சமீப காலமாக தான், தேசப்பற்று, தேசத்துரோகி எண்டேய வார்த்தைகள் அதிகம் கேட்கிறது…
காரணம்…அரசை எதிர்த்து , அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்பவர்கள், தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கேள்வி வரையறைI ஏதும் இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர்..அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிண்றன. நாளுக்கு நாள் இந்த நடவடிக்கை அதிகமாகிறதே ஒழிய குறையவில்லை.
.2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தம் 93 தேசத் துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன, 76 வழக்குகளில் 96 கைதுகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அதற்கு முந்தைய ஆண்டு 70 வழக்குகள், 56 கைதுகள் மற்றும் 27 குற்றப்பத்திரிகைகள்.முந்தைய ஆண்டை விட தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கையில் 25% மற்றும் 41% கைதுகள் அதிகரித்துள்ளன.

நன்றி. (HT காப்பகம்)
உச்சநீதிமன்றத்தில் இந்த நடவடிகைகளை எதிர்த்து போடப்படும் வழக்குகளும் அதிகமாகிக்கொண்டு வருகிறது..
மாண்புமிகுஉச்சநீதிமன்றமே , 75 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சட்டப்பிரிவு இன்னும் தேவைதானா? என்று கேட்கிறது. நிறைய சட்டங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல இல்லை என்ற இந்திய அரசு இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று ஆச்சரியம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A குறித்து விசாரணை நடத்த ஒத்துக்கொண்டுள்ளது..
அப்படியென்ன .அந்த சட்டப்பிரிவு சொல்கிறது என்பவர்களுக்கு …
ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ இன் கீழ், 'சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது , எந்தவொரு நபரும் சொற்களாலோ, அல்லது வேறு எதனாலோ, அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்கும்போதும், வெறுப்பு அல்லது அவமதிப்புக்குள் கொண்டுவர முயற்சிக்கும்போதும் தேசத்துரோக குற்றம் செய்யப்படுகிறது".
ஆங்கிலேயர் காலத்தில் தேசத்துரோகி எனப்பட்டவர்கள் இன்று தியாகிகள் எண்று போற்றப்படுகிறார்கள்.
காரணம்..அப்போது இருந்தது அந்நிய அரசு..அதை எதிர்த்து விடுதலை குரல் எழுப்பியவர்களை நசுக்க கொண்டுவரப்பட்ட சட்டம் தான் அது.
ஆனால் இன்று ஆள்வது நம்முடைய அரசாங்கம்.. மக்களின சார்பில் அரசு நடத்த, தத்தம் பிரதிநிகளை மக்கள் தேர்ந்தெடுத்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர்..எந்த கட்சிக்கு அதிக மக்கள் பிரதிநிகள் உள்ளனரோ அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்கிண்றனர்..
ஆனால்..அந்தோ பரிதாபம்..
அனுப்பியவரை மறந்து, அரியாசனம் என்றும் தம்முடன் நிலைத்து இருக்க, எதிர்பபு காட்டும் நபர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்த முனைகிண்றனர்..
உண்மையில், தேசமே தாங்கள் தான் என்ற நச்சு எண்ணத்தில் எழுந்தது அது..

இதில் கொடுமை என்னவென்றால் அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை.!! .ஆனால் விசாரணை முடியுறதுக்குள்ள ஆயுளே போயிடும்!!
உதாரணம் தான் சிப்பர் பாட்டில்...
https://twitter.com/JharkhandJanad1/status/1317013441786245120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1317013441786245120%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-880957862570737204.ampproject.net%2F2107030008001%2Fframe.htmlபோலீசார் யாரையும் வாரண்ட் இல்லாமல், இந்த குற்றம் செய்தார்கள் என கைது செய்யலாம்.
போதை பொருள் வைத்த கேஸை விட கொடிது!!
முக்கியமா, அவர் கெட்ட உள்நோக்கத்துடன் தான் செய்தார் என்பது தானே ஒரு செயலை குற்றத்தன்மையில் கொண்டு வரும்..அது கூட தேவையில்லை..ஜாமீனில் வெளிவரமுடியாத மற்றும் கூட்ட முடியாத குற்றமாகும்
எமெர்ஜென்சி கால நினைவு வருகிறதா?
ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டம் தான்..ஆனாலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சட்டம் அடுத்து வந்த எந்த அரசாலும் நீக்கப்படவேயில்லை.. மாறாக, திருத்தப்பட்டுள்ளது, …அதுவும் எப்படி? அதை இன்னும் கடுமையானதாக மாற்றுவதற்காக மட்டுமே.!
இந்த சட்டப் பிரிவை நீக்குறவு செய்ய வேண்டிய தேவை குறித்து இப்போது உள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் பெஞ்ச் உட்பட இதுவரை, மூன்று பெஞ்சுகள், அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன, .அதுவும் மிக சமீபத்திலேயே..
ஆனாலும் காது லேது!!
இப்படிப்பட்ட அரிய (?!) சட்டத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்த்தோமென்றாலேயே உங்களுக்கு புரிஞ்சிடும்…இது ஏன் ஆட்சியாளர்களுக்கு அவசிய தேவையா இருக்குன்னு..!!
ஆதியில் இந்திய தண்டணை சட்டத்தை , பிரிட்டிஷார் 1860ல் கொண்டுவந்தப்ப, இந்த தேச துரோக சட்டப்பிரிவே அதில் இல்லை!!
அப்புறம் எப்படி வந்தது?
1870ல் தான், "அய்யோ விட்டுப் போய்டுச்சுப்பா"ன்னு சொல்லிக்கிட்டே கொண்டு வந்து சேர்த்தாங்க!!
அப்புறம் இதுக்கு மூணு விளக்கங்கள் உண்டு.அதாகப்பட்டது..
"அதிருப்தி" என்பது விசுவாசமின்மை மற்றும் பகை உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது, வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்காத கருத்துக்கள் ஒரு குற்றமாக இருக்காது என்று விதிகள் உள்ளன...
நம்ம வலைதள வீரர்கள் கவனத்திற்கு!!
இந்த சட்டப் பிரிவை கொண்டு தான், காந்திஜி, நேருஜி, பால கங்காதர திலக், பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதிலே முதல் பலியாடு ஆனவர் திலக்ஜி தான்..அதுவும் "கேசரி"யால!
கேசரி பிரியர்கள் பயந்துட வேண்டாம்…

இந்த கேசரி இல்லை....
திலகர் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார் ..அதன் பேர் தான் "கேசரி" அந்த சமயத்தில் நாடெங்கும் பிளேக் நோய் தலை விரித்தாடிய காலம்..
ஆமாம்..ரிப்பன் காணாம போச்சாம்😀
இந்தக் கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கையை அரசு சரியா செய்யலைன்னு நாட்டு மக்களை அரசுக்கு எதிரான தூண்டுறார்னு அவர் மேல இதே பிரிவில் கேசு.
அது பிளேக்…இது கொரானா!!
இதே பம்பாய் ஹை கோர்ட்டு தான் விசாரிச்சுது..9 ஜட்ஜ்கள். அதில் ஆறு பேர் வெள்ளைக்காரர்கள்..மூன்று இந்தியர்கள்..6:3 கணக்கில் திலகர் குற்றவாளினு தீர்ப்பாகி, 18 மாசம் சிறைத்தண்டனை!!
காட்சி மாறுது..1937..இப்போவும் இதே சட்டப்பிரிவு.ஆனா வேற கலர் பிரஷ்!
ஏன்னா புதுசா ஃபெடரல் கோர்ட்டு வந்துருக்கு..அதுக்கு மேல லண்டனலே இருக்கிற பிரிவி கவுன்சில்..
1942ல் விசாரணைக்கு வந்த ஹரேண்டு தத் மஜும்தார் Vs கிங் பேரரசர் வழக்கில்,
"பொது ஒழுங்கீனம் அல்லது அதற்கான நியாயமான எதிர்பார்ப்பு அல்லது சாத்தியம் இது தான் குற்றத்தின் சாராம்சம்." என்றது ஃபெடரல் கோர்ட்டு .
.ஆனால் அதை பிரிவி கவுன்சில், 1947ல், தன் முன்னர் வந்த பேரரசர் Vs சதாஷிவ் நாராயண் பலேராவ், வழக்கில், ஏற்க மறுத்துவிட்டது .
