முதலில் கிரய பத்திரம் என்றால் என்ன..
இன்னார் அவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னாருக்கு இன்னின்னதை பெற்றுக்கொண்டு தன் உரிமையை மாற்றிக் கொடுக்கிறார் என்பது தானே…
அதை எழுத்து மூலமாக்கும்போது, தன் உரிமையை மாற்றி கொடுப்பவர் கையெழுத்து அல்லது கைரேகை இருக்க வேண்டும் தானே?
அந்த ஆவணங்கள் சரியான முறையில் தான் தயார் செய்யப்பட்டுள்ளன அதாவது எந்த ஏமாற்றுதல் இல்லாமல் தான் அந்த சொத்தின் உரிமை மாற்றத்தை ஒப்புக்கொண்டு உரிமைக்காரர் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார் என்பதை உறுதிபடுத்துவதுதான் அதனை பதிவு செய்வது. கையெழுத்தே இல்லை என்றால் பதிவு எதற்கு? அப்புறம் அந்த பதிவு செல்லுமா என்ற கேள்வி தான் எதற்கு?
இதற்குத்தான் அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான அடிப்படை சட்ட அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.