மோட்டார் வாகன சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோட்டார் வாகன சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கிடைக்கும் பேரானந்தம் பி.எம்.டபிள்யூ கார் இயக்கினாலும் கிடைப்பதில்லை, அது ஏன்?

 வண்டியோட்டுவதில் அவனை பெரிய ஜித்தன் என்று தான் அவன் நண்பர்கள் சொல்வார்கள்..

எத்தனை நண்பர்களிடம் கடன் வாங்கி வண்டியோட்டி அதில் வித விதமாக சாகசம் செய்வதில் அவனுக்கு நிகர் இல்லை தான்.. ஆனால் என்ன. ...அப்பாவிடம் கேட்டு கேட்டு பார்த்தும் அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தர அவர் ஒத்து கொள்ளவே இல்லை.

அவனுக்கு பொறுப்பே இல்லையாம். வேகமாக ஓட்டுகிறானாம்..இப்படி ஏதோதோ சொல்லி தட்டி கழித்து கொண்டே வந்தார்.

கடைசியாய் ஒரு வழியாய் அவரை சமாளித்து, கெஞ்சி, கொஞ்சி, வண்டி வாங்கியாகிற்று.

அதுவும் அவன் ஆசைப்பட்ட மாதிரியே....

இந்த வண்டி தான் வேனும்னு  வாங்கித் தரச் சொன்னால் அப்பா அதற்கு கூட ஒரு  விமர்சனம் செய்தார்..."இதென்னடா ஏதோ மாடிக்கு ஏறுற மாதிரி இருக்கே"ன்னு

எப்படியோ வாங்கியாயிற்று.//

இன்று தான்  முதல் முதலாக வண்டியை எடுத்து கொண்டு கல்லூரிக்கு போகப் போகிறான்.

ஆனந்த கனவுகளில் நுழைந்தபடி, வண்டியை இயக்கினான். வழக்கமான பாதையில் வந்து கல்லூரியை நெருங்கும் சமயம் தான் அவளைப்  பார்த்தான்..

அவளும் அதே கல்லூரி தான். எத்தனையோ நாள் அவள் முன்னால,  வண்டியை ஒட்டிக் கொண்டு வேகமாக போனாலும், அவள் அவனை கவணித்ததாகவே தெரியவில்லை. மற்ற பென்கள் எல்லாம் இவன் வண்டியில் அமர்ந்து முன் சக்கரத்தை தூக்கியபடி வண்டியோட்டுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து நிற்கும்போது அவள் மட்டும் அதை பார்த்தது போலவே இருக்காது.

இன்று எப்படியும் அவளை திரும்பிப்  பார்க்க வைத்து விடுவது என்ற முடிவுடன் கியரை முறுக்கினான். வண்டி வேகமெடுத்தது...சரியாக அவள் அருகில் நெருங்கும்போது. வண்டியின் முன்சக்கரத்தை தூக்க எத்தனித்த போது...ஐயோ ... ஏதோ தவறாகி விட்டதே என்று இவன் நினைக்கும்போதே...பெரும் சத்தத்துடன் வண்டியுடன் சேர்ந்து இவன் தூக்கி வீசப்பட்டான்...

அவள் அனிச்சையாய் திரும்பி பார்த்தாள்...

மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது கிடைக்கும் த்ரில் இருக்கே ...யாரும் செய்யத் தயங்குவதை நாம் செய்கிறோம் என்பதும் அது எல்லோரின் கவனத்தை கவர்வதும்......அது தான் இளையவர்களை கவர்வது.

அதுவும் இந்த சென்னையில் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த சாலையில்,சர்... புர்ர்ரென்று இவர்கள் அதிவேகமாக புகுந்து ஓட்டிப் போவதை பார்க்கும் போது உண்மையிலேயே பயமாக இருக்கும். பார்க்கும் நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. அதெப்படி ஓட்டும் இவர்களுக்கு இருப்பதில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறேன். 

"இளங்கன்று பயமறியாது" என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை.

நானும் முன்னர் வண்டியை வேகமாக ஓட்டியிருக்கிறேன் தான். இப்போது குறைத்திருக்கிறேன்.. வேறு எதற்கு...அடிபட்டால் ஏற்படும் விளைவை எண்ணி...😇

அதுவெல்லாம் இவர்களுக்கு தெரியாமலா இருக்கும்...இருந்தும் ஓட்டுகிறார்கள் என்றால்...அதி வேகமாக  காற்றை கிழித்து கொண்டு ஓட்டும்போது, முகத்தில் அறையும் அந்த காற்று....அது தான் அவர்களுக்கு பேரானந்தத்தை கொடுக்கிறது போல...

அது ஒரு வித மாதிரியான போதை மட்டுமல்ல. அவர்களின் இயல்பே அதுவாகத் தான் இருக்கும். 

உண்மை தான்...

அந்த விளையாட்டு(??) வீரர்கள் எல்லாரின் ஜாதகத்தை பார்த்தால் அவர்கள் மிதுனம், துலாம், கும்பம்  காற்று ராசிகள் லக்கினமாகவோ ராசியாகவோ கொண்டவர்களாக இருப்பார்கள்.

நமக்கே தெரியும்.....

பஞ்ச பூதங்களை கிரகங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கபட்டுள்ளனது. மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள்,

இந்த பஞ்சப் பூதங்களை உள்ளடக்கிய நம் உடலில் நம் பிறந்த லக்கினத்திற்கேற்ற பூதமே ஆட்சி அதிகம் புரியும் என்பதும் உண்மை தானே..

அதனால் தான் காற்று இராசியான மிதுனம், துலாம், கும்பம் ராசிகளை இலக்கினமாக கொண்டவர்களுக்கு காற்றில் வேகமாக போக அல்ல... பறக்கப் பிடிக்கும்.

நான் சிம்ம லக்கினம் . நெருப்பு இராசி.  மற்றவர்கள் எல்லாம் "ஐயோ கொதிக்குதே|ன்னு சொல்லிப் பிடிக்க முடியாமல் காபி டம்ளரை கீழே வைத்து விட்டு நிமிர்வதற்குள் நான் குடித்தே முடித்து விட்டு கீழே வைப்பேன்..நெருப்பு கோழி போல...😅

அந்தந்த  இலக்கினங்களின் குணாதிசயம் இயல்பாகவே நமக்கு அமைய பெற்றிருக்கும்.

கார் எந்த விலை உயர்ந்ததாக இருந்தால் என்ன...அதை  ஓட்டுவதை விட மோட்டார் சைக்கிளில் அப்படி ஓட்டுவது தான் இந்த வகை ஆட்களுக்கு பிடிக்கும் என்றேனே..

அது மற்றவரின் கருத்தை கவரவேண்டும் என்பதற்காக சைலென்சரை எடுத்து விட்டு விடுவது, வினோதமான ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பொருத்திக்கொள்வது, ஜிக் -ஜாக்கென்று ஓட்டுவது என்று யாரை கவர்கிறார்கிலோ இல்லையோ, போக்குவரத்து போலிசாரின் கண்ணில் படத் தவறுவதில்லை!!

ஆனால் ..இது போன்ற சிறு சிறு தவறுகள் தானே என்று விளையாட்டிற்காக செய்வது, ஏதேனும் ஒரு சாலை விபத்தில், அது ஒரு உயிரின் பலி கொள்வதில் கொண்டு போய் நிறுத்தும்.  எப்போது ? 

ஜாதகத்தில் ஆறுக்குடைய  அதிபதி சுபத்துவமோ சூட்சம வலுவோ இல்லாது இருக்கும்போது , அதன்   அல்லது அதனுடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் தசா புத்தி நடந்துக் கொண்டிருக்கும்போது ..

பழைய காலம் போலில்லை...நான் ஒட்டி மாட்டிக்கொண்டால், வேறு ஒருத்தரை கொண்டு போய் நிறுத்திவிடலாம் என்பதற்கு.  எல்லோர் கையிலும் காமிராவுடன் கூடிய போன் இருக்கிறதே!! அத்தோடு ஆறாம் அதிபதி தன் காரகத்துவமான வம்பு, வழக்கு என்று சிவப்பு கட்டிடத்திற்கு நம்மை இனிதே அழைத்து செல்வார்!!

அப்போதும் பேரானந்தம் இருக்குமா??

வெள்ளி, 2 ஜூலை, 2021

சாலையில் விபத்து நடந்ததை பார்க்கும்போது, உடனே நீங்கள் செய்வது என்ன?

 எழுத்தாளர் சமுத்திரத்தை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் .சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றினார்..

அவர் 2003 இல் ஒரு சாலை விபத்தில் சிக்கி ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்

வேதனை என்னவென்றால் அந்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு பெரும் தொகையை சொல்லி அதை உடனடியாக கட்டினால் தான் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தீர்மானமாகச் சொல்லி விடுகிறது அந்தப் பணத்தை ஏற்பாடு செய்து கட்டி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள மேற்கொள்வதற்கு அந்த பொன்னான நேரம் அழிக்கப்படுவதால் அவர் காலமாகிறார்

பிரபலமானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதரின் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம் .

உண்மையிலேயே கொரானா சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை, கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.. ஏனென்றால் இந்தியாவில்வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பேர் இந்த சாலை விபத்தால் இறப்பார்கள் என்று புள்ளிவிவரம் காட்டுகிறது

இதில் முக்கால்வாசி பேர் அந்த பொன்னான நேரம் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் தான் தங்களுடைய உயிரை இழக்கின்றனர்

விபத்து நடந்த உடனேயே அந்த வண்டியின் ஓட்டுநர் உயிருடன் இருந்தால், விபத்தில் காயமடைந்தவர்கள் இறந்தவர் என்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவதால் தான் இது போன்ற துர் மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன.

இந்த பொன்னான நேரம் என்று சொல்கிறார்களே அது என்ன என்றால் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அதாவது 60 நிமிடத்திற்குள், ஒரு மருத்துவமனைக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவரை அழைத்து சென்றால், அவருடைய உயிரை காப்பாற்றி விடலாம் என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர் .

.சாலையில் விபத்து நடக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்வதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர் ஆம்புலன்ஸ் வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது அப்படியே துரிதகதியில் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று மருத்துவம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தாலும் அந்த மருத்துவமனை சிகிச்சையை  உடனடியாக தொடங்குவதில்லை அங்கு சிகிச்சைக்கு உண்டான கட்டணத்த்தில் முன் பணத்தை கட்டுமாறு நிர்ப்பந்திக்கிறது இதற்கான பணத்தை ஏற்பாடு செய்வதிலும் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை இன்னும் சீர்கெடுகிறது

இதற்காக தான், இது போன்ற உடனடி மருத்துவ செலவுகளை  மோட்டார் வாகன சட்ட திருத்த சட்டத்தின் பிரிவு 162ல், இந்தியாவில் காப்பீடு தொழில் நடத்தும் காப்பீடு நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்ககப்பட்ட திட்டத்தின் கீழ் அனுமதிக்க சொல்கிறது.

இதன் படி, மத்திய அரசோ மாநில அரசோ, இதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யப் செய்யவும் வேண்டும்

தமிழ்நாட்டில் இது போன்ற திட்டம் எதுவும் மாநில அரசு கொண்டு வந்ததாக விவரம் தெரியவில்லை ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் இது போன்ற ஒரு திட்டம் "தாதாசாகிப் விபத்து காப்பீடு திட்டம்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன்படி விபத்து நடந்த 72 மணி நேரத்திற்குள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தால் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளுக்கு அந்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது .

இது மகாராஷ்டிராவில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்ல விபத்தில் காயமடைந்தவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி , விபத்து நடந்த இடம் மகாராஷ்டிரா எல்லைக்குள் நடந்து இருப்பின் அதற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் இலவசமாக மேற்குறிப்பிட்ட நிதி அளவிற்குள் இலவச சிகிச்சை செய்யப்படும் .இது விபத்தினால் பாதிக்கப் அடைந்தவரின் உயிருக்கு தேவையான அந்த பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது என்ற கருத்தில் கொண்டு வரப்பட்டது ஆனால் இது மற்ற விபத்துகள் அந்த தொழிற்சாலை விபத்து ரயில் விபத்து போன்றவற்றில் காயமடைந்தவர்களுக்கு  பொருந்தாது

சரி.. விபத்து நடந்தவுடன் விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது?  என்று கேட்டால் சாலையில் மோட்டார் வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்படின் அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நபரோ அல்லது அந்த வாகனத்தின் உரிமையாளரோ தான் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு ஏற்படுகிறது .அவர்கள் மருத்துமனைக்கு செல்ல மறுக்கும் பட்சத்திலேயே இவர்களுக்கு அந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

அடுத்து விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விபத்து நடந்த தகவல் குறித்து தெரிவிப்பதும் இந்த வண்டியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் கடமையாகவும் ஆகிறது.

