தாத்தா A விற்கு மூன்று பிள்ளைகள் B, C, D என்று வைத்துக் கொள்வோம் அவர்கள் சரிசமமாக பிரித்துக் கொள்ள உயில் இருக்கும் போது, ஒரு பிள்ளை B இறந்தால்…அவர் பிள்ளைகள் E, F என்று வைத்துக் கொள்வோம்.
(பின்னே நான் கணக்கு படித்தேன் என்று எப்படி ஞாபகப்படுத்துவது 😂)
தாத்தா A
/ | \
B C D
/ \ | |
E F C D
இந்த இறந்த மகன் B க்கு கிடைக்க வேண்டிய பாகத்தை அவர் பிள்ளைகள் E,, F தங்கள் சித்தப்பா C மற்றும் பெரியப்பா D யோடு சேர்ந்து பெற வேண்டும்.
அவ்வாறு கொடுக்காமல் உயிருடன் இருக்கும் மகன்கள் மட்டும் பிரித்துக் கொண்டால், அது செல்லாது.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
- பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அரசு அலுவலகங்களில் உங்கள் ஆட்சேபனை மனுவை உயில் நகல் இருந்தால் அதனுடன் சேர்த்து கொடுங்கள். அதன் மூலம், தாத்தாவின் சொத்து உயிலுக்கு எதிராகப் பெயர் மாற்றம் பெறாது.
- அடுத்து, சமரச மையத்திலும் மனு கொடுங்கள். அவர்கள் இரண்டு தரப்பையும் கூப்பிட்டு சமரசமாக தீர்வு காண்பார்கள்.
முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக