இந்த சம்பவத்தை தானே சொல்றீங்க?

கடலூரிலுள்ள தீர்க்கு திட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரியை பஞ்சாயத்து கூட்டம் நடக்கும்போது தரையில் உட்கார வைத்தது சம்பந்தமாக செய்தி வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக புவனகிரி போலீசார் அந்த பஞ்சாயத்து செயலாளர் சிந்துஜாவின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு போட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக வார்டு மெம்பர் சுகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு பணியாளரான சிந்துஜா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே போல பஞ்சாயத் துணை தலைவர் மோகன் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
இது சம்பந்தமாக கிடைத்த தகவலின் படி, பஞ்சாயத் கூட்டங்களை பெரும்பாலும், துணை தலைவர் தான் நடத்தி உள்ளார் என்பதும், சுதந்திர தினத்தன்று கூட கொடி ஏற்றவிடாமல் பஞ்சாயத் தலைவர பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே தடுக்கப்பட்டுள்ளார் என்றும் தற்போது ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமையை செய்ய மற்றவர் தடுக்கும்போது, அதற்குண்டான தீர்வு காண வேண்டி அந்த மாவட்ட ஆட்சியரை அணுகி இருக்கலாம். இதற்கென்று ய்ர்கெனவே உள்ள சட்டங்கள் இருந்தும், அதனை நம்மவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெண் அல்லது பட்டியல் சாதியை சேர்ந்தவர் அந்த பஞ்சாயத்தின் தலைவராக தேர்ந்தேடுக்கப்படவேண்டும் என்பதால் தான், அது ரிசர்வ தொகுதியாக அறிவிக்கபடுகிறது. அப்படியிருந்தும், நிறைய இடங்களில் பெண்கள், தலைவராக தேர்ந்தேடுக்கபட்டாலும், தங்கள் கணவர், அல்லது குடும்ப உறுப்பினரை தன பணியை செய்ய அனுமதிப்பது என்று தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். அதே போலே, சாதியின் அடிப்படையில், தங்கள் பணி செய்ய மற்றவர் தடுக்கும்போது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர், அதை மேலிட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கவேண்டும்.
ஆனால், அதை செய்வதை விடுத்து, வாய் மூடி மவுனியாக இருப்பது, அவர் ஏற்று கொண்ட பணிக்கு நாணயமாக நடக்க வில்லை என்றே காட்டுகிறது. இனியாவது பொதுப் பணிக்கு வந்த பின், அதனை குடும்ப பணியாக மற்றவர் மாற்ற அனுமதிப்பதை தடுப்போம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக