அரசு ஊழியர் நடத்தை விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு ஊழியர் நடத்தை விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 செப்டம்பர், 2021

அரசு ஊழியர்கள் ஏதேனும் துறை சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டால், பணி இட மாறுதல் வழங்கப்படுகிறது. இது எப்படி தண்டனையாகும்? இதன்படி பார்த்தால் ஒரு ஊரில் குற்றங்களை செய்யும் ரவுடிகளை வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் செய்து விட்டால் போதுமல்லவா?

இது பெரும்பாலோருக்கு உள்ள சந்தேகம் தான்.  ஒரு அரசு ஊழியர் குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டும் பனி மாறுதல் மட்டுமே செய்யப்படுகிறாரே  அது ஏன்?

அரசின் ஊழியராக ஒருவர் நியமிக்கப்ப்படும்போதே, அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்311 பிரிவின்  கீழ் அவரின் பணிக்கு பாதுகாப்பு கிடைத்து  விடுகிறது.. ஏனெனில் ராஜாங்க காரியங்களில் அவர் ஈடுபடும்போது தேவையில்லாத இடர்ப்பாடுகள் வருவதை தவிர்க்கவும், அந்த பணியை மேற்கொள்வதால் அவரின் வேலைக்கு யாரும் தீங்கு இழைப்பதை தவிர்க்கவும், அப்போது தான் அவர் தனக்கு கொடுபட்ட பணியை உறுதியுடன் செய்யமுடியும் என்பது தான் அந்த விதியின் பின்னுள்ள காரணம்.

நிறைய அரசு ஊழியர்கள், பிரச்சினை வரக்கூடிய வேலை ஏதும் வந்தால், செய்யாமல் ஒத்திப் போடுவதன் பின்னுள்ள விஷயமும் இது தான்.  ஆனால் அது தவறான அணுகுமுறை.  

அதே போல,  அரசின் தலைமை மாறும்போது, காழ்ப்புணர்ச்சி காரணமாக,  முந்தைய அரசின் தலைமையின் கொள்கையின்படி, சில அரசு அதிகாரிகள், எந்த தவறும் தன மீது இல்லாமல்  , ஒரு நல்ல எண்ணத்தில் ,செய்த பணியில் களங்கம் கற்பிக்கப்படும் அவலமும் நடப்பதுண்டு.  அதுவும் தவறான அணுகுமுறை தான். 

 அதுவே  அவர் சட்டத்திற்கு புறம்பான ஒரு குற்றம் செய்து விட்டார் என்றால், கையும்  களவுமாக பிடித்து விட்டாலும், சிலர் நினைப்பது போல, அவரை பணியில் இருந்து நீக்கி விட முடியாது. அதற்கு என உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும். 

செய்த காரியம்  குற்றச் செயல் என்றால், காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு, அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படுகிறது. அதே வேளையில் துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்படும். இவற்றிற்கெல்லாம் ஆதாரம் சேகரிக்க வேண்டும்.  அந்த அரசு ஊழியர் தொடர்ந்து அதே இடத்தில பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், இதெல்லாம் சேகரிக்க இயலாது.  அவர் சாட்சி, சாட்சியங்களை கலைக்க இயலும். அதனால் மிக முக்கியமான தருனங்களில், அவர் பனி இடைநீக்கம் செய்யப்படுகிறார்.  அப்படி குற்றம் மேலெழுந்தவாரியாக தெரியவில்லை, விசாரணை நடத்தித்தான் ஆதாரம் எடுக்க வேண்டும் என்றால், அந்த இடத்திலிருந்து அவர் பணி மாற்றம் செய்யப்படுகிறார். 

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், குற்ற வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், அதை காரணம் காட்டி , துறை ரீதியான விசாரணையில் இருந்து விடுவிக்க சொல்லி அவர்  கோர முடியாது. 

அதே போல குற்ற வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தான் குற்றம் செய்தார் என்று அரசு  நிரூபிக்க வேண்டும்.  ஆனால் துறை ரீதியான விசாரணையில் அவர் மீது சந்தேகம் எழுப்பக்கூடிய செயல்கள் புரிந்து  இருந்ததாக நிரூபிக்கப்பட்டாலேயே அவருக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இவை எல்லாம் அதிகம் வெளியே தெரியாமல் நடக்கும்  போது, குற்றம் செய்த அரசு ஊழியருக்கு கிடைக்கும் மாறுதல் உத்தரவு மட்டும் தான் வெளியே தெரிகிறது. 

இன்னொன்று, மாறுதல் உத்தரவு என்பது ஒரு அரசு ஊழியருக்கு தண்டனை கிடையாது.  அது ஒரு நிர்வாக ரீதியான நடைமுறை. ஒரு அரசு ஊழியரை எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த பணி இடத்திற்கும் மாற்றும் அதிகாரம் உண்டு. 

