நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

அரசு அதிகாரிகள் சட்டப்படி செய்யவேண்டிய சேவையைச் சரிவர செய்யத்தவறினால் அவர்களுக்கு எதிராக நுகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா?

 ஒரு சேவையில் குறைபாடு என்னும் போது,     நுகர்வோர் யாரும் நிச்சயமாக அது சம்பந்த புகாரை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 படி தாக்கல் செய்யலாம்.

ஆனால் …சேவை என்றால் என்ன? என்பது குறித்து அந்த சட்டத்தில் என்ன சொல்லியுருக்குன்னு பார்க்கணும்.

அரசின் செயல்கள் இரண்டு பிரிவா பிரிக்கப்படும.

  • ஒண்ணு அதனோட இறையாண்மை செயல்கள் ..அதாவது soverign function ன்னு சொல்லப்படுவது..அது பத்தி எந்த நீதிமன்றத்திலேயும் கேள்வி எழுப்ப முடியாது.          ஆனால்
  • நிர்வாக ரீதியா செய்யப்படுபவையிலே ஏதும் குறை இருந்தா கேள்வி கேட்கலாம்.
  • அரசு அதிகாரிகள் ரெண்டு பணியையும் சேர்ந்து செய்யும்போது எது அவங்க செயல்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற இறையாண்மை செயல்கள், எதுலாம் இல்லைன்னு அடிக்கடி குழப்பம் ஏற்படும்.ஏன்னா அது இரண்டுக்கும் நடுவுல மெலிசான இடைவெளி தான் இருக்கு.
  • அரசு செய்யும் சேவை பொதுவா இலவசமா தான் இருக்கும்.அது போல செய்யப்படுவது இந்த சட்டத்தின் கீழ் வராது.
  • ஆனால்..சில சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயிச்சு வசூல் பண்ணிட்டு தான் அரசு செய்யுது. அது போன்ற சமயயத்தில் சேவைக்குறைபாடு இருந்தால் அதை செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிரா கேஸ் போடலாம்.
வேதாளமும் விக்ரமாதித்தனும்.

நம்ம விக்ரமாதித்தன் பேரு டாக்டர் சவந்த்.😃

  1. 2007 ஏப்ரலில் தன்னோட நிலத்தை அளக்கணும்னு மஹாராஷ்டிராவில் உள்ள மால்வன் நில அளவியல் துறையில் அவசர மனு கொடுக்கிறார். அதுக்காக ரூபாய் 2000 பீஸ் கட்ட சொல்ல, அதையும் செய்றார்.
  2. ஜூலை 18ன்னு தேதி குறிக்கிறங்க. ஆனால் மழை காரணமா தள்ளிப்போகுது. கடைசியா பிப்ரவரி 2008லே நிலத்தை அளக்கும் பணி முடியுது.
  3. 15 நாள் கழிச்சு வரைபடம் வாங்கிக்க சொல்றாங்க.ஆனால் எவ்வளோ தடவை கேட்டும் அது அவருக்கு கிடைக்கவேயில்லை.
  4. திரும்பவும் ஒரு மனு மே 2008ல் கொடுக்கிறார்.
  5. அதுக்கு பதில் ரொம்ப லேட்டா ஜூலை 16லே வருது.என்னன்னு…முந்தின நாளே அளக்கும் வேலை செஞ்சுட்டதா சொல்லி. 😯
  6. எரிச்சலாயி, அந்த கண்காணிப்பாளர் கிட்டே புகார் செய்றார்.
  7. அதுக்கு பிறகு ஆகஸ்ட் 2008லே தேதி குறிக்கிறங்க. திரும்பவும் கான்சலாயிடுது. இப்ப சொல்ற காரணம்..அவர் மனுவே கான்சலாயிடுச்சுன்னு..😃 இப்போதைக்கு நிலத்தை பிரிக்கும் வேலை செய்யலன்னு சொல்லிட்டாங்க!!
  8. அவர் விடாம, தகவல் அறியும் உரிமை சட்டதின் கீழ் தகவல் சேகரிக்க முயற்சி எடுக்குறார். பலன். 0…😄
  9. அதுக்கப்புரம் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில், அந்த குறிப்பிட்ட RI மற்றும் சர்வே அதிகாரி மேலேயும் புகார் கொடுக்கிறார்.
  10. ஆனா நுகர்வோர் மன்றத்தில் வழக்கு போடமுடியாது, சிவில் நீதிமன்றம் போங்கன்னு மனு தள்ளுபடி ஆகுது
  11. நம்ம விக்ரமாதித்தன்…சாரி..சவந்த், மாநில நுகர்வோர் மன்றத்தில் முறையிடுறாரு…
  12. அது நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு கோர்ட்டு சொல்லி, வரைபடத்தை குடுத்துடுறாங்க..அப்புறம் என்ன ..வேலை முடிஞ்சுருச்சுன்னு மனு தள்ளுபடி ஆகுது.

நாமன்னா…கோர்ட்டையும் நாட்டையும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு மத்த வேலையை பார்க்க போவோம்…

அங்கே தான் அவர் வித்யாசப்படுறார்..

13. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லிலே இருக்கிற தேசிய நுகர்வோர் மன்றத்தில் அப்பீல் செய்றார்.

அவரோட இந்த விடாமுயற்சி தான் இன்னிக்கும் அவர் பெயர் சொல்ற மாதிரியும், அவர் வழக்கு மத்தவங்களுக்கு வழிகாட்டியாவும் இருக்கு..

  • வழக்கை விசாரிச்ச தேசிய மன்றம், 2013ல் தீர்ப்பளித்தது. அதில், ஒரு முக்கிய சட்ட பிரச்சினையான நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு பெறவேண்டும் எனில், அரசின் நில அளவியல் துறை செய்வது இறையாண்மை பணியா நிர்வாக பணியா என்பதை மாநில நுகர்வோர் மன்றம் முடிவு செய்யவில்லை என்று கருத்து தெரிவித்தது.
  • அதோடு, தன்னுடைய முந்தைய வழக்கான பிரபாகர் வியங்கோபா ஆந்தோன் எதிர் நகல் கண்காணிப்பாளர், சிவில் நீதிமன்றம் 1986 2004 Consumer 7211 (NS) என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பை மேற்கோள் காட்டியது.
  • அது நீதிமன்றத்தில் சான்றிட்ட நகல் பெறுவதில் இருந்த காலதாமதம் ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடு கோரி போடப்பட்ட வழக்கு. நீதிபதிகள் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது தான் இறையாண்மை செயல் என்றும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் பெற்று சான்றிட்ட உத்தரவு நகல் வழங்குவது நிர்வாகப் பணியென்றும் அதனால் அந்த சேவையில் குறைபாடு என்றால் நுகர்வோர் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
  • அதை குறிப்பிட்ட மன்றம், இந்த வழக்கிலும் கட்டணம் பெற்றுக்கொண்டு நில அவியல்…சே..😂அளவியல் மேற்கொள்வதால் அது நிர்வாக பணி தான் என்று தீர்ப்பளித்தது.
  • அதே சமயம் அந்த துறை அதிகாரிகள், அவர்கள் பணியில் எந்த தாமதமும் ஏற்படவில்லை, பக்கத்து நிலத்து சொந்தக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தாமதம் ஆனது என்பதை நிரூபித்ததால், நஷ்ட ஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை.

வடை போச்சே..😑

  • அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயருடன் வழக்கு போடப்பட்டதை சுட்டிக்காட்டி, அதை தவிற்குமாறும் அவர்கள் செய்யும் பணியின் பெயர் மட்டும் குறிப்பிட் சொன்னது..

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும்..😃

படிமப்புர்வு சேவையில் கெட்டிக்கார கூகிள்




விளம்பரங்களால் ஏற்படும் சமூக தாக்கம் என்ன?

 இவர தான் கேரள திரைப்பட நடிகர் அனுப் மேனன். ."தாத்ரி தலை முடி க்ரீம் " விளம்பரத்தில் நடித்தவர்.

