பொது நலன் வழக்கு, நம் நாட்டின் உதவியற்ற நபர்களுக்கு ஒரு சிறந்த வரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
பெரும்பான்மையான நீதிபதிகள் ஊக்குவித்துள்ளனர். அத்தகைய மனுக்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் பயனடைந்துள்ளனர்
பெரிய அளவில். அதிகார வர்க்கத்தினர் தமது கடமையை சரியான கண்ணோட்டத்தில் செய்யத் தவறும் போது பொது நலன் வழக்கு தான் மக்களை மீட்பதற்கு வருகிறது, நீதிமன்றங்களும் உண்மையான வழக்குகளில் போதுமான நிவாரணம். செய்கின்றன. அதே சமயம், சில அற்பமான மனுக்களும் தாக்கல் செய்யப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் நீதிமன்றங்கள் அத்தகைய மனுக்களை தள்ளுபடி செய்ய போதுமானவை
பெருமளவில், பொது நல வழக்குகளின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மிகவும் பயனுள்ள, மலிவான மற்றும் விரைவான தீர்வாக பொது நல வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பல சந்தர்ப்பங்களில், நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்பது ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றன. வேதனை அடைந்த தரப்பினருக்கு தானே முன்வந்து, உடனடி நிவாரணம் வழங்குகின்றன நீதிமன்றங்கள்..
அத்தகைய டைனமிக் வகை அணுகுமுறை சமூகத்தில் ஒரு நேர்மறையான சமிக்ஞையை அளிக்கிறது. இது மட்டுமல்ல ஒரு சாதாரண கடிதம் யார் அனுப்பினாலும், மாண்புமிகு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், தேவையான சமயங்களில் உடனடியாக அந்த கடிதத்தை ரிட் மனுவாக மாற்றி விசாரணைக்கு எடுத்து கொள்கின்றனர்.
அரசாங்கமோ அல்லது எந்தவொரு பொது அதிகார நிறுவனமோ, அதன் கடமையில் தோல்வியுற்றால், நீதிமன்றங்கள் தான் மீட்புக்கு வருகின்றன
ஆனால் துரதிர்ஷ்டமாக, பொதுநல வழக்குகள் என்ற போர்வையில், தன்னை முன்னிலைப்படுத்தி, பிரபலமாகிக்கொள்ள அதை ஒரு வாய்ப்பாக பயன்படூத்தும் போக்கு அதிகரித்து உள்ளது..அதனால், நீதிமன்றங்களும் அது போன்ற வழக்குகளில், நீதிமன்றத்தின் நேரத்தை வீனடித்ததாக சொல்லி, செலவு தொகை கட்ட சொல்லி தள்ளுபடி செய்கின்றனர்.
தொற்றுநோய் இருக்கும் போதிலும் மத்திய விஸ்டா திட்டம் முழு வேகத்தில் தொடர்கிறது. புகைப்படம்: ட்விட்டர்
சமீபத்தில், மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்றம், மத்திய விஸ்டா திட்டத்தின் கட்டுமானப் பணிகளை கொரானா காலத்தில் நிறுத்தி வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி ஆனதோடு, ரூபாய் 1 லட்சம் அபராதம் கட்ட சொல்லி உத்தரவானது.
இந்த முடிவை எதிர்த்து மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சோஹைல் ஹாஷ்மி மற்றும் அன்யா மல்ஹோத்ரா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ரூ .1 லட்சம் செலவு விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை கேட்டுள்ளனர்,
மான்புமிகு உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் அளித்த மேல் முறையீட்டில், "அரசாங்கத்தை கேள்வி கேட்க விரும்பும் குடிமக்கள் மீது, இது போன்ற உத்தரவுகள் போடப்படுவது , உண்மையான கவலைகளை எழுப்ப விரும்பும் குடிமகளை உறைய செய்யும்" என்றுள்ளனர்.
தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை கட்டுமானத்தை நிறுத்துமாறு மட்டுமே கோரியதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால் மாண்புமிகு உயர் நீதிமன்றமோ, இந்த விஷயத்தை "திட்டத்தையே நிறுத்த" விரும்புவதைப் போலவே நடத்தியது என்றும். உயர்நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் ஆதாரமற்றவை, அதன் அவதானிப்புகள் பாதகமானவை, என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு விரைவிலேயே விசாரணைக்கு வரவுள்ளது.
பொது நல வழக்குகளால் ஏற்பட்ட சட்டத்திருத்தங்கள்
- மக்கள் பிரநிதித்துவ சட்டம், 1951
இந்த சட்டம் இயற்றப்பட்ட சமயம், ஒருவர் எத்தனை தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தான் இருந்தது.
இதை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கில், ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என கேட்க, அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், நீதிமன்ற உத்தரவு கேட்டது.. அப்போதைய டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால் பெஞ்ச், ரெண்டு தொகுதியில் போட்டியிட அனுமதிக்கலாம் என்று உத்தரவு இட்டார்.அதன்படியே சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது.
2. தொழிலாளர் நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம்
இந்த நீதிமன்றங்கள் முதலில், சம்பந்தப்பட்ட செயலகத்தின் கீழ் தான் செயல்பட்டு வந்தது. இங்கு பணிபுரியும் நீதிபதிகளின் வருடாந்திர் ரகசிய அறிக்கையை, தொழிலாளர் துறை மற்றும் போக்குவரத்து துறை செயலாளர்களும் தான் எழுத வேண்டியிருந்தது. அந்த நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட துறை வழக்குகள் விசாரணையில் இருக்கும் போது, நீதிபதியின் பணி குறித்து அவர்கள் அறிக்கை தயார் செய்வது, வெகு கால நெருக்கடியாக நீதிபதிகளுக்கு இருந்தது. அது பொது நல வழக்கினால் மாற்றப்பட்டு, அந்த நீதிமன்றங்கள் உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
அதே போல திஹார் ஜெயில் சீர்திருத்தங்கள் என்று பொது நல வழக்குகளின் நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால் பொய்யான தகவலின் அடிப்படையிலோ அல்லது பொது நன்மை ஏதும் இல்லாத போது, போடப்படும் வழக்குகளில் அபரத்தம் மட்டுமல்ல, அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு அது போன்ற மனு போட தடை விதித்தும் சமீபத்தில் மான்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுகள் நினைவில் இருக்கலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக