"நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?" என்ற புத்தகத்தில் டேல் கார்னகி, ஒரு சம்பவத்தை இப்படி விவரிக்கிறார்..
1931ம் ஆண்டு மே மாதம் ஏழாம் நாளன்று, நியூயார்க் நகரில் மிகப் பரபரப்பான மனித வேட்டை ஒன்று உச்சகட்டத்தை அடைந்தது. பல வாரத் தேடல்களுக்குப் பிறகு, புகைபிடிக்காத, குடிப்பழக்கமில்லாத கொலைகாரன் 'இரட்டைத் துப்பாக்கி' குரோலி, வெஸ்ட் என்ட் அவென்யூவில் அவனது காதலியின் வீட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டான்,
ஒரு கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்த அவனது மறைவிடத்தை நூற்று ஐம்பது காவல் துறையினரும் துப்பறிவாளர்களும் முற்றுகையிட்டனர். கூரையில் அவர்கள் துளைகளிட்டனர். குரோலியைக் தண்ணீர்ப் புகை மூலமாக வெளியே வரச் செய்ய அவர்கள் முயற்சித்தனர். பிறகு சுற்றுவட்டாரத்திலிருந்த கட்டிடங்களில் இயந்திரத் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் | வைத்தனர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதிரியார்க் நகரின் அருமையான குடியிருப்பு இடமான ஒலியும் இடைவிடாது எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய நாற்காலிக்குப் பின்னால் குரோலி ஒளிந்து கொண்டு, காவல் துறையினர்மீது தொடர்ந்து சுட்டான். உற்சாகமான பத்தாயிரம் மக்கள் அந்தச் சண்டையைக் கண்டனர். நியூயார்க் நகரின் நடைபாதையில் அப்படிப்பட்ட எதையும் அவர்கள் அதுவரை பார்த்ததில்லை.
குரோலி பிடிபட்டபோது, நியூயார்க் நகரில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் அபாயகரமான குற்றவாளிகளில் 'இரட்டைத்துப்பாக்கி' குரோலியும் ஒருவன் என்று காவல்துறை ஆணையர் ஈ.பி. மல்ரூனி அறிவித்தார். “வேறு எந்தத் தூண்டுதலும் இன்றி, அலட்டிக் கொள்ளாமல் அவன் கொலை செய்வான்," என்று அந்த ஆணையர் கூறினார்.
'ஆனால் இரட்டைத் துப்பாக்கி' குரோலி தன்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தான்? அது நமக்குத் தெரியும். ஏனெனில், காவல் துறையினர் வீட்டை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தபோது, அவன் *உரியவரின் பார்வைக்கு' என்று முகவரியிட்டு ஒரு கடிதத்தை எழுதினான். அவன் எழுதும் போது அவனது காயங்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தம் அக்காகிதத்தில் பரவலாகத் தெறித்திருந்தது. அவனது கடிதத்தில் அவன் இவ்வாறு எழுதியிருந்தான்: “என் சட்டைக்குக் கீழே, சோர்ந்து போன, அவனது ஆனால் அன்பான ஓர் இதயம் இருக்கிறது. எவருக்கும் அது தீங்கு விளைவிக்காது.”
கண்ணால் பார்த்த இந்த சம்பவத்தையும், காதால் கேட்ட அவனை பற்றிய குறிப்பையும் வைத்து, நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்? இரண்டும் பொய்யா? அல்லது இரண்டும் உண்மை தானா? இல்லை இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் தான் உண்மையா? அப்படியென்றால் அது எது? எப்படி தெரிந்து கொள்வது?
நாம் ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்திருக்கலாம் ரயில் நகரத் தொடங்கும் பொழுது எதிரில் தெரியும் மரம் செடி கொடிகள், கட்டிடங்கள் எல்லாம் பின்னோக்கி நகர்வதைப் போல நம் கண்ணுக்கு தெரியும் ஆனால் உண்மையிலேயே அங்கு நகர்ந்து கொண்டிருப்பது ரயில் தான் அந்த பொருட்கள் எல்லாம் அதே இடத்தில் தான் இருக்கின்றன ஆனால் நம்முடைய கண் பார்வைக்கு அந்த பொருட்கள்தான் நகர்வதாக தெரியும் .
அதே போல நாமே பார்த்திருக்கலாம், அதிகாலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும் போது, சூரியன் ஆனது நம்முடைய வலது திசையில் சில காலமும் இடது திசையில் சில காலமும் தோன்றும். அதை பார்க்கும்போது, சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றும்..
இவையெல்லாம் கண்ணால் காண்பதும் பொய், என்பதை உணமையாக்கவில்லையா?
ஏன். நாமே, இந்த சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலம் தான் "உத்தராயணம்." என்றும் " தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலம் என்றும், தஷ்ணாயன காலம் என்பது, சூரியன் வட திசையிலிருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலம் என்றும் ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரையான ஆறு மாதங்கள்.என்பர். நம் முன்னோர் வகுத்தது என்றும் பார்க்கவில்லையா?
ஜோதிடத்தை பொறுத்த வரையில், பூமி நடுவில் இருக்க, அதனை தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்பர்..சூரியன், ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் ஆகும் என்பர்..
அறிவியல் தெரிந்தவர் ஒப்புக் கொள்ள மறுக்கும் விஷயம் இது. என்றாலும் ஜோதிடமே அறிவியல் தானே, அது எப்படி மாற்றி சொல்லியிருப்பர் என்ற கேள்வி வரும்.
அப்படியென்றால் காதால் கேட்பதும் பொய்யா?
சொல்பவர் வாய்மொழி சோதித் தறிதலன்றி
சொல்லின் தரமறிவ தேது..திருக்குறள்
நாம் படித்த அறிவியல், பூமியானது தனது அச்சில் 23 1/2 பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வரும்போதே தன்னை தானே சுற்றி வருவதால் கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை சூரியனின் ஒளி நேரடியாக படும் வகையில் சுற்றுகிறது ...அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.என்பது நினைவுக்கு வரும்.
இயற்கை விதிப்படி தை முதல் ஆனி மாதம்
வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன்,
தென் திசை மீது தன் பார்வையை திருப்பும். அந்த காலத்தின் தொடக்கம் தான் ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம்
நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது.
இதைத் தான், சூரியனின் பயணம் எனப்படுகிறது. ஜோதிடத்தில், சூரியன் தான் பூமியை சுற்றி வருவதாக காட்டப்பட்டாலும் சூரியன் இருக்கும் இடத்தில் பூமி இருப்பதாகவும் பூமி இருக்கும் இடத்தில் சூரியன் இருப்பதாகவும் தான் கொள்ள வேண்டும் அந்த கணக்கில் தான் இதைப் பார்க்க வேண்டும் .
அதே போல ஆடி மாதம் தான், பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும்
கருதப்படுகிறது. .முக்கியமாக ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
அறிவியல் பூர்வமாக , இது உண்மை தான்.
ஆடி தான் மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, , தஷ்ணாயண காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்..
அதே போல , தட்சணாயண காலம் முடியும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளை கொடுக்கும். எனவே தான் மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம் என்பார்கள்..கிருஷ்ணனே "மாதங்களில் நான் மார்கழி "என்று சொலவில்லையா?
இதை தானே “உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்” ..என்றது சீவக சிந்தாமணி.
அப்படியென்றால் உத்தராயனத்தைப் புண்ணிய காலம் என்றும்
தட்சணாயணம் காலத்தை தெய்வங்சுளுக்கு நன்றி சொல்லும் காலமாக முன்னோர் வகுத்தது சரி தானே..?!
எதையும் கண்ணால் பார்த்தால், காதால் கேட்டால் நம்பி விடாமல் பொது தீர விசாரிப்பது மட்டும் தானே மெய்யாகும்.
அந்த உத்தராயனத்தின் தொடக்கத்தையே சங்க்ராந்தி என்று நாட்டின் பிற இடங்களில்
கொண்டாடும் பொங்கல் விழாவை சங்க காலத்தில் தமிழர்கள் இந்திர விழாவாக, தை மாதம் முழுவதும் கொண்டாடினராம். இந்த
விழாவிற்குப் பல மாதங்களுக்கு முன்னர்
அதாவது ஆடி மாதம் மழை வேண்டி
இந்திரனைக் குறித்து விரதம் இருப்பார்களாம் விவசாயிகள். ஆறு மாதம் கடந்த பின் தை மாதம் விரதம் முடித்து, பழையன கழிதலும், புதியன
புகுதலுமாய் மார்கழி இறுதி நாள் போகிப்
பண்டிகை கொண்டாடுவர்.
சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு
நிவேதனம் செய்யும் பொங்கல் திருநாள் தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுவதும் . எவ்வளவு சரியானது!!!
"நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்”….நற்றிணை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(குறள் 423:
திருவள்ளுவர் வலியுறுத்தும் இதை தானே சட்டமும் சொல்கிறது!
அந்த உண்மையை அறிய நடத்தப்படுவதே "விசாரணை". ..நீதிமன்றத்தின் விசாரணை .
இதை தான் சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும் தெளிப்படுத்தியுள்ளது.Aim Of Every Court Is To Discover The Truth: Supreme Court Explains Scope Of Section 311 CrPC
அந்த நீதிமன்ற விசாரணையும் எப்படி இருக்க வேண்டும்?
அதில், குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட குழு, சமுதாயம் இப்படி எல்லோரின் நலனும் சீரதூக்கி பார்க்க வேண்டும். என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் விசாரணை என்றவுடன், போலீஸ் விசாரணை தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும்.
அதற்கும் மேலே சொன்ன அளவுகோலகள் தான்.. ஆனாலும் நமக்கு உடன் நடுக்கம் வருகிறதே …ஏன்?
அவர்கள் "தீர" விசாரிப்பது நம் "மெய்"யை தானே! என்பதாலா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக