வியாழன், 10 ஜூன், 2021

எவ்வித சம்பளமும் வருமானமும் எதிர்பாராது ஊழலும் செய்யாமல் மக்களுக்கு இலவசமாக சேவை செய்பவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் எனும் சட்டம் வந்தால் இந்திய அரசியல் கட்சிகளின் நிலை என்னவாகும்? இந்திய நாட்டின் நிலை என்னவாகும்?

 உங்கள் கேள்வியிலேயே முரண் இருக்கிறதே?!

எவ்வித சம்பளமும் வருமானமும் எதிர்பாராது மக்களுக்கு இலவசமாக சேவை செய்பவர்கள் ….

அப்படினா அவர்கள் வசதி படைத்தவர்களாகத் தான் இருக்கணும்…

பின்னே…

தன்னையும் தன் குடும்பத்தையும் பார்த்துக்கிற அளவிற்கு, வேற வேலைக்கும் போக வேண்டியில்லாத அளவிற்கு பணம் வேணுமே?

அப்ப வசதியில்லாதவன் தேர்தலில் நிற்க முடியாது..இது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துமே..இது சரியா?…

அப்புறம் வசதியிருந்தா மட்டும் போதுமா…ஊழல் செய்யாமல் இருக்கனும்கிறீங்க..

எந்த பணக்காரர் கருப்பு பணம் வச்சுக்காம, பொய் கணக்கு எழுதாம, பினாமி பெயரை சொத்து வச்சுக்காம, இருக்காங்க? அப்படியிருந்தா அவங்க பணக்காரரா இருக்கமுடியாது…😆

இப்ப சொல்லுங்க..இவ்ளோ முரண்பாட்டோட ஒரு சட்டம் எப்படி?

அதுக்காக எவ்வித சம்பளமும் வருமானமும் எதிர்பாராது ஊழலும் செய்யாமல் மக்களுக்கு இலவசமாக சேவை செய்தவர்கள் இல்லாமல் இல்லை..

காந்திஜி, கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இப்படி சொல்லலாம்.அது பழைய கதை…

ஆனால் இப்போ அவங்களுக்கும் சாதி சாயம் பூசிட்டாங்க…

சட்டத்தை விடுங்கள்..

தனி மனித ஒழுக்கத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் சுயமாக ஒருவர் முனவந்தால் தான் உண்டு…

ஒருவர் இருவராக..குழுவாக ..கூட்டாக..சேர சேரத் தான்..எந்த மாற்றமும் நடக்கும்..

இல்லையெனில்….

நல்லவர் ஒதுங்கி போக....நாடாள முன்வருபவர் மீதியுள்ளவர் தானே?

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...