பிரிவு 132 ன்படி, விபத்து நடந்தவுடன் வண்டியை நிறுத்தி விட்டு, மேற்கொண்டு செயல்முறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அவர்.

இல்லை என்றால் அதுவும் ஒரு கேஸ் ஆகிவிடும்!!

அந்த வண்டியின் காப்பீடு விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டியது வேண்டியது அவருடைய கடமை என்று மோட்டார் வாகன சட்டத்தில் தெளிவாக உள்ளது.

வண்டி ஓட்டுனருக்கு மட்டும் தானா கடமையாக்கப்பட்டுள்ளது?

இந்த சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்யவேண்டியது அந்த மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவருடைய கடமையாகும்.

எந்த சட்டப்பூர்வமான நடைமுறை முடியும் வரை காத்திருக்காமல், உடனடியாக மருத்துவ சிகிச்சையை காயமடைந்தவருக்கு செய்ய தொடங்குவது, அவருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கடமையாகும் .

போலீஸ் வந்த பிறகுதான் மருத்துவ சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்று சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குவதற்கு தயங்குகின்றனர் என்ற செய்திகள் வருகின்றன ஆனால் பண்டிட் கட்டாரா எதிர் இந்திய யூனியன் வழக்கில்,https://indiankanoon.org/doc/498126/

உச்சநீதிமன்றம் நீண்ட காலத்திற்கு முன்பே காயமடைந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் தான் குற்றவியல் சட்டம் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

"காயமடைந்த நபருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் போது , ஒரு மருத்துவ நிபுணரை அழைத்து, கேட்டுக் கொள்ளும்போது அவருக்கு எந்த சட்டரீதியான தடையும் இல்லை. நபரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிக்கு தான், மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, காவல்துறை மற்றும் பிற குடிமக்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். காவல்துறையினரின் வருகைக்கு முன்னர், காயமடைந்த நபர்கள் மற்றும் விபத்து வழக்குகளில் மருத்துவர்கள் உடனடியாக செயல்படுவதைத் தடுப்பது போல, இந்திய தண்டனைச் சட்டம் / குற்றவியல் நடைமுறை / மோட்டார் வாகனச் சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை, "

சரி..பொதுவாக விபத்தை பார்க்கும் பலர், விபத்தில் காயம்பட்டவருடன் மருத்துவமனைக்கோ போலீஸ் நிலையத்துக்கோ செல்ல நினைக்காததன் காரணம்?

போலிஸ் துன்புறுத்தல், மருத்துவமனைகளில் காக்க வைக்கப்படுதல் மற்றும் நீண்டகால சட்ட முறைகள் இதற்கு பயந்து காயமடைந்த விபத்துக்குள்ளானவர்களுக்கு சாலையில் உதவ தயங்குகின்றனர்.

ஆனாலும் சிலர் இருக்கிறார்கள்.. இடர்ப்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் என்று பிறவி எடுத்தது போல இருப்பர். நம்பிக்கையுடன், அவசரகால மருத்துவ பராமரிப்பு அல்லது விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி அல்லது அத்தகைய பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, என்று தானாக முன்வந்து, எந்தவொரு வெகுமதியையும் அல்லது இழப்பீட்டையும் எதிர்பார்க்காமல் செய்வர்.

இப்படிப்பட்டவர்கள் குறைந்து வருகிறார்கள்..ஏனென்றால் பிள்ளைகள் அப்படி சிறுவயதிலேயே சூதனமா இருக்குமாறு வளர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையை மாற்றவும், இது போன்ற நபர்களை பாதுக்காகவும், ஒரு சட்ட கட்டமைப்பை நிறுவி, பாதகமான விளைவுகள் அல்லது துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் செயல்பட அதிகாரம் பெறவும்,, அவர்களை காவல்துறை அல்லது வேறு எந்த அதிகாரத்தின் கைகளிலும் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்களை அங்கீகரிப்பதன் வேண்டியதன் அவசியத்தை உச்சநீதிமன்றமும் . மார்ச் 2016 இல் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், https://indiankanoon.org/doc/79865001/ வலியுறுத்தியது.

அதன் பிறகு , இந்த சட்டத்தில் பிரிவு 134 (ஏ) 2019 ஆம் ஆண்டில சேர்க்கப்பட்டது.

01.10.2020 மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019

இது அப்படிப்பட்டவர்கள் பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது,  அதன்படி, 

ஒரு மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவரின் காயம் அல்லது மரணம், இத்தகைய நபர்களின் செயல்பாட்டில் அலட்சியம் அல்லது அவசர மருத்துவ அல்லது மருத்துவ அல்லாத பராமரிப்பு அல்லது உதவியை வழங்கும்போது செயல்படத் தவறியதன் விளைவாக ஏற்பட்டது என்று எந்தவொரு சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், எந்தவொரு காயம் அல்லது இறப்புக்கும் பொறுப்பேற்காது.

.அவர்களை கேள்வி கேட்பது, அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது போன்ற விஷயங்களுக்கு மத்திய அரசு விதிகள் விதிக்கும் ஒரு திட்டமும் , சாலை-பாதுகாப்பில் உதவுபவருக்கு விருதுகளை வழங்கவும் திட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது..💐

நம் மாநில அரசின் தரப்பில்?!!

ஒன்றும் சொல்ல முடியாது...

.எஜமானன் எப்படியோ அப்படி தான் அவன் அடிமையும் இருப்பான்!

நாம் தானே நம்மை ஆளுபவரை தெரந்தெடுக்கிறோம்.?

மனிதன்.பொதுவாக சுயநலம் கொண்டவன் தான். .தனக்கு, தன் குடும்பத்திற்கு என்று மட்டும் பார்ப்பவன் தான்..ஆனால் சில சமயங்களில், அவனுக்குள்ளிருந்து ஒரு மூன்றாவது நபர் வெளியே வருவான்.தனக்கு துன்பம் வந்தாலும், பிறருக்காக உதவ முன்வருவான்.அவன் எந்த அளவிற்கு வெளியே அடிக்கடி தலைக்காட்டுகிறானோ , அப்போது தான்.அவன் போகும் பாதை சரியானது எனலாம்.

"எங்கே பாதை தொடங்கும்..

அது எங்கே எப்படி முடியும்?".

என்று குழம்பவே தேவையில்லை!!

ஏனென்றால், அவனுடன் சேர்த்து கட்டி செல்வது.எது என்று தான் அவனுக்கு தெரியுமே…

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

…அவ்வையார்

சனி, 19 ஜூன், 2021

மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈட்டு பணத்தை நீதிமன்றத்திலிருந்து பெறுவது எப்படி?

 ஒரு பொது இடத்தில் மோட்டார் வண்டியினால் விபத்து நடக்கிறது. அதில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு போகிறார்கள்.. போலீசார் வருகிறார்கள். வாக்குமூலம் பெறுகிறார்கள்.  திடீரென ஒருவர் வருகிறார்...மருத்துவ செலவுகளை தானே முன்வந்து பார்த்துக் கொள்கிறார். தான் கோர்ட்டில் கேஸ் போட்டு, விபத்துக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவதாக சொல்லி, சில ஏற்பாடுகள் செய்கிறார். அதன் பிறகு பல வருடம் கழித்து, ஒரே ஒரு தடவை மட்டும் கோர்ட்டுக்கு வர சொல்கிறார்..பிறகு பல மாதம் கழித்து, கேஸ் முடிந்து விட்டது என்கிறார். தன் 'ஃபீஸ்' என்று கழித்துக் கொண்டு, .நஷ்ட ஈடு தொகை என்று அவர் கொடுத்ததை வாங்க வேண்டியிருக்கிறது..

எவ்வளவு தொகைக்கு மனு போடப்பட்டது தெரியாது.. எவ்வளவு தீர்ப்பாகியது ..அதுவும் தெரியாது..

80 களின் வாக்கில், மோட்டார் வாகன விபத்து இழப்பு தொகை உத்தரவு பெற்றாலும், அது முழுதும் உரியவர்களுக்கு போய் சேருவதில்லை என்ற புகார்கள் உயர்நீதிமன்றத்திற்கு வரத் தொடங்கின.

மோட்டார் வாகன விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பாலோனோர் மைனர்களாகவும், விபத்தில் இறந்தவர் வாரிசுகள்,படிப்பறிவு இல்லாதவர்களாகவும், சட்ட விவரம் தெரியாமல் இருந்ததால், நஷ்டஈட்டு தொகை உரியவருக்கு சரியாக கிடைப்பதில்லை என்றனர்.

அவர்களின் நலன் காக்க, நஷ்ட ஈடு தொகை பெரும் தொகையாக இருப்பதாலும், வாரிசுதாரர்களும் காயம் அடைந்தவர்கள் மைனர்களாக, படிப்பறிவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாகவும், தேவைக்கேற்ப, வழக்கு தீர்ப்பிலேயே இந்த நஷ்டஈட்டு தொகையை, நிரந்தர வைப்பீடு செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறும் .. மனுதாரர்கள் தேவைக்கேற்ப மனு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.. தீர்ப்பாயங்கள், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி பணிக்கப்பட்டனர்

நாளடைவில் இந்த பிரச்சினை குறைந்தாலும்,  இந்த நஷ்டஈடு தொகையை, தேவைக்கேற்ப வைப்பீடு செய்ய சொல்லப்பட்ட போது, அனைத்து வழக்கிலும் நஷ்டஈடு தொகையை வைப்பீடு செய்வது, கட்டாயமாக்கப்பட்டது போல தீர்ப்புகள் போடப்படுகிண்றன…அந்த தொகையை வைப்பீடும் செய்யப்படுகின்றன.

இதனால் தீர்ப்பு பெற்றாலும், அடுத்து அந்த நஷ்டஈடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வைப்பீடு செய்யும் வரை காத்திருந்து, பின்னர் மனு செய்து, உத்தரவு பெற்று, நஷ்டஈடு தொகையை பெற ரொம்பவே "மெனக்கெட" வேண்டியுள்ளது.

இன்றைய பெரும்பாமையான வழக்காடிகள், சட்ட அறிவு ஓரளவு உள்ளவர்களாகத் தான் உள்ளனர்..அவர்களுக்கு தங்கள் நஷ்டஈட்டு தொகையை பாதுகாக்க தெரிகிறது. அதே போல, விபத்தினால், குடும்பத்தின் தலைவரை இழந்து பொருளாதார ரீதியாக தவித்துக்கொண்டிருக்கும் குடும்பம், தீர்ப்பு பெற்றும், உடன் நஷ்டஈடு தொகையை பெற முடியாமல் தவிக்க வேண்டி இருக்கிறது.

மாண்புமிகு நீதிமன்றங்கள், நஷ்டஈட்டு தொகையை வைப்பீடு செய்ய "உத்தரவிடலாம்" என்று சொன்ன விதிமுறைகளை, "கண்டிப்பாக" என்று, இயந்திரத்தனமாக , , அமுல்படுத்துகிறதா என்ன?

உண்மையிலேயே நஷ்டஈட்டு தொகையை, உரியவருக்கு கொடுக்காமல், வைப்பீடு செய்யத்தான் வேண்டுமா? என்ற கேள்வி எழும் போது, இது சம்பந்தமாக, மான்புமிகு உச்சநீதிமன்றம், என்ன சொல்லியுள்ளது என்று பார்ப்போம்.

இந்த வழிகாட்டுதல்களை மான்புமிகு உச்சநீதிமன்றமும், தன் முன் வந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளர், திருவனந்தபுரம் எதிர் சுசம்மா தாமஸ் மற்றும் பலர் என்ற பிரபல வழக்கில் ஏற்றுக்கொண்டது. அதையே தேவையான வழக்கில் பின்பற்றவும் சொன்னது.

மேலும் சில விதிமுறைகளை குறிப்பிட்ட நீதிமன்றம், யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் வி. யூனியன் ஆஃப் இந்தியா  வழக்கில், நஷ்டஈட்டு தொகை வழங்குவது குறித்து, சொல்லப்பட்ட கொள்கைகளை தீர்ப்பாயம் மனதில் கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தொகையை பெறுபவரின் நலன் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், மான்புமிகு உச்ச நீதிமன்றம் "மேற்கொள்ளலாம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், அவை கீழமை நீதிமன்றங்களால், எல்லா சந்தர்ப்பங்களிலும் இயந்திரத்தனமாகப் "கண்டிப்பாக " என்று சொன்னது போல், பின்பற்றப்படுகின்றன,

இந்த நிலையை மான்புமிகு உச்சநீதிமன்றமும் கவனிக்காமல் இல்லை...

விபத்தில் பாதிக்கப்பட்டவர்  மனு செய்த பிறகு, 21.7.1993 அன்று இறக்கிறார். மான்புமிகு உயர்நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டில் இழப்பீட்டு தொகையை அதிகரிக்கிறது  காப்பீட்டு நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் பணத்தை டெபாசிட் செய்தது ஆனால் ..பரிதாபம்..அந்தோ..பரிதாபம்.... .இந்த பணத்தை எடுத்துக்கொள்ள  வாரிசுகள் அனுமதிக்கப்படவில்லை.!!

உச்சநீதிமன்றம் வரைக்கும்  வந்த  இந்த  ஏ.வி. பத்மா எதிர் ஆர். வேணுகோபால்  வழக்கில், மேலெ சொன்ன சுசம்மா வழக்கில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் கண்டிப்பானவை கிடையாது  என்றது. 

 நஷ்ட ஈடு தொகையைக்  கட்டாயமாக வைப்பீடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் செய்ததையும், இழப்பீட்டுத் தொகையை நீண்ட கால வைப்புத் தொகையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையையும் உயர்நீதிமன்றமும் கவனிக்க தவறி விட்டது என்றது. 

வழக்குத் தொடுப்பவர்,  தனக்கு வழங்கப்பட்ட பணத்தை கையாளுவதில் திறமையானவர் என்று திருப்தி அளிக்க முடிந்தாலும் கூட போதும். .கல்வியறிவற்ற நபர்களின் விஷயத்தில் தான் இந்த வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என்ற நீதிமன்றம், பத்மாவின் வழக்கில் வழக்குத் தொடுத்தவர்களின் அவல நிலையை சுட்டிக்காட்டியது.

இந்த வழிகாட்டுதல்களில் சொல்லப்பட்ட வைப்பீடு செய்யும் திட்டம், படிப்பறல்லாதவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் பலனைப் பெறுவதை பார்க்கும் நோக்கில் மட்டுமே போடப்பட்டது,  வழக்காடிகள், தேவையற்ற கஷ்டங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை த்விற்க,   தீர்ப்பாயம் வங்கிக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனாலும் இன்று வரை, நீதிமன்ற ந்டைமுறைகள், முந்திய நிலையே தொடர்கிறது..

அது சரி,.. வழக்காடிகள், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நஷ்டஈட்டு தொகையை திறம்பட கையாளக்கூடிய அளவில், படித்தவர்கள் என்று தீர்ப்பாயங்கள் எப்படி தெரிந்துக் கொள்வது?

இதற்கு வழிகாட்டுகிறார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதியரசர் டாக்டர் கே ஜே தாக்கர்,

A Discussion On How To Scotch The Quandary Of Claimants Post Deposit Of Amount Of Compensation In Claim Cases

  1. மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயங்களின் (MACT)) நீதிபதி சாட்சி விசாரணை போது விழிப்புடன் இருக்க வேண்டும் .
  2. நஷ்ட ஈடு தொகை உரிமை கோருபவர் அல்லது உரிமை கோருபவர்கள் சாட்சி பெட்டியில் நுழையும் போது, ​​, அவர்களுக்கு நஷ்ட ஈடு தொகையை ஒப்படைக்கக் கூடிய அளவில்  தகுதியுள்ளவரா என்ற  ஆதாரங்களை சாட்சிய சட்டம் 1872 இன் பிரிவு 165 யை பயன்படுத்தலாம்,
  3. அவரிடம் சில கேள்விகளை கேட்டு, அவரின் புரிதலின் அளவைக் கண்டறிய முடியும். அவரின் கல்வித் தகுதிகளின் நிலையை சரிபார்க்க உரிமை கோருபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இது  கேள்வி பதில்களின் வடிவத்திலும் இருக்கலாம் உதாரணமாக, இறந்தவரின் பிறந்த தேதி அல்லது இறந்த தேதி என்ன? அவர் எங்கே படித்தார்? எந்த ஆண்டில் அவர் 10 அல்லது 12 வது தேர்வில் தோன்றினார் ? அவர் பட்டம் பெற்றாரா இல்லையா ? வழக்குத் தொடுப்பவர் பணத்தை எங்கே வைத்திருப்பார்…வங்கியிலா அல்லது வீட்டிலா?, அவருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா?, பரஸ்பர நிதிகள், பங்கு மற்றும் பங்குகள், பத்திரங்கள், கடனீடுகள், பத்திரங்கள் போன்றவற்றில் அவர் முதலீடு செய்கிறாரா? போன்ற இந்த பொதுவான கேள்விகளும் உரிமை கோருபவரின் பதில்களும் அவர்,  கல்வியறிவு பெற்ற பிரிவின் கீழ் வருகிறாரா என்பதையும் கல்வித் தகுதி தொடர்பான கேள்விகள், இறந்தவரின் உரிமைகோருபவர் அவரது  நிதி விவகாரங்களை நிர்வகிக்கும் நிலையில் இருக்கிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க  இது  உதவும்.
  4. இத்தகைய கேள்விகள் நிச்சயமாக இறந்தவரின் உரிமைகோருபவர் / வாரிசுகள் கல்வியறிவற்ற, அரை கல்வியறிவு அல்லது கல்வியறிவு பெற்றவர்கள் என்று எந்த பிரிவின் கீழ் வருகிறார்களா என்பது குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வழிவகுக்கும்.
  5. இறந்தவரின் உரிமைகோருபவர் / வாரிசுகள்  கல்வியறிவற்ற,  அரை கல்வியறிவு பெற்றவர் /இல்லாதவர் என்று  தீர்மானிக்கும் நிலையில், தீர்ப்பாயம் நஷ்டஈட்டு தொகையை முதலீடு செய்வதா அல்லது அதை தள்ளுபடி செய்வதா என்று முடிவு செய்ய முடியும்.  அதன்படி வழிகாட்டுதல்களுடன் வழங்கப்படும் தீர்ப்பு, வழக்குத் தொடுப்பவருக்கு பொருந்தும் 
  6.  மேலும் அது, எதிர்காலத்தில் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு,  சிக்கலானதாக இருக்காது.
  7. கல்வியறிவு பெற்ற நபர்கள் தொடர்பாக, அந்த வழிகாட்டுதல்களில் சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறைகளை நாடுமாறு தீர்ப்பாயங்கள் அறிவுறுத்தப்பட்டன.. மேலும் இந்த வழிகாட்டுதல்கள் படிப்பறிவில்லாத உரிமை கோருபவர்களின் நலனுக்காக மட்டுமே நஷ்டஈடு தொகைகள் சாதாரணமாக வைப்பீட்டில் வைக்கப்படுவதாக கருதப்பட வேண்டும். என்றும் தான் உச்சநீதிமன்றம் பத்மா வழக்கில் சுட்டியுள்ளது..

