புதன், 23 ஜூன், 2021

மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான அடிப்படை உரிமைகள் என்னென்ன?

 நம்முடைய அடிப்படை உரிமையை பாதிக்கூடிய வகையில் உள்ள காவல்நிலைய கைதும் காவலில் வைப்பது மற்றும் ஜாமீனில் விடுவிப்பது போன்ற அடிப்படை நடைமுறைகளைபற்றியும் அறுவர் பொலிசாரால் கைது செய்யபட்டால் அவருக்குள்ள அடிப்படை உரிமைகளை பற்றியும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்


கைது, காவல், பிணை

மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கைது நடவடிக்கையின் போது, காவல் அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துமாறு உத்தரவிட்டும் இன்று வரை அது முறையாக அமுலாக வில்லை. தற்போது பிரிவு 41 B ஆக கு.வி.மு.ச வில் இனைக்கப்பட்டுள்ளதின்படி, கைது செய்யும்போது, காவல் அதிகாரி தன்னுடைய பெயர் தெளிவாக தெரியுமாறு பார்த்துகொள்ளுமாறும், அதே இடத்தில் கைது குறிப்பானையை தயார் செய்தும், அதில் குடும்ப உறுப்பினர் ஒருவர் சான்றோப்பம் இடவேண்டும். என்றும் அவ்வாறு குடும்ப உறுப்பினர் அங்கு இல்லையேன்றால் கைது நடக்கும் இடத்தில் உள்ள ஒரு மதிப்பான நபரின் சான்றொப்பம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைது குறித்த தகவல் தெரியப்படுத்த வேண்டிய உறவினர் அல்லது நண்பரை தேர்ந்து எடுக்கும் முடிவை குற்றவாளியிடம் கொடுத்து, அவரிடம் கைது செய்த தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினர் கைது செய்யும் சமயத்தில் உடன் இருந்தால் அவரின் சான்றோப்பத்தை கைது குறிப்பாணையில் பெறவேண்டும். அதே போல், கு,வி,மு.ச பிரிவு 50A படி காவலை கைது செய்யப்பட்ட தகவலையும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தையும், அவர் குறிப்பிடும் நபருக்கு தெரியப்படுத்த வேண்டும். என வலியுறுத்’தியுள்ளது

ஆனால் நடைமுறையில் அந்த குடும்ப உறுபினருக்கு தகவல் அனுப்புவது என்பது ஓர வெற்று சம்ரதாயமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. குற்றவாளியின் தாய்க்கு தகவல் சொல்லப்பட்டது என குறிப்பிட்டிருந்ததை ஆராய்ந்த பொது, அது, குற்றவாளியின் கை பெசிக்கே ஒரு குறுந்தகவலாக காவல் அதிகாரியால் அனுப்பட்டுள்ளதும அந்த கைபேசியும் குற்றவாளியிடமே இருந்தது தெரியவந்தது. இது ஒரு தவறான நடைமுறையாகும்.


காவல் நிலயத்தில் அத்துமீறல் நடந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்

  1. காவலத்துறை மாவட்ட தலைவர் SP
  2. மனித உரிமை ஆணையம்
  3. நீதித்துறை நடுவரிடம் தனி புகார்
  4. உயர்நீதிமன்றத்தில் நீதி விசாரணை கோரி மனு

இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும்?

மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கீழ்கண்ட உத்தரவுகளை இட்டுள்ளது:

1. காவலில் இருக்கும் கைதி கோரினால், அவருடைய ஒரு நண்பர், உறவினர் அல்லது அவருக்கு தெரிந்தவரோ அல்லது அவர் நலத்தில் அக்கறை உள்ளவரோ அவருக்கு, கைது செய்யப்பட்டதையும் காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்தையும் தெரிவிக்க உரிமை உண்டு. 2. இந்த உரிமை குறித்து கைதி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன தெரிவிக்க வேண்டியது காவல் அதிகாரியின் கடமை ஆகும். 3. வழக்கு குறிப்பேட்டில் கைது குறித்த தகவல் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்று பதிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா?

கட்டாயமாக ஜாமீன் பெறும் உரிமை கைதிக்கு கீழ்கண்ட சமயத்தில் உள்ளது. நடுவர் முன்பு முதன்முதலாக கைது செய்யப்பட்டவர் ஆஜர்படுத்தப்பட்ட நாள் முதலாக 60/90 நாட்கள் முடிவடையும்போது காவலில் அடைக்கும் அதிகாரமும் முடிவடைகிறது. அந்த 60/90 நாட்கள் முடிவடைந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத போது, பிணையில் விடுவிக்கலாம். இந்த 167(2) பிரிவை கடைபிடிப்பது அவசியாமானது ஆகும். இந்த சட்டபிரிவு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே விசாரணையை எதிர்பார்த்து போலிசாரால் கைது செய்யப்பட்ட ஒருவர், தேவையில்லாமல் சிறையில் அலைகழிக்கபடவேண்டாம் என்பதற்கே. போலீசார் தங்களின் அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்வதை தடுக்கும் விதத்திலேயும் இந்த விதி கொண்டு வரப்பட்டது[1]. இது குடிமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வரப்பட்டதல்ல. நாட்டு நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான் கொண்டுவரப்பட்டது

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...