சனி, 12 ஜூன், 2021

விவாகரத்து வழக்கில் நீதிபதி முன்பு ஆஜராகி நிற்கும் பொழுது பெண் வாழமாட்டேன் என்கிறாள், ஆணோ என் மனைவி தான் வேண்டும், பிரிய மனமில்லை என்கிறான். இப்போது தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும்?

 பெரும்பாலும் பெண்ணுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
 அப்படி ஒரேயடியாக எடுத்துக் கொள்ள முடியாது. விவாகரத்துக்கு கென்று சில காரணங்கள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றையாவது நிரூபித்தால் தான் விவாகம் ரத்து ஆகும்.பெரும்பாணமயான் வழக்குகளில் மனரீதியான கொடுமையைத்தான் சொல்வார்கள். அதை நிரூபிப்பது கடினம் என்பதால்தான் இந்த வழக்குகள் இழுத்துக் கொண்டே போகும்.இதனால் இரண்டு தரப்பிலும் மனஉளைச்சலோடு இருக்க வேண்டும்.
எதற்கு இந்த நிலையற்ற வாழ்வில் இவ்வளவு மனத்துயரம்? நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிட்டாலும், அல்லது விவாகரத்துக்கொடுக்க மறுத்தாலும், உடன் இரணடு பேரும் சந்தோஷமாக வாழத்தொடங்க முடியுமா? இதில் நீதிமன்றத்தின் பங்கு குறைவே. மற்ற வழக்குகள் போன்றதல்ல இது.
இதைப் புரிந்துக் கொண்டு இரண்டு தரப்பிலும் சுமூகமாக அணுக வேண்டும்..இங்கு ஆண் மணவியோடு தான் வாழுவேன் என்று நீதிமன்றத்தில் சொன்னால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியில் இறங்கி சாதிக்க வேண்டும். இதுகுறித்து கீழே உள்ள பதிவில் சொல்லியுள்ளேன். அதன்படி செயல்படுங்கள். வாழ்த்துக்கள்!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...