டும். அந்த அதிகாரத்தை துஷ்ப்ராவ்யோகம் செய்வது அநீதியாகும்; வாளை சுழற்றும்போது குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது போல், நமக்கு பிரியமானவர்களுக்கும் காயம் ஏற்படலாம்; அதேபோல அந்த வாளைஅதாவது அதிகாரம் நீதியாகக் கருத முடியாது. அது ஒரு கருவி மட்டுமே. அது நீதிக்கு பணிந்தாக வேண்டும்.
எனவே ஒட்டுமொத்தமாக, நீதி தேவதை நீதி தர்மத்தை காட்டுகிறது. அதே போல அவளின் நெடிந்துயர்ந்த உருவம், பெண் என்பதால் கருணையைக் காட்டுவதாக அமையாமல், அவரவர் செயலுக்குத் தக்கபடி, கடுமையாகவும் கனிவாகவும் சூழ்நிலைக்கு தக்கவாறு காட்டும். நீதி என்பதை சம உரிமை என்று சிலர் குழப்பிக் கொள்கின்றனர். ( மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய கள்ளக் காதல் குற்றமல்ல என்ற தீர்ப்பு) சில சமயம் எல்லோருக்கும் சமமாக தீர்ப்பு வழங்குவது என்பது சிலரிடமிருந்து எடுத்து மற்றவருக்கு கொடுப்பதாகவும் அமையும். எனவே நீதி தேவதை என்ற சின்னம் பாரபட்சமின்றி நீதி வழங்குவதன் பிம்பம். எந்த ஒரு குறிப்பிட்ட மனிதருக்காக மட்டும் நியாயம் வழங்குவதாக இல்லாமல், அனைவருக்கும் பொதுவாக, சட்டத்தின் சக்தியுடன், காரண காரியத்தின் பலமுடன் செயல்படுவதை உணர்த்துகிறது. அதை பண்டைய காலத்திலிருந்து அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக