அரசு உத்தரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு உத்தரவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஆகஸ்ட், 2021

ஜோதிடம் என்பது ஒரு அறிவியலா?

 இதே சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல பி.எம்.பார்கவாவிற்கும் வந்தது..அதுவும் அவர் எப்பேர்ப்பட்டவர் ..தெரியுமா?

டாக்டர் பார்கவா, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையததின் தோற்றுவித்தவர்/இயக்குனர்..எண்ணற்ற விருதுகள் வாங்கியவர்.இதை எல்லாம் விட முக்கியம் , ஆராய்ச்சிகள் மூலம் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கிற்காக, 1986ல் பத்ம பூஷன் அவார்டு வாங்கியவர்..

2000 வருட வாக்கில் யு.ஜி.சி ஜோதிட அறிவியல் " என்ற பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.எண்ற புது கோர்ஸை 2001 கல்வியாண்டில் வர இருப்பதாக அறிமுகப்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்ததை பார்த்து பொறுக்காமல், உடனே ஆந்திரா உயர்நீதிமண்றத்தில், "ஜோதிடம் ஒரு அறிவியல் கிடையாது..அதனால் அந்த கோர்ஸை துவக்க தடை விதிக்க வேண்டும்" என்று ஒரு ரிட் போட்டார்.அவருடன் அதில் இணைந்தவர்களில் ஒருவர் உஸ்மானியா பல்கலைக்கழக அரசியல் அறிவியல்(?!) துறையின் பேராசிரியர் சுபாஷ் சந்திர ரெட்டி..

அவர் வைத்த வாதங்களையே பாருங்கள்..

  • வேத ஜோதிடத்தின் பாடத்திட்டத்தை அறிவியல் படிப்பு என்று அழைக்க முடியாது, ஏனெனில் ஜோதிடம் ஒருபோதும் அறிவியலாக கருதப்படவில்லை. அறிவியல் என்பது அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட அறிவு என வரையறுக்கப்படுகிறது அத்தகைய அறிவின் பண்புகளில் தவறுகள் சரிபார்ப்பு மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய தன்மை அடங்கும். விஞ்ஞான உண்மைகள் தனிநபர்களின் விருப்பங்களையும் விருப்பங்களையும் சார்ந்தது அல்ல.
  • அது தவிர அறிவியல் என்பது சர்வதேசமானது. கருத்து வேறுபாடுகள் எழும் போது, ​​உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் அவற்றைத் தீர்க்க நேர்மையாகவும் விடாமுயற்சியுடனும் வேலை செய்கிறார்கள்.
  • மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் இல்லாததால், ஜோதிடத்தை ஒரு விஞ்ஞானமாக கருத முடியாது. கடுமையான அறிவியல் நடைமுறையின்படி நடத்தப்பட்ட எந்த அறிவியல் ஆராய்ச்சியோ அல்லது ஆய்வோ அதை ஆதரித்ததில்லை..
  • "ஜோதிர் விக்யான்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது, கல்வியை காவி மயமாக்குவதற்கும், உயர் கல்வியில் இந்துத்வா மதிப்புகளை திணிப்பதற்கும் அவர்களின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைத் தூண்டுவதற்கான ஒரு தெளிவான முயற்சியே.
  • தூய அறிவியல் துறைகளில் நிதி தேவைக்காக ஆராய்ச்சி பாதிக்கப்படுவதாகவும், எனவே வேத ஜோதிடம் என்ற போலி அறிவியலுக்கு பெரும் தொகையை செலவழிப்பதில் எந்த நியாயமும் இல்லை, இது ஒரு பெரிய பாய்ச்சலாகும்."

இது தான் அவர்கள் முன்வைத்த வாதங்கள்..ஆனால் ஆந்திர உயர்நீதிமண்றம், "மேற்கொண்டு இந்த பாடம் சம்பந்தப்பட்ட அறிதல் மாணவருக்கு தேவை என நிபுணர் குழு கருத்துக்கு பின்னே அரசு எடுத்திருக்கும் இந்த கொள்கை முடிவில், அதுவும் இன்னமும் முடிவாகாத நிலையில் தலையிட முடியாது" என்று தள்ளுபடி செய்துவிட்டது..

நம் விடாக்கண்டன் டெல்லிக்கு போனார்.மத்திய அரசிடம் அல்ல. உச்ச நீதிமன்றத்துக்கு..அங்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளின் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இறையாண்மை தத்துவத்துக்கு எதிராக இந்த "போலி "அறிவியலை புகுத்தி, தங்கள் இந்துத்துவா கொள்கையை மாணவர் மனதில் பதிக்க விடக்கூடாது என்றனர்.

அப்போது நடந்த வாதப்போரின் சமயம்,ஜோதிடம் என்றால் அகராதிகள் தரும் விளக்கம் ஆராயப்பட்டது.

  • "விண்மீன்களின் அறிவியல் அல்லது கோட்பாடு, முன்பு வானியலுக்கு சமமாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது போலி அறிவியலுக்கு அர்த்தத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இது மனித விவகாரங்களில் சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் ஒப்பீட்டு நிலைகளின் செல்வாக்கைப் படிப்பதன் மூலம் எதிர்காலத்தை முன்னறிவிப்பதாகக் கூறுகிறது. " [வெப்ஸ்டரின் புதிய சர்வதேச அகராதி]
  • "பூமி மற்றும் நிலையான நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் ஆகியவற்றை கவனிப்பதன் மூலம், சில நேரங்களில் விரிவான மற்றும் சில சமயங்களில் செயல்பட்டுள்ள. மனித நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் அல்லது போலி அறிவியல்",
  • ஒரு விஞ்ஞானமாக, ஜோதிடம் என்பது "பூகோள விவகாரங்களில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் செல்வாக்கைப் பற்றிய சரியான புரிதல் என்று நம்பப்படுவதன் மூலம் தனிநபர்கள், குழுக்கள் அல்லது நாடுகளின் தலைவிதியை கணிக்க அல்லது பாதிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு போலி விஞ்ஞானமாக, ஜோதிடம் நவீன மேற்கத்திய அறிவியலின் கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கருதப்படுகிறது.

அறிவியல். [என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (2 வது பதிப்பு)] "

பின்.உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம் இதோ.

  • மேற்கூறிய நிலையான புத்தகங்களின்படி, ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானமாகும், இது எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக அல்லது மனித விவகாரங்களில் சந்திரன், சூரியன், கிரகங்கள் மற்றும் பிற நட்சத்திரங்களின் தொடர்புடைய நிலைகளின் செல்வாக்கைப் படிப்பதன் மூலம் கணிப்புகளைக் கூறுகிறது. ஆகையால், அவற்றின் நிலைகள், அளவுகள், இயக்கங்கள் மற்றும் தூரங்கள் போன்றவற்றைப் படிக்க வேண்டும். வானியல் ஒரு தூய அறிவியல். இது பண்டைய இந்தியாவில் ஒரு பாடமாகப் படிக்கப்பட்டது மற்றும் மேற்கத்திய உலகில் எவரும் ஒரு பாடமாகப் படிப்பதற்கு முன்பே இந்தியா சிறந்த வானியலாளர்களை உருவாக்கியுள்ளது. ஜோதிடம் என்பது சூரியன், பூமி, கிரகங்கள் மற்றும் பிற வான கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது ஓரளவாவது அறிவியலின் படிப்பாகும்."
  • நிபுணர்களின் கருத்து படியே இந்த கல்வி தொடங்கப்பட்டுள்ளது.. நீதிமன்றம் நிபுணர் அல்ல.
  • 'ஜோதிர் விக்யான்' கற்பித்தலை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனையுடன் எந்த சூழ்நிலையிலும் சமப்படுத்த முடியாது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கருத்தை மீறும் அல்லது பாதிக்கும் என்ற அடிப்படையில் ஜோதிர் விக்யானை ஒரு பாடநெறியாகச் சேர்ப்பதை எதிர்பதற்கான எந்த தகுதியும் இல்லை, நிராகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். .
  • இதே போன்ற ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது.டாக்டர் நடராஜன் தொடர்ந்த இதே போன்ற வழக்கில், "சம்பந்தப்பட்ட மாணவர் தனது எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையையோ அல்லது பாடத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடிய சுதந்திரம் வேண்டும், ஒரு பாடத்தின் அடிப்படையோ அல்லது சில வழிபாட்டு முறையினர அதை கண்டுபிடித்ததாலோ, அது குறிப்பிட்ட மதத்தின் பிரச்சாரத்தை மட்டுமே விளைவிக்கும் என்று கருத முடியாது. என்று ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எடுத்த கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம்."
https://indiankanoon.org/search/?formInput=astrology%20is%20science

