சனி, 12 ஜூன், 2021

மகன், மகள் கையெழுத்து போடாமல் தந்தை சொத்தை விற்க முடியுமா?

 பரம்பரை சொத்து என்னும் போது .இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி, பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள், தாய் வயிற்றில் ஜனிக்கும்போதே அந்த சொத்தின் மீது உரிமை வந்து விடுகிறது.

அதனால் அந்த சொத்துகளை மாற்றம் செய்யும்போது, அவர்கள் சம்மதம் தேவைப்படுகிறது.

அவர்கள் மைனர்கள் எனும் போது அவர்கள் சார்பாக அவர் தந்தை அல்லது தாய் அந்த பரிமாற்றதிற்கு சம்மதம் தெரிவிக்கலாம். சொத்துப்  பரிமாற்றம் மைனர்களின் நலனுக்காக நடக்கிறது என்னும் அடிப்படையில் அவை ஏற்று கொள்ளப் படுகின்றன.

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்றால் மேஜராகி இந்த விவரம் தெரிந்தவுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

இதுவே மேஜராக இருக்கும் போது அந்த சொத்துப் பரிமாற்றத்திற்கு கண்டிப்பாக அவர்கள் கையெழுத்து தேவை.

நன்றி: Google.

ஆனால் தற்போது காணப்படும் நடைமுறை என்னவென்றால் சொத்தை தன் மகன் பெயரில் வாங் கும் தந்தை, சிறிது காலத்தில் அதை வாய்மொழி பாகப் பிரிவினையில் இன்னொரு மகனுக்கு அளித்து விடுகிறார்.சொத்து பரிமாற்றம் தான பத்திரம் மூலம் நடக்கிறது. இது பத்திர செலவை குறைக்க நடக்கிறது என்றாலும், சொத்துப்  பத்திரத்தின் படி தன் தாத்தா வாங்கிய சொத்தாக இருந்தாலும், தந்தையின் சுய சம்பாத்தியத்தில் வாங்கியதாக பத்திரத்தில் இருந்து அதை அவர் சகோதரருக்கு தானப் பத்திரம் மூலம் கொடுப்பதை அவர் பிள்ளைகளால் தடுக்க முடியவில்லை.

உறவின் முறையில் இப்படியும் ஒரு சிக்கல் வந்து விடுகிறது.

சரி...... மகன் மகள் கையெழுத்து இன்றி பரம்பரை சொத்தை தந்தை விற்கிறார் என்றால், என்ன தீர்வு?

நீதிமன்றத்தில் வழக்கு உடன் தொடர வேண்டாம்.

இருங்க… அவசரப்படாம நான் சொல்றதை கேளுங்க.

அங்குள்ள சமரச மையத்தை அதாவது Mediation Centre அணுகி, மனுவாக உரிய ஆவணங்களுடன் எழுதிக் கொடுத்தால், அவர்கள் இரண்டு தரப்பினருக்கும் அறிவிப்பு அனுப்பி, வரவழைத்து, சமரச தீர்வு காண்பார்கள்.அந்த தீர்வு ஏற்பட உங்களுக்கு மாவட்ட நீதிபதி துணை செய்வார்.

முக்கியமாக உங்களுக்காக வழக்கறிஞர்கள் வைக்க வேண்டிய தேவை இல்லை.

சமரசமாக தீர்வு ஏற்படுவதால் மேல்முறையீடு, கோர்ட்டு, கேஸ், அலைச்சல், பண விரயம் எதுவும் இல்லை.

இந்த சமரச மையங்கள் நடத்துவதற்கு தேவையான நிதி உதவியை அரசு செய்கின்றது.

Win-Win முறையில் இரண்டு தரப்பும் ஜெயிப்பதால் உறவிலும் சேதாரம் இல்லை.முயண்று பாருங்கள்.

ஜெயம் நமதே.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...