இவர் மீதும் இந்த தலை முடி க்ரீம் தயாரிப்பு நிறுவனம் மீதும் திருச்சூர் நுகர்வோர் மன்றத்தில் ஒரு வழக்கு 2012ல் போடப்பட்டது.[1]

புகார்தாரர் 2012 ஜனவரியில் இந்த விளம்பரத்தை பார்த்தாராம். 6 வாரங்கள் உபயோகித்தால், தலை முடி வளர்ச்சி அமோகமாக😀 இருக்கும் என்று இந்த நடிகர் விளம்பரப் படத்தில் சொன்னதை நம்பி , ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் இல்லைங்க.. .சொளையா 376 ரூபாய்

அய்யோ.. இந்த நம்பரே நல்லா இல்லையே😁

கொடுத்து க்ரீம் வாங்கி உபயோகம் பண்ணினா….ஒன்னும் நடக்கலை..அவர் வீட்டிலே, பிரெண்ட்ஸ் எல்லோரும் இந்த க்ரீம் போயி வாங்கினியான்னு கிண்டல் பண்ணினது தான் மிச்சம்.அதுனால ரொம்ப மன உளைச்சல் ஏற்பட்டுருச்சுன்னு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்டார்.

மேனனுக்கு சம்மன் போச்சு..அவரும் ஆஜராகி, சாட்சி சொன்னார்…என்னன்னு.?

"நான் அந்த க்ரீமை உபயோகிச்சதே இல்லை.எங்கம்மா செஞ்சு குடுக்கிற எண்ணையை தான் யூஸ் பன்றேன்"ன்னு😆

அதோடு நிறுத்தினாரா அந்த வெள்ளந்தி மனுஷன்?

"விளம்பரப் படத்திலே என்ன சொன்னாங்கனே எனக்கு தெரியாது. அது அந்த நிறுவனம் சொன்ன கதை."😂

பாவம் அவரு நினைச்சாராம் அந்த க்ரீம் தலைமுடி பராமரிப்புக்கு தான்…தலைமுடி வளர்ச்சிக்குன்னு தெரியாதுன்னு வேற சொல்லி..😃

ஆனால் அந்த விளம்பரத்திலே அவர் சொல்றாரு…"இந்த க்ரீமை உபயோகம் பண்ணினா, ஆறே வாரத்தில் மும்மடங்கு தலைமுடி வளர்ச்சி"🤣

"இது தவறான வாக்குறுதி கொடுத்து நுகர்வோர் எமாற்றப்பட்டிருக்கின்றனர்ன்னு தெரிவித்த நுகர்வோர் மன்றம் புகார்தாரருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்" னு தீர்ப்பு சொல்லியிருக்கு.

"ஆயுர்வேத பொருளோட விளைவுகளை பத்தி புகார்தாரர் கேள்வியெழுப்பலை. அது கொடுக்கிறதா சொன்ன முடி வளர்ச்சியை தான் கேள்வி கேட்டுருக்கார்..அதோட க்ரீம் உறையில், அச்சிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பூதக்கண்ணாடி கொண்டும் படிக்க முடியலை"ன்னு கருத்து தெரிவிச்சுருக்கு.

மேலும் இது போன்ற விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்துற மோசமான தாக்கத்தை குறிப்பிட்ட மன்றம், மீடியாவும் பத்திரிக்கைகளும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது.

கோர்ட்டு இந்த உத்தரவை போன 2019 செப்டம்பரிலேயே போட்டாலும் இப்பதான் அந்த தீர்ப்பு விவரம் கிடைச்சிருக்கு..

அதுல, இனி மேனன், எந்த நுகர்வோர் பொருளையும் உபயோகம் பண்ணாம அந்த விளம்பரத்திலே நடிக்கக்கூடாதுண்னு சொல்லிட்டு, அவரும் அந்த தயாரிப்பு நிறுவனமும் தலா ரூபாய் 10,000யும் அந்த க்ரீம் விற்ற " ஏ ஒன் மருந்துக் கடை" 😂

ரூபாய் 3000த்தையும் நஷ்டஈடா குடுக்கனும்னு உத்தரவு போட்டு இருக்கு.

இதுலே என்ன சிறப்புனா தவறான உறுதி கொடுக்கும் விளம்பரப் படத்திலே நடிக்கும் நடிகரும் பொறுப்பு ன்னு இப்ப தான் சட்டத்திருத்தமே செய்யப்பட்டிருக்கு..ஆனா அதுக்கு முன்னாலேயே இந்த நுகர்வோர் மன்றம் தைரியமா ஒரு முன்னோடி தீர்ப்பு குடுத்திருக்கு…👍

  1. ஏன்னா…அந்த தீர்ப்பு வழங்கின மன்றத்தில் இருந்தவர்களில் ஒருவர் பெயர் ஸ்ரீஜா 😂 

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

அடிக்குறிப்புகள்

கோச்சிங்க் சென்டர்கள் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிடக் காரணங்கள் என்ன?

