அது போன்று சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை. அது சமூக வழக்கத்தின் அடிப்படையில் செய்வதுண்டு. ஒரு வீட்டின் தலை மகனுக்கு என்று சமூகம் சில கடமைகளை எதிர்பார்ப்பதுபோல, அவனுக்கு சில சலுகைகளை வழங்குகிறது. சொத்தில் பங்கு பிரிக்கும் போது தலைப்பங்கை கொடுப்பது, கூடுதலாக சில அடிகள் ஒதுக்குவது போன்றவற்றை இப்படி சொல்லலாம்.
ஒரு குடும்பத்தை தாய் தந்தைக்கு பிறகு அரவணைத்து செல்வது அவரே என்பதால், அப்படி எதிர்பார்க்கப்படுவதால் இவை செய்வதில் தவறில்லையே. எல்லாவற்றிற்கும் சட்ட அங்கீகாரம் எதிர்பார்க்கக்கூடாது. சமூக மரபுகள் சில காரணங்களுக்காக பின்பற்றப்படத் தான் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக