1. 1. யார் யார் மோட்டார் வாகன விபத்து சம்பந்தமான இழப்பீட்டை கோர
முடியும்?
1)
விபத்தில் காயமடைந்தவர்
2)
சேதமடைந்த சொத்தின் உரிமையாளர்
3) விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால் ,இறந்தவரின் சட்ட முறைப்
பிரதிநிதிகள் (வாரிசுகள்)
இழப்பீடு கோரும் பொருட்டு அவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒன்று சேரா விட்டால்,
அவர்களில் ஒருவர் மட்டுமே, அனைவர் சார்பில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யலாம்.
அவருடன் சேர்ந்து மனு தாக்கல் செய்யாத சட்ட முறைப் பிரதிநிதிகள் மனுவில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும்.
4) காயம்பட்டவர் அல்லது இறந்தவரின் சட்ட முறைப் பிரதிநிதிகளால் உரி முறையில் அதிகாரம் அளிக்க்கப்பட்ட ஒரு முகவர்
2. எந்த நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படவேண்டும்?
1) 1) விபத்து நடந்த இடத்தை தன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மோட்டார்
விபத்து கோரிக்கை தீர்ப்பாயம்.
இதை உச்ச நீதிமன்றமும் சமீபத்திய ஒரு வழக்கில் உறுதி
செய்துள்ளது.
2) 2) இழப்பீடு கோருபவர் தொழில் நடத்துகின்ற அல்லது வசிக்கின்ற இடத்தை தன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயம்
3) எதிர் மனுதாரர் வசிக்கின்ற அல்லது தொழில் நடத்துகின்ற இடத்தை தன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயம்
இதற்கென்று உள்ள சிறப்பு தீர்ப்பாயம் அந்த மாவட்டத்தில்
அமைக்கப்பட வில்லை எனில், அங்குள்ள சார்பு நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யலாம்.
3. மோட்டார்
விபத்து கோரிக்கைத் தீர்பாயத்துக்கான அதிகாரங்கள் என்ன?
மோட்டார் வாகன விபத்து சம்பந்தமான இழப்பீடு கோரிக்கையை பரிசீலிப்பதற்கான அதிகாரம், மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்பாயத்துக்குத் தான் உள்ளது.
அந்த தீர்ப்பாயம், உரிமையியல் நீதிமன்றத்தின்
அதே அதிகாரத்தை கொண்டது. அதனால் எந்த உரிமையியல்
நீதிமன்றமும், மோட்டார் விபத்து கோரிக்கைத்
தீர்பாயத்தில் நிலுவையிலுள்ள நடவடிக்கைகளை ஒரு ஏவுகட்டளை அதாவது ‘ஸ்டே; உத்தரவு பிரப்பிப்பதன்
மூலமாகவோ அல்லது இதர வழியிலோ நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை.
மனுவின் கோரிக்கையின் பேரில் விசாரணை நடத்தி,,இரு
தரப்பினருக்கும் தங்கள் தரப்பை முன்னிலைப்படுத்த தகுந்த சந்தர்ப்பம் அளித்து, நியாயம் என கருதும் இழப்பீடு தொகையை தீர்ப்பாயம்
நிர்ணயம் செய்யும்.
இந்த விசாரணை 'சம்மரி ப்ரோசீஜர்' எனப்படும் சுருக்கு நடவடிகயாக இருக்கும். அதே சமயம், விபத்து ஏற்படுதியர்தர்கான காரணம் தான் தன என்று விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரோ அல்லது ஓட்டுநரோ ஒத்துக்கொண்டால், நஷ்ட ஈட்டு தொகையை மனுதாரருக்கு கொடுத்து விட முடியாது.
பிரிவு 166 ன் கீழ் தாக்கல் செய்யும் மனுவில் விபத்தை ஏற்பட்டதற்கான காரணம் வாகன ஓட்டுனர் என்பதையும் அந்த அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவினால் தான் தனக்கு சேதம் ஏற்பட்டது என்பதையும் அதில் இறந்தவரின் வாரிசு என்றால், மரணம் அந்த விபத்தின் காரணமாக தான் ஏற்பட்டது என்பதையும் மனுதாரர் தான் நிரூபிக்க வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அந்த தொகையை யாரால், யாருக்கு கொடுக்கப்படவேண்டும்
என்பதையும் தீர்ப்பாயமே நிர்ணயம் செய்யும்.
இழப்பீட்டு தொகையின் பேரில் கோரிக்கைமனு தாக்கல் செய்த தேதியிலிருந்தே குறிப்பிட்ட வீதத்தில் வட்டி வழங்கியும் உத்தரவிடலாம்’.
4. இழப்பீடு
பெற கோரிக்கை மனு தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் உள்ளதா?
மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988
ல் கால வரம்பு பற்றி பிரிவு 166(3) ல் குரிபிடப்படிருந்தது. மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம், 1994ல் அந்த பிரிவு நீக்கப்பட்டது. தற்போது அதற்கான கால
வரையறை ஏப்ரல்1,2022 முதல் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி விபத்து நடந்த ஆறு மாதத்திற்குள் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட
வேண்டும்.
அதே சமயம், விபத்து நடந்த இடத்தை அதிகார எல்லைக்குள்
கொண்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி விபத்து நடந்தவுடன், அது சம்பந்தப்பட்ட முதல் தகவல்
அறிக்கையோ அல்லது அறிக்கையோ தயார் செய்ததும், அதை 3௦ நாட்களுக்குள் அதிகார வரம்பு கொண்ட
தீர்பாயத்திற்கு பிரிவு 158(6) ன் படி அனுப்ப வேண்டும்.
அவ்வாறு அறிக்கை ஆறு மாதத்திற்குள் பெறப்பட்டால்,,
அதையே விபத்து இழப்பீடுக்கான கோரிக்கை மனுவாக
கருத முயும் என்பதால், எந்த கால வரையறையும் இல்லை என்று சமீபத்தில் மாண்புமிகு
சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
அதே போன்று இன்னொரு வழக்கில், ஆறு மாத கால வரையறைக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்று சென்னை மோட்டார்
விபத்து கோரிக்கை தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்ட மனுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்
முறையீட்டில், நீதியரசர் லக்ஷ்மி நாராயணன், தீர்ப்பாயத்தால் பெறப்பட்ட முதல் தகவல்
அறிக்கையையே கோரிக்கை மனுவாக கருதலாம், என்பதால், பின்னர் விபத்தால் பாதிக்கப்பட்டவர்
தாக்கல் செய்யும் கோரிக்கை மனுவை, உடனே வழக்கை கோப்பிற்கு எடுக்குமாறு நீதிமன்றத்திற்கு
அளிக்கப்பட்ட நினைவூட்டலாக தான் கொள்ள முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
ஏப்ரல் 1, 2௦22க்கு பிறகு , விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலேயே
மனு தாக்கல் செய்வதற்கான கால வரையறை குறித்த பயம் ஏதுமின்றி நஷ்டஈடு கோருபவர் இருக்கலாம்”
என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
5. விபத்து சம்பந்தமான அறிக்கையை தீர்ப்பாயம் தானே மனுவாக
கோப்பில் எடுக்க முடியுமா?
காவல் துறையால் அனுப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பெற்ற தீர்ப்பாயம், அதையே இந்த
சட்டப்படி இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவாக கருதி கோப்பில் எடுத்து கொள்ள
வேண்டும்.
6. யார் இழப்பீட்டு தொகையை கொடுக்க கடமைப்பட்டவர்கள்?
1) வாகன உரிமையாளர்
2)
வாகன ஓட்டுனர்
3) மோட்டார் வாகனம் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனம்
இவர்கள் மூவரும் கூட்டாகவும், தனித்தனியாகவும் இழப்பீடு கொடுக்க கடமைப்பட்டவர்கள்.
பொதுவாக இழப்பீடுத் தொகையை , விபத்து நடந்த சமயம், அந்த வாகனத்திற்கு
காப்பீடு இருப்பின், காப்பீட்டு நிறுவனம் உரியவருக்கு கொடுத்துவிடும். அந்த காப்பீடு
நிபந்தனைகளுக்கு எதிராக வாகன உரிமையாளர் செயல்பட்டிருந்தால்,
அவரிடமிருந்து அதை வசூல் செய்து கொள்ளும். உதாரணத்திற்கு, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபரையோ,
அல்லது மைனர் பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதித்தோ , அல்லது சரக்கு வாகனங்களில் ஆட்களை
ஏற்றி கொண்டோ அல்லது அனுமதிக்கப்பட்ட எடைக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிகொண்டோ ..இப்படி
இன்சூரன்ஸ் பாலிசி நிபந்தனைக்கு எதிராக செயல்பட்டிருந்தால் அந்த வாகன உரிமையாளரிடமிருந்து
காப்பீடு நிறுவனம் தான் செலுத்திய தொகையை வசூலித்து கொள்ளலாம்.
அதே சமயம், அவர்கள் வாகன உரிமையாளர் நிபந்தனைக்கு எதிராக நடந்துக்கொண்டார்
என்பதற்காக நஷ்ட ஈட்டை தாங்கள் செலுத்த முடியாது என்று கோர முடியாது. அவர்கள் கூற்று
நியாயமாக இருக்கவேண்டும். மேலும் அதை நிரூபிக்க வேண்டும். உதாரணமாக உச்ச நீதிமன்றத்தின்
முன் வந்த வழக்கு ஒன்றில் அந்த காப்பீடு நிறுவனம், வாகன உரிமையாளர் ஓட்டுனர் உரிமத்தை
சரியாக பரிசீலிக்கவில்லை என்று கூறி, தாங்கள் நஷ்ட ஈட்டை செலுத்த முடியாது என்றது.
வெறுமனே அந்த வாதத்தை முன் வைக்காமல், அதை நிரூபித்தால் மட்டுமே, காப்பீடு நிறுவனம்
வாகனத்தின் உரிமையாளரிடமிருந்து அந்த நஷ்ட ஈட்டு தொகையை வசூல் செய்ய முடியும் என்றது.
பொதுவாக காப்பீடு நிறுவனகங்ளே நேரிடையாக விபத்தினால்
பாதிக்கப்பட்ட நபர் மனு செய்யும் போது அது குறித்து விசாரித்து இழப்பீடு தொகையை வழங்குகின்றன.
ஏனெனில் ரூபாய் 10,000/-க்கு குறைவான நஷ்டஈட்டு தொகைக்கு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்ய முடியாது.
நீதிமன்றத்தில் தொடரப்படும் மனுவுக்கான நஷ்ட
ஈட்டு தொகையை விரைவாக பெற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும் சமயத்தில்
மனு செய்து, இரு தரப்பு ஒத்திசைந்து முடிவு செய்யும் தொகையை நஷ்ட ஈடாக பெறலாம்.
(தொடரும்)
.