ஒரு தசாப்தத்திற்கு முன்னரே தளர்த்தப்பட வேண்டிய நிலைப்பாடு, இப்போது மிகைப்படுத்தப்பட்டிருப்பதை சமீபத்திய அனுபவம் நிரூபித்துள்ளது, பல உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவிலிருந்து தெரிகிறது, 

பல தீர்ப்பாயங்கள் நஷ்டஈடு பணத்தை கோருபவருக்கு, அதை கொடுக்க மறுத்துள்ளன. தொடர்ந்து தீர்ப்பாயங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றாததால், நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவு இழப்பீட்டை விடுவிப்பதற்கான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் வரை வந்து வழக்காடிகள் பெற வேண்டியுள்ளது..இது எவ்ளோ பெரிய கொடுமை!!

சமீபத்தில் மாண்புமிகு பம்பாய் உயர்நீதிமன்றத்தால் , இந்த வழக்கில் போடப்பட்ட உத்தரவும் இதையே காட்டுகிறது. 

இந்த தொற்றுநோய்களின் போது , மாண்புமிகு கர்நாடக உயர்நீதிமன்றம் மோட்டார் விபத்து மற்றும் நிலம் கையகப்படுத்தும் விஷயத்தின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது..

இன்னொரு பிரச்சினையும் உள்ளது...

முன்னர் எல்லாம், தீர்ப்பு, வந்தவுடன், காப்பீடு நிறுவனங்களும், வங்கிகளும், நஷ்ட ஈடு தொகையை நீதிமன்றத்தில் கட்டி விடும். அதை நீதிமன்றம் தான், ஏதேனும் ஒரு வங்கியில் வைப்பீடு செய்யும்.

ஆனால், சமீப காலமாக அதிலும் ஒரு மாற்றம்…

"மோட்டார் விபத்து உரிமை கோரல்கள் வருடாந்திர வைப்பு" (MACAD) என அழைக்கப்படும் வங்கிக்கணக்கை வங்கிகள் தொடங்கியுள்ளன. இத்தகைய திட்டங்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பிற முன்னணி வங்கிகளால் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள இந்த நஷ்டஈட்டு வைப்புத்தொகையை , நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பெற்றால் தான் முன்கூட்டியே பணம் பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளது, இந்த திட்டத்தில், பணத்தை முன்கூட்டியே வழங்குவதற்கான எந்த வசதியும் இல்லை இந்த நிலையான வைப்புத்தொகை அவ்வப்போது புதுப்பிக்கப்படும். 

 இது ஏற்கெனவே, விபத்தின் அதிர்ச்சியை அனுபவித்த வழக்காடிக்கு தீங்கு விளைவிக்கும், சட்டபூர்வமாக தனக்குச் சொந்தமான தொகையை கண்ணால் பார்க்கவே .அவர்கள் மேலும் அலைய வேண்டியுள்ளது..

இது போதாதென்று, காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும், இந்த வைப்பீடு தொகை முதிர்ச்சியடைந்த நிலையில் டி.டி.எஸ் மூலத்தில் கழிக்கப்படும் வரியைக் கழிக்கின்றன,

இந்த டி.டி.எஸ் விகிதப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி, மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் . முன்பு வந்தது இந்த வழக்கு.

"மொத்த வட்டி தொகையும், இழப்பீட்டுத் தொகையின் மொத்தத் தொகையின் அடிப்படையில் திரட்டப்பட வேண்டும், இது நிதியாண்டு முதல் நிதியாண்டு அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும், ஒரு நிதி ஆண்டில் வட்டி ரூ .50,000 / - ஐ விட அதிகமாக இருந்தால்,  காப்பீட்டு நிறுவனம், வருமான வரிச் சட்டம், 1961 இன் 194 ஏ (3) (ix) வழங்கப்பட்டபடி 'மூலத்தில் வரி விலக்கு' என்ற தலைப்பின் கீழ் பொருத்தமான தொகையை கழிக்க உரிமை உண்டு. எந்தவொரு நிதியாண்டிலும் வட்டி அளவு ரூ.50,000 / - ஐ விட அதிகமாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட வருமான வரி சான்றிதழை கேட்காமல், உரிமைகோருபவர் தொகையை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்"என்றது.. -

ஏற்கனவே அதிக வேலைப்பளு கொண்ட நீதிமன்றங்களுக்கு, பணம் வழக்காடிக்கு சொந்தமானது என்பதை ம்ன்தில் நிறுத்தி, சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அதிக விழிப்புடன்  உச்சநீதிமன்றம் சுசம்மா வழக்கில் சொன்னபடி, வழிகாட்டுதல்களை முறையாகச் செயல்படுத்த நேரம் இப்போது வந்துள்ளது..

 

சனி, 12 ஜூன், 2021

மோட்டார் வாகன விபத்தும் இல்லத்தரசியும்

 

மோட்டார் வாகன விபத்தும் இல்லத்தரசியும்

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார் புவனேஸ்வரி. அவர் போக வேண்டிய பஸ் வர, கூட்ட நெரிசலில் இவர் ஏறி உள்ளே செல்வதற்குள் , கண்டக்டர் விசில் ஊதிவிட , பஸ் புறப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத புவனேஸ்வரி பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த இரத்த காயம். மருத்துவ சிகிச்சை எடுத்தும் நிரந்தர ஊனம் ஏற்பட்டுவிட்டது.