ஆனால் குற்றங்களை செய்யும் ரவுடிகளின் கதை வேறு. 

அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு இட மாற்றம் செய்வது ? 

யார் அதை செய்வது? 

அத்தோடு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த இடத்திலும் போக வர உள்ள உரிமை என்பது அவனுக்கு உள்ள  அடிப்படை உரிமையல்லவா ...அதை தடுக்கவேண்டும் என்றால் அதை சட்டப்படியானதாக இருக்க வேண்டும்.  

அதற்கு முதலில் அவர் குற்றவாளியா இல்லையா ? அந்த குற்றத்தை அவர் தான் செய்தாரா என்பதை நிரூபிக்க வேண்டுமே? 

அதற்கு தான் அரசு, தன் காவல் துறை சார்பாக அந்த ரவுடிக்கு எதிராக ஒரு குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்.  நீதிமன்றத்தின் அதிகாரத்தின் உள் அது வந்தவுடன், அரசின்  செயல்பாடுகள் எதுவுமில்லை. ஆனால்  அந்த குற்றம் செய்த ரவுடியை ஒரு சிறையிலிருந்து வேறு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றலாம்.   தண்டனை கொடுக்கப்பட்ட பின்பு கூட, அந்த சிறை தண்டனையை அவர் எந்த சிறையில் இருந்து அனுபவிக்கவேண்டும் என்ற முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.  அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும்.

குற்ற வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், அவர் குற்றவாளி என்று தீர்மானித்து,  அவர் அந்த ஊரில் இருந்தால், தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று முடிவு செய்தால், அவர், அந்த ஊருக்குள் நுழையக் கூடாது என்று ஒரு தடை உத்தரவை போடலாம்.  அது போன்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே?

இந்த தடை உத்தரவை , அரசும் கூட.  குற்றம் நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இருக்கும் போது செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நபர், அவர் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வந்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால், அந்த எல்லைக்குள் நுழைய முடியாமால் அவரை தடுக்க முடியும். மீறி வருபவரை கைது செய்து அடைத்து வைக்கலாம். ஏன்,  அவர்களை வீட்டுக் காவலில் கூட வைக்கலாம். 

அது வரைக்கும் ஏன் போறீங்க. .. ஒரு நேர்மையான துடிப்பான காவல் அதிகாரி, அந்த காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலேயே, நிறைய ரவுடிகள் அந்த காவல் நிலைய எல்லையை விட்டு இடம் மாறி விடுகிறார்கள் என்பது தான்  நிதர்சன உண்மை!!

 




சனி, 12 ஜூன், 2021

நம் ஜனநாயக நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவரை விமர்சனம் செய்ய முடிகிறது, ஆனால் நீதிபதகளை விமர்சித்தால் மட்டும் நீதிமன்ற அவமதிப்பு என்று தண்டனை வழங்குவது ஏன்?

 இவரை தெரியும் தானே?

சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி, நீதிமன்ற அவமதிப்பிற்காக தண்டனை பெற்றார்.

அவர் செய்த குற்றம் என்ன?

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்நாள் தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து ட்விட்டரில் ட்வீட் செய்தார்.

இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி, அவருக்கு தண்டனை வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர் நீதிமண்ரத்தின் மாண்பை குலைத்தார் என்று குற்றம் சாட்டி, அவர் மன்னிப்பு கேட்டால், விட்டுவிடுவதாக கூறியது. ஆனால் தான் நீதிபதிகளை மட்டும விமர்சனம் செய்ததாகவும் நீதிமன்றத்தை செய்யவில்லை எனக் கூறி அவருக்கு பரிந்து பேசியவர்கள் கொடுத்த தைரியத்தில் மன்னிப்புக் கேட்க மறுத்தார் தான் இதற்காக சிறை செல்லவும் தயார் என அறிவித்து தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்புக்கு காரணமான டீவீட்களை பரப்ப செய்தார்.

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு நிறுவனத் தலைவரின் செயல்பாடுகளை, நம்பகத்தன்மையை விமர்சிப்போம், ஆனால் அந்த நிறுவனம் நன்றாக இருக்க விரும்புவோம் என்பது. இது அந்த நிறுவனத்தை குறித்த மாண்பை குலைத்து விடாதா?

இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் வேறு, அதன் தலைமை நீதிபதி வேறு என்பதை ஏற்றுக கொள்ளவில்ல. மாறாக, இது மக்களின் மனதில் நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் மாண்பைக் குலைததது என்று முடிவு செய்து, கடைசியாக அவருக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாததால், அவரைக் குற்றவாளி என முடிவு செய்து, தண்டனை குறித்து தீர்ப்பு சொல்ல ஒத்தி வைத்தது. அப்போதும் அவர் மன்னிப்புக் கேட்காததால், அவருக்காக பரிந்து பேசிய அரசு வழக்கறிஞர் திரு வேணுகோபால் அவர்களின் கோரிக்கையை ஏற்று திரு பூஷனுக்கு சிறை தண்டனை அளிக்காமல், ஒரு ரூபாய் அபராதமும் கட்டத தவறினால் 3 மாத சிறைத் தண்டனையும், 3 வருடம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தடையும் விதித்து உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், பேச்சுரிமை எல்லோருக்கும் உள்ள அடிப்படை உரிமை என்றாலும் மற்றவர் உரிமையும் மதிக்கப்படவேண்டும் என்றும் அவதூறு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபரின் நடத்தையையும் பார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.

திரு பூஷனின் செயலுக்காக அதிக பட்சமாக 6 மாதம் சிறைத் தண்டனை கூட விதித்திருக்கலாம். ஏற்கெனவே உயரநீதிம்ன்ற நீதிபதி ஒருவரே நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகி, சிறை தண்டனை அனுபவித்தார்.

இருந்தாலும், உச்ச நீதிமன்றம் இறங்கி வந்து, சிறைத் தண்டனை வழங்காமல் விட்டது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த லாக் டவுன் காலத்திலும் எப்படி உச்ச நீதிமன்றம் காணொளி மூலமாக வழக்குகளை விசாரிக்கிறது என்பதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தூண்கள். சட்டத்தை பாதுகாத்து, மக்களை சட்டமீறல்களில் இருந்து பாதுகாத்து, அரசு இயந்திரங்களினால் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் தடுத்து, மக்களின் கடைசி நம்பிக்கையான புகலிடம் அது தான். அந்தப் பணியை செய்யும் நீதிபதிகளின் மீது அவதூறு பரப்புவது என்பது, நமக்கு நாமே குழியை தோண்டி கொளவது போல.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொது அறிவோடு விமர்சனம் செய்வது வேறு. அது குற்றமில்லை. ஆனால் அதை வழங்கிய நீதிபதிகளை, உள்நோக்கம் கொண்டதாகக் கூறி விமர்சிப்பது நீதிமன்றயத்தையே அவமதிப்பு செய்ததாகும்.இவை இரண்டிற்கும் இடையே உள்ளது மெல்லிய கோடு தான். அதை பாமரன் வேண்டுமானால் புரிந்துக் கொள்ளாமல் போகலாம். ஆனால் அறிவார்ந்த வழக்கறிஞர்களே செய்யும்போது? மன்ணிக்க முடியாத குற்றம்.

இருந்தும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் சிறிய அளவில் அபராதம் மட்டுமே விதித்தது, அதன் மாண்பையே காட்டுகிறது!!

பெரியோர்கள் என்றும் பெரியோர்களே!!I

அரசு துறையில் பணிபுரியும் நபர், தன் பணி நேரம் தவிர தனியாக வேறு வேலை செய்யலாமா?

 செய்யக் கூடாது.செய்யவும் முடியாது. ஏன் என்றால் ஒரு அரசு அலுவலகம் வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கலாம். ஆனால் ஒரு அரசு ஊழியர் ஒரு குறித்த நேரத்திற்கான பணியாளர் கிடையாது. அவர் ஒரு whole time பணியாளர்.

இது சம்பந்தமான பழைய அரசு கோப்பு ஒன்றை நான் தலைமை செயலகத்தில் ஒரு முறை பார்க்க நேரிட்டது. அது அரசு பணியாளர்களுக்கான நடத்தை விதிகள் உருவாக்குவது குறித்தது. அதில் இடம் பெறவேண்டிய வார்த்தைகளை குறித்து அலுவலர்களுக்கிடையே நடந்த குறிப்புரையில், அரசு ஊழியர்கள், முழு நேர ஊழியர்கள் full time employees எனக் குறிப்பிடலாமா எனக் கேட்டு தன் மேலதிகாரிக்கு அனுப்புகிறார். அதற்கு அவர், அப்படிஎழுதினால், யார் half time ஊழியர் என்பது குறித்து கேள்வி வரும் என்று கோப்பை திரூப்புகிறார். திரும்பவும், அப்படியானால், 24 மணி நேர ஊழியர் எனக் குறிப்பிடலாமா எனக் கேட்க, அவர் மேலதிகாரியோ, இப்படி குறிப்பு எழுதுகிறார்:

இப்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்று உள்ளது. நாளை அது மாறினால்? அதனால் அந்த வாரத்தையும் வேண்டும் என்கிறார்.

கடைசியில், whole time employee என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.

எனவே அரசு ஊழியர் அரசுக்கு மட்டுமே ஊழியராகவும், அதுவும் whole time ஊழியராகவும் இருக்கிறார்.. அவருக்கென்று உருவாக்கப்பட்டது தான் அரசு ஊழியர் நன் நடத்தை விதிகள், 1973.

 அரசு மருத்துவர்கள் தங்கள் பணி நேரம் முடித்தபின் தனியாக மருத்துவம் பார்ப்பது குற்றமா ?

அவர் மருத்துவ தொழில் செய்து அதன் தொடர்பாக தான் பணம் வாங்குகிறார் என்றால் அது குற்றமாகாது என்றும் அதே சமயம் அரசு மருத்துவமனையில் நோயாளியை சேர்ப்பது தொடர்பாக ஆதாயம் பார்த்தார் என்றால் மட்டுமே. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி மீறி தனியாக தொழில் நடக்கும் அரசு மருத்துவர்கள மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.அது சம்பந்தமான தீர்ப்பு ஒன்றை உச்சநீடிமன்றமே 2011 ல் வழங்கியுள்ளது. அது குறித்து நாளெடுகளில் வந்த செய்தி இது

Private practice by government doctors no criminal offence: court

NEW DELHI:, MAY 01, 2011 01:13 IST

UPDATED: MAY 01, 2011 01:13 IST

Private practice by a government doctor cannot be construed as a criminal offence, and at the most, departmental action

Read more at:

Private practice by govt doctors no crime: SC | India News - Times of India


HC comes down hard on Govt doctors interested in private practice

Mohamed Imranullah S.

CHENNAI , MARCH 14, 2019 02:27 IST

UPDATED: MARCH 14, 2019 02:27 IST

Orders constitution of a monitoring committee to keep a check on their attendance and performance

In a hard hitting judgement, the Madras High Court on Wednesday came down hard on doctors who enter into government service, secure admission in post graduate and speciality courses as in-service candidates, get educated at State cost, gain experience by treating poor patients in government hospitals and then leave the job for personal enrichment.

திங்கள், 7 ஜூன், 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தெந்த சலுகைகள் தேவையில்லாதவை?

 அரசு ஊழியர்களாவது குறிப்பிட்ட கல்வித்தகுதி பெற்று, குறிப்பிட்ட காலம் அதாவது 59 வயது வரை பணி செய்கின்றனர்.ஆனால் எந்த கல்வி தகுதி இன்றியும், ஒரு தடவை எம்.எல்.ஏ, , எம்.பி., அமைச்சராக இருந்தாலே, அவர் பணி செய்தாரோ இல்லையோ, அவர் உயிர் வாழும் காலம் வரை கிடைக்கும் சலுகைகள் எவை எல்லாம் தேவையற்றவை என்று பார்ப்போம்…

மக்கள் பிரதிநிதியாக சபைக்கு எத்தனை தட்வை வந்திருக்கிறார் , சபையில் பேசியிருக்கிறார் என்பது எல்லாம். கிடையாது…தங்கள் சம்பளத்தையே தாங்களே சபையில் வைத்து, தீர்மானம் போட்டு உயர்த்திக் கொள்கிறார்கள்.

அது தான் இன்றைய காலகட்டத்தில் சரி செய்ய வேண்டியது. !!

படித்தமைக்கு நன்றி

தமிழக அரசு பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியர் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் எழுத வேண்டுமென்றால் அனுமதி பெறுவது கட்டாயமா?

 அரசு ஊழியர் நடத்தை விதிகள் படி அனுமதி பெற வேண்டும்..

அனுமதி கோரும் போது, அதற்கான இணைப்புகளை வைக்க வேண்டும்.

பொதுவாக அனுமதி கொடுக்கப்பட்டு விடும்.

அனுமதி பெற்று எழுதும் தேர்வு முடிவுகள் பொறுத்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் தரப்படும்.

இன்க்ரீமெண்ட் கொடுப்பது

அடுத்த நிலை பதவி பெற்று இருப்பின் பணியை ராஜினாமா செய்ய அனுமதிப்பது.இப்படி…

ஒன்று தெரியுமா..அனுமதி பெறாமல் போட்டி தேர்வு எழுதி , தேர்வானால் தானே இது பற்றி யோசிக்கனும்ன்னு நினைக்க வேண்டாம்.

தேர்வு முடிவு முக்கியமல்ல..தேர்வு எழுதவே அனுமதி வாங்கவேண்டும்.இல்லையெனில், துறை ரீதியான நடவடிக்கையும் பாயலாம்..

அரசு ஊழியர் அரசின் முழு ஊழியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...