மக்களால் மாக்கள்ளே தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்த்து கொள்ள அறிய சந்தர்ப்பமாக இந்த மக்கள் நீதிமன்றங்கள் அமைகின்றன. இதனைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்றே சொல்லலாம். அதன் பயன்கள்:
- சமரசம் ஏற்படுமாயின் கட்டிய நீதிமன்ற கட்டணம் திருப்பி அளிக்கப்படுகின்றது
- மற்ற நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கை முடிப்பதால் நமது நேரம், பணம் மிச்சப்படுத்தப்படுகின்றது.
- இரண்டு தரப்பினருக்கும் இடையே சமரச தீர்வை அதுவும் அவர்களே எடுப்பதால் (அங்கிருக்கும் நீதிபதி அவர்களுக்கு தீர்வு ஏற்பட உதவி மட்டுமே செய்ய வேண்டும்) இரண்டு தரப்புமே வெற்றி பெற்ற நிலை ஏற்படுகின்றது.
- எனவே மேல்முறையீடு தடுக்கப்படுகின்றது.
தேனை குடிப்பதால் பட்டாம்பூச்சிக்கு நன்மை உண்டு பூவுக்கு? என்பீர்கள். ஒரே இடத்தில் இருக்கும் மலர் செடிக்கு மகரந்த சேர்க்கை நடக்க, பட்டாம் பூச்சிதானே உதவுகின்றது. அது போல தான் இரண்டு தரப்பினருக்கும் நன்மையே கிடைக்கின்றது.