நன்றி கூகிள்

தனக்கு ஏற்பட்ட இந்த இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அவரோ இல்லத்தரசி. வருமானம் ஈட்டுகிறார் என்று சொல்லமுடியாது. அவருக்கு வருமான ரதியான நஷ்டம் என்று எந்த ஆதாரமும் தாக்கல் செய்யாததால், இல்லத்தரசி செய்யும் பணிகள் என்ற வகையில் அதற்கு மாதம் ரூபாய் 45௦௦.- என்று கணக்கிட்டு நஷ்ட ஈடு வழங்குமாறு போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இந்த நஷ்ட ஈடு மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். அந்த வழக்கில் தான் நீதிமன்றம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது

"இல்லத்தரசிகள் தான் ஒரு நாட்டின் அடித்தளம். ஒரு இல்லத்தரசி இல்லையெனில் அந்த குடும்பமே சிதறிவிடும். அதுவும் அவருக்கு நிரந்தர ஊனம் என்னும்போது, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதன் தாக்கம் இருக்கும். எனவே அவர் வருமானம் ஈட்டாதவராக இருந்தாலும். அந்த குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை விட மதிப்பு வாய்ந்தவர். எனவே, அவருக்கு ஏற்பட்ட ஊனத்திற்கு நஷ்ட ஈடு கணக்கிடும்போது, அவர் கணவரின் வருமானம், சமூகத்தில் அவர் குடும்பத்தின் மதிப்பு, குடும்பத்தில் அவரின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நஷ்ட ஈடு கணக்கிடவேண்டும் " என்று கூறி ரூபாய் 14 லட்சம் வட்டியுடன் சேர்த்து நஷ்டஈடு வழங்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது

திங்கள், 7 ஜூன், 2021

இந்திய சட்டப்படி விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும்?

 கோவிட 19 ஏற்படுத்திய பாதிப்புகள் மட்டும் தானே நமக்கு தெரியும்? அது கொண்டு வந்த நன்மை என்ன தெரியுமா?

அது 20000 பேர் உயிர்களை காப்பாற்றி இருக்கிறது.

உண்மை தான்…

மாநிலங்கள் , உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியிடம் கொடுத்த புள்ளிவிவரப்படி இந்த கொரானா கால ஏப்ரல் _ஜூன் காலக்கட்டத்தில் 20,732 நபர்கள் சாலை விபத்தில் இறக்க போன வருட இதே காலக்கட்டத்தின் 41,032 இறப்பை விட இது குறைவு…!!

இதே போல விபத்தினால் காயம் அடைந்தவர்களும் போன வருட இதே காலக்கட்டத்தின் புள்ளிவிவரப்படி 70000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 63,000 விபத்துகள் குறைந்துள்ளது!!

கெட்டதிலும் ஒரு நல்லது☺️

ஆனாலும், இந்த லாக்டவுன் நேரத்தில் சாலை விபத்தினால் இறந்த, காயம் அடைந்தவர்கள் வரிசையில் இரண்டாவதாக முன்னணியில் உள்ளது தமிழ் நாடு…

நாம யாரு? லாக் டவுனுன்னாதான் என்ன?.நாம தான் பறப்போமே?!😊

சாலைகளை பொறுத்தவரை நாம் பாதசாரியாக இருந்தாலும் சரி வண்டியோட்டுபவராகவோ சரி பின்னால் உட்கார்ந்து பயணம் என்றாலும் கவனம் இருக்கவேண்டியது அவசியம். இன்னொருவரின் அஜாக்கிறதையால் நம் உயிருக்கும் உடமைக்கும் சேதம் வரலாம்.

அதே சமயம், நம்மாலும் மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்ப்பது முக்கியம்.

சரி ..விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு ன்னென்ன தண்டனைகள் கிடைக்கும்?

அஜாக்கிறதையாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஒட்டி

  • அதனால் ஓர் மரணம் ஏற்பட்டால் இரண்டு வருடம் வரையில் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
  • மற்றவருக்கு காயம் ஏற்படுத்தினால் ஆறு மாதம் வரையான சிறை தண்டனையோ அல்லது ரூபாய் 1000 வரைக்கான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
  • இதில் காயம் பட்டவரோ, பாதிக்கப்பட்டவரோ நஷ்ட ஈடு கோரி மனு செய்தால், அதை தர வேண்டியதும் சேரும்.

விபத்து ஏற்படாவிட்டாலும், அது எற்படக்கூடிய வகையில் அஜாக்கிறதையாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஒட்டினாலேயே தண்டனை உண்டுன்னு எத்தனை பேருக்கு தெரியும்..?

அதற்கு மூன்று மாதம் வரையான சிறை தண்டனையோ அல்லது ரூபாய் 250 வரைக்கான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அதே சமயம் இந்த குற்றங்கள் "விபத்துகள்" அதாவது திட்டமிடப்படாமல் நடந்த குற்றம் என்பதால் குற்றவாளி பிணையில் செல்லலாம். அதே போல விபத்தில் பாதிப்பு அடைந்த நபருடன் செட்டிலமெண்ட் பேசி வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம்.

சரி…விபத்து ஏற்படாதவாறு தேவையான கவனம் எடுத்து பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டும, எதிரபாராதவிதமாக விபத்து நடந்துவிட்டால்?

அப்படிப்பட்ட சமயத்தில், அதில் மூன்றாம் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், அதற்கு இவரை பொறுப்பாளியாக்க முடியாது.

செய்த தவறுக்கு மட்டுமே தண்டனையே தவிர, எதிர்பாராது நடந்ததற்கு பொறுப்பாளியாக்க முடியாது. இது ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையினால்.

சட்டத்தையும் தண்டனையையும் விடுங்கள். நம்மை எதிர்பார்த்து ஒரு குடும்பம் வீட்டில் காத்திரூக்கிறது என்பதை கவனம் கொள்வோம்.அதே தானே ரோட்டை உபயோகிக்கும் இன்னொருவருக்கும்.

"When We are on the way to our work, Think of the way and not the Work"


Road accidents in India: Coronavirus may have saved 20,000 lives on Indian roads - Times of India


குடிபோதையில் வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை?

 ரொம்ப முக்கியமான கேள்வி.!!

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 185 (அ) இன் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை செய்பவற்கு முதல் குற்றம் எனில், 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டுமே அளிக்கப்படும். இதுவே இரண்டாவது முறை என்றால், 2 வருடங்கள் வேளை சிறை தண்டனையோ அல்லது பதினைந்தாயிரம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ…வசதி எப்படி?☺️

இப்படித்தான் குடிபோதையில் இருந்ததாக போலீசார் பிடித்து மருத்துவரிடம் கொண்டு போய், அவர் மூச்சுக்காற்றில் சாராயநெடி உள்ளது என்று கருத்தும் வாங்கி கேஸ் போட்டு விட்டனர்.

அரசு தரப்பு வழக்கு என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது காரை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி, மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததோடு, அதை மற்றொரு காரில் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் மற்றும் "மனுதாரர் மது வாசனை என்று மருத்துவர் கருதியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்ட மருத்துவ பரிசோதனை கருத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 185 ன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார் மூச்சு பகுப்பாய்வி சோதனை மூலம் ஆல்கஹால் உள்ளடக்கம் கண்டறியப்பட்டால் மட்டுமே பிரிவு 185 ஈர்க்கப்படும் என்பதும் வெறும் மருத்துவரின் கருத்தை கோபடு குற்றம் சுமத்தி முடியாது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் வாதம்

உண்மை தான்.

நேற்று முன் தினம் வழங்கப்பட்ட தீர்ப்பு தான் இப்போ ஹைலைட்!!

To Attract Drunk Driving U/S 185(a) Of MV Act Accused Should Be Subjected To Breath Analyser Or Blood Test

மோட்டார் வாகனச் சட்டத்தில் 2019ல் திருத்தம் செய்வதற்கு முன்பு தான் அது போல மருத்துவரின் கருத்து மட்டும் போதுமானது. ஆனால் சட்டத் திருதத்திற்கு பிறகு, பிரிவு 185 (அ) இன் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஈர்ப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் மூச்சு பகுப்பாய்வி அல்லது ஆய்வக சோதனை உட்பட வேறு ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவரது இரத்தம் இருப்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் அவரது ரத்தத்தில், 100 மில்லி ரத்தத்திற்கு 30 மி.கி. ஆல்கஹால் அளவு இருப்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

அதனால் கணவான்களே!! போலீஸ் பிடிக்கும்போது, இதை சொல்லி தப்பிக்கலாம் என்று எண்ணாமல், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் இதோ பாருங்கள்!!

அது மட்டுமல்ல குடிபோதையில் வண்டி ஒட்டி இறந்தால், விபத்துக்கு அவரும் காரணம் என்று அவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் தொகை குறைக்கப்படும்.இதோ உதாரனத்துக்கு இந்த வழக்கு

Family loses 20% relief as accident victim was drunk, without helmet | Chennai News - Times of India


மக்கள் பொதுவாக அறிந்திராத இந்தியச் சட்டம் எது?

 "வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.

அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்.

உன்னை கேட்டு என்னை கேட்டு எதுவும் நடக்குமா?.."

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள்..

உண்மை தான் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடக்கிறோமே, அந்த சாலை விதிகள் குறித்த தெளிவான புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஏதோ ஓரளவிற்கு தெரியும் என்பவரா?

அந்த அரைகுறை ஞானம் இப்ன்னமும் மோசமானது.

நம்மவர்களுக்கும் மேலை நாட்டவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது..

இதை சரியாக தெரிந்துக் கொள்ளாமல், மற்ற எந்த சட்டமும் புரிந்து கொண்டு பயன் இல்லை.


எனவே போக்குவரத்து சட்டம் அறிந்துக்கொள்வோம்.

அதனை சரியாக கடைப்பிடிப்போம்.

மற்றவர் உயிர் மட்டுமல்லாது நம் உயிரையும் காப்போம்!!

'

"No Parking' இடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல காவல் துறைக்கு (traffic) அதிகாரம் உள்ளதா?

இவையெல்லாம் சாலை போக்குவரத்து சின்னங்கள்…

இது குறித்து எத்தனை பேருக்கு தெரியும்?

"நோ பார்க்கிங்"என்று அறிவிப்பு பலகை வைத்த இடத்தில் வண்டியை நிறுத்தக்கூடாது என்று தெரியவில்லை. ஆனால் அந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ளும் காவல் துறைக்கு, அதை எடுத்து செல்ல அதிகாரம் உள்ளதா என்று கேள்வி..😁

இதில் என்ன புரிகிறது என்றால்…

மோட்டார் சைக்கிளை ஓட்ட, இப்போதெல்லாம் பள்ளி பருவத்திலேயே கற்றுக் கொள்பவர்கள், சாலை விதிகளை கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வதில்லை. அதனால் வந்த கோளாறு இது.

ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சாலை விதிகள் மீறுவதால் பாதிப்பு சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படாமல் போகலாம். ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு அது மற்றவருக்கு இடையூறாக இருக்கும் அல்லவா?

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை அகற்ற, போக்குவரத்து போலீசாருக்கு, சில சமயங்களில் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் இல்லாத அதிகாரம் வேறு யாருக்கு உள்ளது?

சாலை விதிகளை மீறும்போது, அதை அவர்கள் தானே சரி செய்யவேண்டும்?.அந்த வண்டியை அங்கிருந்து அகற்றி, காவல் நிலையத்தில் கொண்டு போவது அவர்களின் பணியில் ஒன்று.

அந்த சாலை விதியை மீறியதற்கு அபராதம் செலுத்திவிட்டு வண்டியை எடுத்து கொள்ளலாம்.

என்ன …வண்டியை பொது இடத்திலிருந்து அகற்றி, அவர்கள் இடத்திற்கு கொண்டு போய் நிறுத்தும் போது , சில வண்டிகளுக்கு சேதம் ஆவது உண்டு தான்.

உங்கள் வண்டியை பூப் போல தூக்கிக்கொண்டு போகவேண்டும் என்று நீங்கள் கட்டளையா இடமுடியும்?

அதற்கு அவ்வாறு செய்வதையே தவிர்க்கலாமே…..

ஹ்ம்ம்..இப்பொதெல்லாம் மோட்டார் சைக்கிளுக்கு காட்டும் கரிசனத்தை மனைவி/காதலிக்குக் கூட காட்டுவதில்லை.. 🤣


சாலையை எந்த இடத்தில் கடக்கலாம், கடக்கக்கூடாது என்ற விதிகள் தெரியுமா?







 

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...