"அவளோ தூரம் ஏம்பா போறீங்க…இதோ பாருங்க"ன்னு திலக்கின் வழக்கில் சொன்னதை ஏற்றுக்கொண்டு, , வன்முறையைத் தூண்டுவது, தேசத்துரோக குற்றத்திற்கு ஒரு முன்நிபந்தனை அல்ல என்றும், பிரிவு 124 ஏ இன் கீழ் குற்றத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு எதிராக உள்ள பகை உணர்வுகளை உற்சாகப்படுத்துவது மட்டுமே போதுமானது என்றும் தீர்ப்பளித்தது..
அதுக்கப்புறம் சுதந்திரம் கிடைச்சுதா..
பேச்சுக்கு, கருத்து சொல்வதற்கு சுதந்திரம் வேணும்னு அதுக்கு எதிரானதாக, அரசியலமைப்பு சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ள “தேசத்துரோகம்” என்ற வார்த்தையை அகற்றுவதற்கான ஒரு திருத்தத்தை, கே.எம்.முன்ஷி நகர்த்தினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பு சட்ட வரைவிலிருந்து 1948 ஆம் ஆண்டில் "தேசத்துரோகம்" என்ற வார்த்தை கைவிடப்பட்டது. நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் தேசத்துரோகம்" என்ற சொல் மறைந்துவிட்டது,
இது பிரிவு 19 (1) (அ) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முழுமையான சுதந்திரத்தை அளித்தது. என்றாலும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 124 ஏ ஐபிசியில் தொடர்ந்து தங்கியிருந்தது..இருக்கிறது…
கொண்டையை மறைக்கலியே!!
அப்புறம் நமக்கு தான் வரலாறு தெரியுமே..
1951 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பு சட்டத்தின் கொண்டு வந்த முதல் திருத்தம் என்னன்னு..,
"ரொம்ப ஓவரா பேசுராய்ங்க.."னு, 19 (1) (அ) இன் கீழ் உள்ள சுதந்திரமான பேச்சை. மட்டுப்படுத்தி, 19 (2) வது சட்டத்தை கொண்டுவந்தார்.
அவர் அப்படி சட்டத்திருத்தம் கொண்டுவந்ததுக்கு காரணம் இருக்கு…
இந்த சட்டப்பிரிவு 124 A, எதிர்த்து, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அப்போதைய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டில் தாரா சிங் கோபி சந்த் Vs மாநிலம் என்ற வழக்கு போடப்பட்டது.
பிரிவு 124 ஏ என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு தடை என்று உயர் நீதிமன்றம் கருதியது, இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19 வது பிரிவின் கீழ் வரும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு முரணானது என்ற அடிப்படையில் இந்த 124 A செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.
.இந்த தீர்ப்புதான் ஜவஹர்லால் நேரு அரசாங்கத்தை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நியாயமான முறையில் கட்டுப்படுத்தக்கூடிய புதிய காரணங்களை அறிமுகப்படுத்தத் தூண்டியது.
சரி.அந்த சட்டப்பிரிவு 124 A செல்லாதுன்னு சொன்னது?
1954 ஆம் ஆண்டில், பாட்னா உயர்நீதிமன்றம், டெபி சோரன் மற்றும் பலர் Vs மாநில அரசு, என்ற வழக்கில், பிரிவு 124 ஏ செல்லுமனு உறுதி செய்தது, இந்த பிரிவு எந்த வகையிலும், சட்டத்தின் 19 வது பிரிவை மீறவில்லை என்று கூறியது,.அப்புறம் ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து,, அலகாபாத் உயர் நீதிமன்றம், ராம் நந்தன் Vs மாநிலம் என்ற வழக்கில் அந்த பிரிவு செல்லாது என்றது. மக்கள் ஒப்புதல் அல்லது மறுப்பு மட்டுமில்லாமல், ஒரு வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றது.
இப்படியே உயர்நீதிமன்றங்களின் பல்வேறு மாற்று கருத்துக்களிலிருந்து , ஒரு புரியாத புதிரா இருந்ததுக்கு, இறுதியாக உச்சநீதிமன்றத்தால் 1962 ஆம் ஆண்டில் கேதார் நாத் வழக்கில் தான் விடை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு தான், இன்னி வரைக்கும், தேசத்துரோகச் சட்டத்தின் விளக்கம் குறித்த உச்சநீதிமன்றத்தின் மிகவும் அதிகாரப்பூர்வ தீர்ப்பாகக் கருதப்படுகிறது. ஐபிசியின் கீழ் வரும் தேசத்துரோகச் சட்டத்தின் செல்லுபடியை இந்த அரசியலமைப்பு பெஞ்ச் உறுதிசெய்தது,
"தேசத்துரோக குற்றத்தின் நோக்கம் சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைத் தகர்த்துவிடுவதைத் தடுப்பதாகும், ஏனெனில் “மாநிலத்தின் ஸ்திரத்தன்மை என்பது, சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான இருப்பு ஒரு முக்கிய நிபந்தனையாகும் ”.என்றது.