இந்த தீர்ப்பு வந்தது 2004ல்..

2011ல் ஒரு பொதுநல வழக்கு ஒன்று ஒரு என்.ஜி.ஓவால், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது..

என்னவென்று?

போலியான நியுமரால்ஜிஷ்ட, வாஸ்து நிபுணர், தாந்தரீகர்கள், கைரேகை நிபுணர், ஜோசியர் என்று. அவர்கள் சொல்வது போல, பெயரை, இடத்தை மாற்றினால், உடனே அவர்கள் வாழ்வில் மேஜிக் நடக்கும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.. அவர்கள் மீது மருந்துகள் மற்றும் மருத்துவ தீர்வுகள் சட்டம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று!!

ஆனால் மத்திய அரசு அதை மறுத்து, "இந்த சட்டம் மருந்துகள் மற்றும் மாய பரிகாரங்கள் தொடர்பான தவறான விளம்பரங்களை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜோதிடம் மற்றும் கைரேகை, வாஸ்து சாஸ்திரம் போன்ற தொடர்புடைய அறிவியல்களுடன் தொடர்புடையது அல்ல, அதைக் கருத்தில் கொண்டு, மனுதாரரால் கோரப்பட்ட ஜோதிடம் மற்றும் தொடர்புடைய அறிவியலை ஊக்குவிக்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க முடியாது" என்று சொல்லியதோடு நில்லாமல், "ஜோதிடம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் அது 4000 ஆண்டுகள் பழமையானது " என்றது..

மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜோதிடம் தொடர்பான பிரார்த்தனையைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இந்த பிரச்சினையை பரிசீலித்து "ஜோதிடம் ஒரு அறிவியல்" என்று தீர்ப்பளித்துள்ளது.அத்தோடு ஜோதிட அறிவியலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமா என்று பரிசீலிக்குமாறு 2004 இல் நீதிமன்றம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்த நீதிமன்றம் கட்டுப்பட்டது" என்று,

Astrology is a science: Bombay HC | India News - Times of India

இவ்வளவு கற்றறிந்தவர்களே "ஜோதிடம்" ஒரு அறிவியல் தான் என்று சொன்னபிறகு நான் வேறு என்னத்தை சொல்ல?

வெள்ளி, 11 ஜூன், 2021

நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. நான் 2015 ஆம் ஆண்டு பட்டம் பெற்றேன். என் சகோதரர்கள் இன்னும் யாரும் பட்டம் பெறவில்லை. நான் முதல் பட்டதாரி சான்றிதழுக்கு பதிவு செய்ய முடியுமா?-

 


  • உங்கள் பெற்றோர், அவர்களின் பெற்றோர் ஆகியோரும் பட்டதாரி இல்லையென்றால் தான், குடும்பத்தின் முதல் பட்டதாரி சான்று வழங்கப்படும்.
  • இதற்காக அவர்களின் கல்வி சான்றை , சகோதரர்கள் சான்றுடன் மனுவில் இணைக்க வேண்டும்.
  • உங்கள் தாத்தா பாட்டியின் கல்வி தகுதி குறித்த சான்றை பெரும்பாலும் அதிகாரிகளால் விசாரிக்க முடியாததால், அது குறித்து உங்கள் பெற்றோர் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...