 இன்றைய தேதியில், வேலைக்கு போகும் பெற்றோர்களுக்கு குழந்தையைக் கவனிக்க நேரம் இல்லை. பாடம் சொல்லிக் தர நேரம் இல்லை.அவர்களை மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு தயார் படுத்தும் திறனும் குறைவு.

இவை எல்லாம் தான் கோச்சிங் சென்டர்கள் கோலோச்சக் காரணங்கள்.

இவை தற்போது முற்றிலும் வியாபாரத்தளங்களாகி விட்டன.. அதனாலேயே இந்த கேள்வியை கூட எழுப்பினேன்..


இப்போது அது போன்ற கோச்சிங் சென்டர்களையும், "சேவை குறைபாடு" இருக்கும் போது, சட்ட வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது நுகர்வோர் மன்றம். இது நடந்துள்ளது பெங்களூரில்.

தன் மகளின் படிப்பிற்கு கோச்சிங் கொடுக்கவும், கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி கொடுக்கவும் ரூபாய் 70,000 கட்டணம் செலுத்தி, பெங்களூரில் உள்ள கோச்சிங் சென்டரில் icse சிலபசில் உள்ள ஓன்பதாம் வகுப்பில் சேர்த்து விடுகிறார் மனு சோளங்கி.

பிறகு?

கூடுதல் வகுப்புகள் நடத்தாதது மட்டுமல்ல, சாதாரண வகுப்புகளும் நடத்தப்படாதது,

வார தேர்வுகளுக்கு முன்னரே கேள்விகளை கொடுத்து விடுவது

யூனிட் தேர்வில் அனைத்து பாடங்ளிலும் மகள் பெயிலானது

இந்தக் குறைகளை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் சொல்லியும் சரியான நடவடிக்கை எடுக்காதது.

இந்த காரணஙகளால் மகளை இன்ஸ்டிடியூட்டில் இருந்து நிறுத்திய தந்தை சேவை குறைபாடு உள்ளதால் நிறுவனம் தன்னிடம் வசூலித்த கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று புகார் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிறுவனம், அது வணிக நோக்குடன் நடத்தப்படுவதல்ல என்றும் கல்வி கற்பிக்கும் சேவை செய்வதாகவும் எனவே நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்ய முடியாது என்றும், வெறும் 5000 ரூபாய் மட்டுமே திருப்பி அளிக்கவேண்டும் என்றாலும், நல்லெண்ண அடிப்படையில், மாணவி இரண்டாம் கட்ட பயிற்சிக்கு வராததால், அந்த கட்டணமான ரூபாய் 26.000தை திருப்பி கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தது.

அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம், நிறுவனத்தின் செயல் சேவை குறைபாடே என்று தீர்ப்பளித்து, மேற்சொன்ன கட்டணத்துடன் செலவுத்தொகை ரூபாய் 5000 சேர்த்து, செலுத்தும் நாள் வரையான வட்டியுடன் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

இது ஒரு நல்ல முன் மாதிரி தீர்ப்பு.

இந்த கோவிட் காலத்தில் பாடங்களை நடத்தாமலேயே கல்விக்கட்டணம் மட்டும் வசூலித்துக் கொண்டிருக்கும் நம் மாநில கல்வி நிறுவனங்கள் இனியாவது பொறுப்புடன் செயல்பட்டால் சரி.!! இல்லையெனில்…



அடிப்படை நுகர்வோர் உரிமைகள் யாவை?

 நாம் அனைவரும் நுகர்வோரே. .ஒரு பொருளை விற்பவரும் இன்னொரு பொருளின் நுகர்வோர் ஆகிறார்.

எனவே இந்த நுகரவோர் உரிமை குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை.

முன்னர் எந்த பொருளும் வாங்க கடைத்தெருவுக்கு போகவேண்டும் என்றால் ஒரு பையுடன் தான் கிளம்ப வேண்டும்.இப்போது அப்படியல்ல..காய் வீசிக்கொண்டு போய் சாமான் வாங்கிக்கொண்டு, அவர்கள் போட்டுத் தரும் பையோடு வரலாம்.

அதிலும் இப்போது அரசின் பிளாஸ்டிக் தடை என்று இலவச பை கொடுப்பதில்லை.. சிறிதளவு பணம் பெற்றுத் கொண்டு பையை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் கம்பனி விளம்பரப்படுத்தப்பட்ட பைக்கு நாம் பணம் கொடுத்து வாங்குவோம். இதில் என்ன கஷ்டம் என்றால், அவர்களுக்கு விளம்பரம் செய்ய நாம் ஏன் பணம் கொடுக்கவேண்டும் என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வெறும் மூன்று ரூபாய் தானே என்று நினைக்கின்றனர். அதை யாரும் கேள்வி கேட்டால், இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே வாய் மூடிக்கொண்டு , பணம் கட்டி பை வாங்கிக்கொண்டு நடையை கட்டுகின்றனர்.கேட்டவர் தான் அசிங்கப்பட்டது போல உணர்த்தப்படுவார்.

ஆனால் ஹைதராபாத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் இதை லேசில் விடுவதாக இல்லை.அவர் "மோர்" நிறுவனத்திற்கு பொருள் வாங்க சென்றபோது, பேப்பர் பைக்கு மூன்று ரூபாய் வசூலித்து விட்டார்கள்.அதுவும் "மோர்" நிறுவனத்தின் விளம்பரம் கொண்ட பை அது.

நுகர்வோர் நீதிமன்றத்தின் கதவை தட்டி அவர் தன்னை "மோர்" நிறுவனம், அதன் விளம்பர ஏஜெண்டாக மாற்றி விட்டது என்று குற்றம் சாட்டினார். அதுவும் தான் பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்த பிறகு தான் பைக்கு தனி கட்டணம் என்றனர் என்று மேலும் ஒரு குற்றச்சாட்டு.[1]

நிறுவனம் சும்மா விடுமா?. எந்த நுகர்வோரையும் பை வாங்க சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை, அது அவர்கள் விருப்பத்திற்கு விடப்படுகிறது, மேலும் இலவசமாக பை கொடுக்கவேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை என்றும் வாதிட்டனர்

என்ன மதி?!!

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், கீழ்க்கண்ட உததரவை பிறப்பித்தது.

  1. "பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் வாடிக்கையாளர்களுக்கு பையின் கூடுதல் செலவு குறித்து தெரிவிக்கப்பட வேண்டும், கட்டணம் செலுத்தும் கவுண்டரில் அல்ல: நுகர்வோர் ஆணையம்
  2. "கட்டண கவுண்டரில் கேரி பைகளின் விலையை தெரிவிப்பது, சந்தேகத்திற்கு இடமின்றி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் பிரிவு - 2 (1) (ஆர்) இன் கீழ்" நியாயமற்ற வர்த்தக நடைமுறை "என்று தெரிகிறது."
  3. மேலும் பல்பொருள் அங்காடி சில்லறை விற்பனை நிலையத்திலிருந்து வாங்கும் ஒரு நுகர்வோர், பைகளுக்கு கூடுதல் செலவு இருக்கும் என்பதையும், அவர் / அவள் கடையிலிருந்து ப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அந்த கேரி பைகளின் ம silent னமான விவரக்குறிப்புகள் மற்றும் விலை இருக்கும் என்பதையும் முன்கூட்டியே அறிய உரிமை உண்டு,
  4. மெகாஸ்டோர் , மனுதாரிட. வசூலித்த மூன்று ரூபாயை மனு தாக்கல் செய்த 2019 ஜூன் 1 முதல் அது கொடுக்கப்படும் வரை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்;
  5. மெகாஸ்டோர் புகார்தாரரை தங்கள் விளம்பரத்தின் கருவியாகப் பயன்படுத்தியதால், நிறுவனத்தின் லோகோவைக் கொண்ட கேரி பையின் விலைக்கு புகார்தாரருக்கு ரூ .15, 000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும..😀

இந்த உத்தரவு போல தமிழ்நாட்டில் யாரும் பெற்றார்களா என்று யாருக்கும் தெரியுமா?


அடிக்குறிப்புகள்


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...