திங்கள், 7 ஜூன், 2021

என் அம்மா மற்றும் அம்மாவின் பெற்றோர் இறந்து வருடங்கள் ஆகிவிட்டது. அம்மாவின் தம்பி மற்றும் அவர் குடும்பத்தார் சொத்துகளை அனுபவிகிறார்கள். என் அம்மாவிற்கு நான் மட்டுமே வாரிசு. இந்த சொத்தில் எனக்கு பங்கு உண்டா? ஆம் எனில் எவ்வாறு சட்டப்படி வாங்குவது?

 உங்கள் தாத்தா மற்றும் அம்மா இறந்த விவரம் இல்லை.

இருந்தாலும் உங்கள் மாமாவுக்கு அவர் தந்தை மூலமாகத் தான் சொத்து கிடைத்தது எனில், அவருக்கு உயில் படி உரிமை கிடைக்கவில்லையாயின், அதில் சம பங்கு உரிமை உங்கள் அம்மாவிற்கும் உண்டு.

உங்கள் தாத்தா இறக்கும் முன்னே, உங்கள் அம்மா இறந்து இருந்தால், உங்கள் அம்மாவின் வாரிசு என்ற முறையில், உங்களுக்கு அந்த சமபங்கு சொத்து உரிமை உள்ளது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...