1973 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1973 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2022

வீட்டிலிருந்து போகும் போது வேலைக்கு போகிறேன் என்றுதானே சொல்லி விட்டு போகிறோம், பின்பு ஏன் அங்கு வேலை செய்யாமல் இருக்கிறோம்?

          இந்த கேள்வி சற்று நையாண்டித்தனமாக கேட்கபட்டிருந்தாலும் அதில் உள்ளே பொதிந்திருக்கும் ஆழமான ஆதங்கம் நமக்கு தெரிந்ததே.

        இது போன்ற விமர்சனகள் பெரும்பாலும் அரசு அலுகலகங்களிலுள்ள செயல்பாடுகள் குறித்து தான் எழுப்பப்படுகின்றன.

        சமீபத்தில் நமது மாண்புமிகு உயர்நீதிமன்றமும் இதே போன்ற ஒரு விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

        அரசு ஊழியர் ஒருவரின் தற்காலிக பணி நீக்கத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு அது. அவர் மீதான குற்றச்சாட்டு வேலை நேரத்தில் தன்னிடமிருந்த மொபைல் போனை வைத்து மற்ற ஊழியரையும் அதிகாரிகளையும் படம் பிடித்தார் என்பதும் அதை தடுத்த மேலதிகாரியை தாக்க முனைந்தார் என்பதும்.

        அலுவலக நேரங்களில் தேவையில்லாமல் செல்போன் மற்றும் கேமராக்களை பயன்படுத்தும் அரசு ஊழியர்களை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், "..இத்தகைய ஒழுக்கமின்மையும் தவறான நடத்தையும் தொடர அனுமதித்தால், வரி செலுத்துவர்களின் மூலம் நல்ல ஊதியத்தை பெறும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாவத்தைச் செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.' என்றது.


        மேலும் அரசை, அரசு ஊழியர்களின் மொபைல் போன் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை உருவாக்க சொல்லி உத்தரவுகளை பிறப்பித்தபோது,

        "அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
எல்லா சூழ்நிலைகளிலும், மொபைல் போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட வேண்டும் அல்லது அதிர்வு / அமைதியான முறையில் வைத்திருக்க வேண்டும், எந்த இடையூறும் அல்லது தொல்லையும் ஏற்படுத்தாது அதை வைத்திருக்கலாம். அலுவலக வளாகத்திற்குள் மொபைல் கேமராக்களை பயன்படுத்துவதால் பணிக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும். அலுவலகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் "கடுமையான தவறான நடத்தை" என்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு இது எதிரானது என்றும் சொல்லியுள்ளது.

D.S. Radhika v. The State Represented By Secretary to Government & Ors
    
        அந்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ள அரசு ஊழியர் ஒழுங்கு விதிகள் , 1973 ல் இயற்றப்பட்டாலும், காலத்திற்கேற்ப மாறுதல்களையும், திருத்தங்களையும் பெற்று இன்று நடைமுறையில் உள்ளது.  அதை பற்றி பார்க்கும் முன், ஒரு அரசு ஊழியரின் பணியின் முக்கியத்துவத்தை  பார்ப்போம்.  

        அரசுப் பணி  என்பது மிகவும் மகத்தானது.  அதனால் தான் அதை 'சேவை'  என்றார்கள்.  அரசின் சார்பாக செயல்படும் அவரின் செயல்பாடு அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற  பொதுவான் எதிர்பார்ப்பு மட்டுமல்ல விதிகளும் அப்படி தான் சொல்கின்றன.
\
        தனியார் துறையில் வேண்டுமானால், பணி  நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், மேலதிகாரி தொலைபேசியில் அழைத்தாலும் எடுக்காமல் விட்டுவிடலாம் என்னும் அளவிற்கு பணியாளருக்கு சாதகமான சூழல் வந்துவிட்டது..  ஆனால் அரசில் பணி செய்பவர் அதன் ஊழியக்காரர்.  அவருக்கு எந்தவிதமான பணி நேர வரைமுறையும் இல்லை.  அவர் அலுவகத்தில் பொதுவாக இருக்கும் நேரம் காலை பத்து முதல் மாலை ஐந்து எனப்படுகிறதே தவிர, அவர் ஒரு முழு நேர பணியளர்..ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் whole time exployee... இந்த விதிகள் இயற்றப்பட்ட காலத்தில் பரிமாறப்பட்ட கோப்புகளை  குறித்து தலைமை செயலகத்திலிலுள்ள ஒரு முறை  பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

         அதில் "அரசு ஊழியர்"  என்பவர் 24  மணி நேர ஊழியர்" என விளக்கம் சொல்லலாமா?  " என்று கேட்டு ஒரு குறிப்பை அந்த கோப்பில் இட்டு மேலிடத்திற்கு அனுப்புகிறார்கள்.. அங்கிருந்து , " இல்லை ..இன்று ஒரு நாள்  என்பது இருபத்தி நான்கு மணி நேரமாக இருக்கிறது.  நாளை  இது மாறினால்? அதனால் வேறு ஒரு சொற் பிரயோகம் செய்வோம்"  என்று திருப்பப்படுகிறது.  அவரை முழு நேர ஊழியர் எனலாமா?"  என அடுத்த ஒரு கேள்வி .  " வேண்டாம்...யார் அந்த அரை நேர ஊழியர்  என்ற கேள்வி வரலாம் என திருப்பப்பட்டது.. பிறகு தான்  WHOLE TIME EMPLOYEE  என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது..

        அந்த அளவிற்கு எந் நேரத்திலும் அவர் அரசு ஊழியர் தான்.  அவரின் அலுவகத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலுM  அரசின் கொள்கைக்கு எதிராக செயல்பாடுகளில் அவர் ஈடுபட கூடாது என்று தான் விதிகள் வகுக்கப்பட்டன.. 


        இதில் உயர் நீதிமன்றம் சொன்ன அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் 1973  என்னென்ன என்பது பற்றி பாப்போம்...  

  •     முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தவுடன்     அரசு ஊழியர்கள் தங்களின் அசையும்; அசையாச் சொத்துகள், நகைகள், செலுத்திய காப்பீட்டு கட்டணங்கள், வங்கி வைப்புகள், சேமநல நிதி (Provident Fund), கடன்களும் பொறுப்புகளும் (Loans and Liabilities) குறித்தான முழு விவரங்கள், குறிப்பிட்ட படிவங்களில் தங்களது சொத்து-பொறுப்பு பட்டியல்களை (Assets and Liabilities Statements) அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதற்க்கு பின்னும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒராண்டு முன்னரும், தங்கள் துறை தலைமைக்கு  சமர்பிக்க வேண்டும். 
  • அரசுப்  பணியாளர் எவரும்: வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ, அதற்க்கு  உடந்தையாகவோ இருத்தல் கூடாது அல்லது மணமகள் அல்லது மணமகனது பெற்றோர் அல்லது காப்பாளரிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பரிசம்/ வரதட்சணை கோரக்கூடாது.
  • அரசு பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதியின்றி பாராட்டுரை, பணி நிறைவு வாழ்த்துரை அல்லது பாராட்டு பட்டயச் சான்றிதழ் எதனையும் ஏற்றுக் கொள்வதோ அல்லது தன்னையோ மற்ற அரசு பணியாளரையோ சிறப்பிக்கும் முறையில் நடைபெறும் கூட்டத்தில் அல்லது கேளிக்கையில் கலந்து கொள்வதோ கூடாது.
  • அரசுப் பணியாளர் எவரும், அரசு  முன் ஒப்பளிப்பு இல்லாமல் நன்கொடைகள் கேட்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ அல்லது நோக்கம் எத்தகையதாயிருப்பினும் அதன் பொருட்டுப் பணமாக அல்லது பொருளாகத் திரட்டவோ அல்லது பிறவகையில் அது தொடர்பாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ கூடாது.
  • எந்த அரசுப் பணியாளரும் ஏதேனும் கடன் மூலப்பத்திரம், பங்கு முதல் அல்லது பிற முதலீட்டில் ஊக வணிக நோக்குடன் ஈடுபடுதல் கூடாது.
  • தனது தல அதிகார எல்லைக்குள் அமைந்த எவரேனும் ஒருவருக்கு அல்லது ஒருவரிடமிருந்து அல்லது அலுவல்முறை செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஒருவரிடம் முதன்மையாளர் அல்லது முகவர் என்ற முறையில் பணம் கொடுக்கல் அல்லது வாங்கல் கூடாது. 
  • யாரேனும் ஒருவருக்கு வட்டிக்குப் பணமாக அல்லது பொருளாகக் கொடுத்தல் அல்லது அவ்வாறு திரும்பப் பெறுதல்
  • அரசுப் பணியாளர் எவரும் தாமோ, தன்னுடைய குடும்ப உறுப்பினர் அல்லது தன் பொருட்டுச் செயற்படுபவர் மூலமாகவோ, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல்; அவரது மொத்த மாத தொகைக்கு மேற்பட்ட எந்தத் தொகையையும் தனிப்பட்ட எவருக்கும் கொடுக்கவோ அவரிடமிருந்து பெறவோ கூடாது.
  • ஆசிரியர் பணியிலுள்ள அரசு பணியாளர் ஒருவர், மாணவரிடத்தில் அல்லது முன்னாள் மாணவரின் பெற்றோரிடத்தில் அல்லது காப்பாளரிடத்தில் அல்லது தான் பணிபுரியும் பள்ளி அல்லது கல்லூரியின் பணியாளரிடத்தில் அல்லது பணியாளர் அமைப்புடன் பணப்பயன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடை செய்யப்படுகின்றார்.

        

       இது போல ஏகப்பட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.. இவற்றை மீறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். 

         இது ஒரு தனி அரசு ஊழியரின் நடத்தை குறித்த விதிகள்  என்றால், ஒரு அரசு அலுவலகத்தில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்ககூடாது என்பதற்கும் உத்தரவுகள், அரசு ஆணைகள் உள்ளன. 

           இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதால் சமீபத்தில் நம் தமிழக அரசு, எந்த மத ரீதியான படங்களையும்  அரசு அலுவலங்களில் வைக்க  கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இது போல, ஏற்கெனவே ஜூலை 18, 1968 அன்று, அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. "மதச்சார்பற்ற தன்மையை" கருத்தில் கொண்டு அரசு அலுவலங்களில் உள்ள கடவுள்களின் படங்கள் / சிலைகள் "படிப்படியாக மற்றும் ஆடம்பரமின்றி" அகற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. .

       இதையடுத்து, அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் வழிபாடு நடத்துவதைத் தடை செய்து, ‘தமிழ்நாடு அலுவலக கையேட்டில்’ திருத்தம் செய்து, 1993ல் அரசு ஜி.ஓ., பிறப்பித்தது. சுற்றறிக்கை மற்றும் G.O-வை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் உருவப்படங்கள் பல அலுவலகங்களைத் தொடர்ந்து அலங்கரிக்கின்றன இந்த உருவப்படங்களை வைத்திருக்கும் ஊழியர்கள் தினசரி தங்கள் அறைகளில் வழிபாடு செய்கிறார்கள்.



        நோபல் பரிசு வென்ற மேரி க்யுரியின் கணவர் பூயுரி க்யுரி தன ஆய்வு சாலையில் அமர்ந்து மைக்ரோச்கோபின் வழியாக எதையோ கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த அவருடைய மாணவன் மைக்ரோஸ்கொப்பை கவனிக்காமல் தன ஆசிரியர்  பிரார்த்தனை செய்வதாக எண்ணி வெளியே போக தொடங்கினார்.  க்யுரி திரும்பி பார்த்து அவராய்  கூப்பிட்டார். "நீங்கள் பிரார்த்தனை செய்வதாக எண்ணிவிட்டேன்" என்றார் மாணாக்கர். . " ஆமாம் நான் பிரார்த்தனை தான் செய்து கொண்டிருந்தேன்.  தன கடமைமையை தொழிலை அக்கறையாக செய்தால், அதுவே இறைவனுக்கு செலுத்தும் பிரார்த்தனையாகும்" என்று பதில் சொன்னார் க்யுரீ. 

 பிரார்த்தனையை தொழிலாக பார்ப்பவர் நடுவே தொழிலை பிரார்த்தனையாக பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.  அவர்கள் செய்வது தான் இறை பணி...  

மக்கள் தொண்டே மகேசன் தொண்டல்லவா?







சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...