அதே நேரத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிரிவு 124 ஏ இன் நோக்கத்தை வரையறுக்கவும் செய்தது.
"பிரிவு 124 ஏ என்பது, சட்டம் மற்றும் ஒழுங்கைத் தொந்தரவு செய்யும் நோக்கத்தையோ போக்கையோ வெளிப்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய சொற்களை மட்டுமே தண்டிக்கிறது.
வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு தீங்கு விளைவிக்கும் போக்கு தான், தேசத்துரோக விதிமுறையைத் தூண்டுவதற்கான முன் நிபந்தனை என்றும், சுதந்திரமான பேச்சைத் தடுக்க தண்டனை விதிமுறை பயன்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.
பிரிவு 124 ஏ தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்த வரையறை தான் முன்னுதாரணமாக எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பிறகு வந்த இந்திரா காந்தி அம்மையார் எமெர்ஜேணசி கொண்டு வந்தவங்களாச்சே…
அவர் அர்சாங்கம்தான் பிரிவு 124 ஏவை இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றமாக மாற்றியது. 1974 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்து, காலனித்துவ சகாப்தமான 1898 குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்த 1973 ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், தேசத்துரோகம் ஒரு அறிவாற்றல் குற்றமாக மாற்றப்பட்டது.
பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஒரு சினிமா தியேட்டருக்கு வெளியே, நின்றுக்கொண்டு, சீக்கிய பெரும்பான்மை அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய இருவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை அரசு போட்டது.1995 ல் விசாரணைக்கு வந்த இந்த ல்வந்த் சிங் மற்றும் அன்ர் வழக்கில், மான்புமிகு உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. "கோஷங்கள் எழுபவது, எந்தவொரு இடையூறுக்கும் வழிவகுக்காததால், தேசத் துரோக நடவடிக்கை இல்லை என்றும், அது பார்வையாளர்களின் மனதில் எந்தவிதமான வன்முறையையும் தூண்ட வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது..
2011 ல் இந்திர தாஸ் Vs அஸ்ஸாம் மாநிலம் மற்றும் அஸ்ஸாம் அரூப் புயான் Vs அரசு என்ற இரண்டு தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூறியது, "உடனடி சட்டவிரோத நடவடிக்கைக்கு தூண்டுதல்" என்ற பேச்சு மட்டுமே, ஒருவரை குற்றவாளியாக்க முடியும். என்றது. அதே போல, தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்தியதாக நிரூபிக்கப்படாவிட்டால் அல்லது உடனடி வன்முறைக்கு மக்களைத் தூண்டவில்லை எனில் அவரை குற்றவாளியாக்க முடியாது என்றும் கூறியது.
ஆனாலும் ஒன்றிய அரசு, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர் என்ற அம்சத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய கோரியுள்ளது.
இந்திய சட்ட ஆணையம், ஆகஸ்ட் 2018 இல் வெளியிட்ட தேசத் துரோகம் பற்றிய ஆலோசனைக் கட்டுரையில், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேசத்துரோகக் குற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என்றாலும், சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்த இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றது.
ஆனாலும், தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, தேசத்துரோக வழக்குகள் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2019 ல் உயர்வு காணப்பட்டது, ஆனால் இவற்றில் 3% மட்டுமே தண்டனை கிடைத்தது.
அதாவது, 2019 ல் தேசத்துரோகத்திற்காக கைது செய்யப்பட்ட 96 பேரில், இருவர் மட்டுமே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர், 29 பேர் விடுவிக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவைக்கு அறிவித்துள்ளது.
இவையெல்லாம் எதைக் காட்டுகிறது..?

உண்மை தான்...
தம் அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல அமைதியாக இருக்கும் அதிகார வர்க்கத்தையும், தேவையில்லாமல் பேசிப்பேசியே பொழுதை போக்கும் நம் மக்களையும் பார்க்கும் போது….
வாழ்க ஜனநாயகம்!!💐