NBE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NBE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 மார்ச், 2022

வெளிநாட்டில் மருத்துவம் படித்த பலர் இந்தியாவில் நடத்தப்படும், பயிற்சி மேற்கொள்வதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் திணறுவதற்கு காரணங்கள் என்ன?

            ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க 
வெளிநாட்டிற்கு  சென்ற நிலையில் உக்ரைனில் தொடங்கிய 
போரினால்,  அவர்கள்  உடன் நாடு திரும்ப வேண்டிய 
கட்டாயத்தில்  திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய 
அமைச்சர் ஒருவர், "வெளி நாட்டில் மருத்துவம் படிக்கும் 
மாணவர்களில் 90% பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதி 
தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை" என்று சொன்னது நிறைய 
விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 
தேசிய  தேர்வுகள் போர்டு நடத்துகின்ற , இந்தியாவில் மருத்துவராக பயிற்சி பெற தேசிய  மருத்துவ கமிஷனால் கட்டாயமாக்கபட்ட  வெளிநாட்டு மருத்துவ  பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வு அதை சுருக்கமாக FMGEயில்  பெற்ற தேர்ச்சி விகிதங்களை பார்த்தோமேயானால், அவர் 
கூறியது உண்மை என்றே கூற வேண்டும் .

             2019 ல்    25.79 % பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றபோது,     2020ல்    14.68% பேரும்   2021ல்   23.83% தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதற்கும் முந்தைய ஆண்டுகளில் இந்த தேர்ச்சி விகிதம் இன்னமும் குறைவாக இருந்தது.    ஆண்டுதோறும் சராசரியாக 20% பேர் தான் தேர்ச்சி பெறுகின்றனர் என்கிறது NMB புள்ளிவிவரம்  
            

        அதுவும் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய 
கட்டாயம், ரஷ்யா, உக்ரைன், சீனா,. பிலிப்பைன்ஸ், 
பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் பயின்ற 
பட்டதாரிகளுக்கு மட்டுமே.  இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து, 
ஆஸ்திரேலியா நாடுகளில் பயின்ற MBBS  பட்டதாரிகள் 
தேர்வெழுத தேவையில்லை.   

            ஏன் இந்த பாரபட்ச்சம்? ஏன் இந்த தகுதி தேர்வு 
கட்டாயமாக்கப்பட்டது ? என்ற கேள்விக்கு  NBE இன் முன்னாள்
நிர்வாக இயக்குனர் டாக்டர் விபின் பாத்ரா கூறுகையில், 1998-99
ஆம் ஆண்டில் தான், ஸ்கிரீனிங் தேர்வு பற்றிய யோசனையே
வந்தது, என்றும், அதற்கு முன்பு , இது ஒரு இராஜதந்திர சாளரமாக
இருந்தது என்பதால் முந்தைய USSR மற்றும் பின்னர் CIS
காமன்வெல்த் ஆஃப் சுதந்திரமான நாடுகள் ) இல் முதுகலை
மருத்துவக் கல்விக்கு மாணவர்களை அரசாங்கம்
பரிந்துரைக்கும். இந்த நிலைமை படிப்படியாக வணிக
முயற்சியாக மாறி, அந்த பிராந்தியத்தில் அதிகமான கல்லூரிகள்
இந்திய மாணவர்களுக்கு தங்கள் கதவுகளைத் திறந்தன.

            மருத்துவக் கல்வியில் DEMAND AND SUPPLY பொருத்தமின்மை
இந்தியாவிற்கு எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து
வருகிறது. இங்குள்ள தேவைக்கேற்றவாறு மருத்துவ கல்வி பெற,
இந்திய மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்வது
அதிகரித்துவிடவே, 1998 ஆம் ஆண்டில், MCI முதன்முறையாக
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளின் அங்கீகாரத்தை ரத்து
செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது, ” என்கிறார்.

        1998 இல் பொக்ரான் அணுகுண்டு சோதனை ஒரு
பின்னடைவைப் பெற்றது. அப்போது நாட்டிற்கு பொருளாதாரத்
தடைகள் இருந்தபோது, ரஷ்யா மட்டுமே இந்தியாவுடன் நின்ற
ஒரே நாடு. இந்தியாவுடன் நின்ற ஒரு நாட்டின் பட்டங்களின்
அங்கீகாரத்தை நீக்குவதற்கு எதிராக நிறைய இராஜதந்திர
அழுத்தம் இருந்தது, எனவே இறுதியாக, 2001 இல், ஒரு நடுத்தர
பாதை வகுக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவ கல்வி பெறும்
பட்டதாரிகளுக்கு ஒரு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோரை
மட்டுமே இந்தியாவில் மருத்துவம் பயில அனுமதிக்க முடிவு
செய்யப்பட்டது.


            இருப்பினும், இந்த தகுதி தேர்வும் சில எதிர்ப்பை சந்தித்தது.
சில மருத்துவப் பட்டதாரிகள், மருத்துவப் பாடங்களில் மட்டும்
கேள்விகள் இருக்க வேண்டும் என்றும், கேட்கப்படும் கேள்விகளின் வரம்பைக் குறைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பில், அந்த தேர்வில் பங்கு பெறுவதற்கான எண்ணிக்கையை அகற்றுவது உட்பட சில தளர்வுகளை அனுமதித்தது. அதன்படியே, முதல் FMGE 2004 மார்ச்சில் நடந்தது, இது கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

            அப்படியானால், இ ந்தத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய
பிறகு கிட்டத்தட்ட 80 சதவீத பட்டதாரிகள் என்ன செய்வார்கள்?
இது குறித்து 'தி பிரிண்ட்' ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில்
கலந்துக கொண்ட வெளிநாட்டு பட்டதாரிகள் FMGE க்கு
விண்ணப்பிக்கும் போது NBE உடன் ' தகவல்களை
வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டதால், தங்களை
பற்றிய விவரங்களை மறைத்து கொண்டு, இந்த
கருத்துக்கணிப்பில் பங்குபெற்றனர். ஆய்வில், சிலர்
மருத்துவத்தைத் தொடர வேண்டும் என்ற தங்கள் கனவைக்
கைவிட்டு, வேறு வாழ்க்கைப் பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள்
என்றும் மற்றவர்கள் எப்படியாவது அந்த தேர்வில் தேர்ச்சி
அடைய வேண்டும் என்று தங்கள் முயற்சியை தொடர்கிறார்கள்
என்றும் தெரிய வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம்
என்னவென்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, FMGEக்கான
முயற்சிகளின் எண்ணிக்கையில் தான் வரம்பு இல்லையே. .
            

        ஏன் இந்த தகுதி தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற
முடியவில்லை என்ற காரணத்தை கேட்ட போது,
  •    வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் இல்லாதது: "NBE ஆல் தங்களுக்கு எந்த புத்தகங்களும் பரிந்துரைக்கப்படவில்லை. தேர்வுக்கு தயாராகும் போது குறிப்பிடக்கூடிய வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் எதுவும் இல்லை என்பதால் தேர்வை கடினமாக்குகிறது." என்றார்கள். அதில் சிலர் பத்து வருடங்களாக தேர்ச்சி பெற மோற்சித்து கொண்டிருப்பவரும் உண்டு.
ThePrint தொடர்பு கொண்ட கல்வி ஆலோசகர்கள் கூறுகையில்,
  • தேர்வில் தேர்ச்சி பெறுவதில் பல முறை தோல்வியடைந்த பிறகு, பெரும்பாலானவரகள் மாற்றுத் தொழில்களை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தங்கள் பாதையை மாற்றிகொள்கின்றனர் என்று கூறினர்.
  •  இந்த வெளிநாட்டு பட்டதாரிகள் இந்த தேர்விவில் தேர்ச்சி பெறாமல் இந்தியாவில் பயிற்சி செய்ய முடியாது என்றாலும் அவர்கள் படித்த நாட்டில் பயிற்சி செய்யலாம். வசதியும், தொடர்பும் உள்ளவர்கள், சீனா, ரஷ்யாவில் இன்டர்ன்ஷிப் பெற்று, பிறகு அங்கு பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள் அத்தகைய வாய்ப்புகளைப் பெற முடியாத மற்றவர்கள், மாற்றுத் தொழில் பாதையை மேற்கொள்வார்கள் அல்லது தொலைதூரப் பகுதிகள், கிராமங்கள் அல்லது சிறிய நகரங்களில் உரிமம் பெற்ற வல்லுநர்கள் தேவைப்படாத கிளினிக்கில் பணிபுரிவார்கள். என்றாலும் இது தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் சாத்தியமாக இருந்தது இப்போதைய சூழ்நிலையில் அதுவும் உக்ரைனில் போர் நடந்து வரும் போது, அங்கு நிலைமை எப்போது சீராகும் என்பதும் தெரியாத நிலையில் உள்ள போது , அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன என்கின்றனர்.

            பெரும்பாலானவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற மீண்டும்
மீண்டும் முயற்சி செய்கிறார்கள் ஆனால் அதில் தேர்ச்சி பெற
முடியாதவர்கள் இந்தியாவில் தங்க வேண்டியிருந்தால் அது
தொடர்பான தொழிலை மேற்கொள்கின்றனர். முடிந்தவர்கள்
மருத்துவம் செய்யக்கூடிய நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
            

            மேலும் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு ஸ்கிரீனிங் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்று விதித்துள்ளது இந்தியா மட்டும்
அல்ல, இன்னும் சில நாடுகளும் உண்டு. இந்தியாவில் இருந்து
செல்லும் மருத்துவ பட்டதாரிகளை யுனைடெட் ஸ்டேட்ஸ்
மெடிக்கல் லைசென்சிங் எக்ஸாமினேஷன் எழுத வேண்டும்
என்று அமெரிக்காவும் கோருகிறது. .

            மேலும் இந்த தகுதி தேர்வு மிகவும் கடினமாக இருப்பதற்கு
ஒரு காரணம் உள்ளது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த
வெளிநாட்டு மருத்துவ படிப்பின் தரம் குறித்து , வெளிநாட்டு
மருத்துவ பட்டதாரிகளுடன் பணிபுரிந்த அனுபவம் உள்ள
மருத்துவர்கள் கூறும்போது , ஸ்கிரீனிங் தேர்வில் தேர்ச்சி
பெறுபவர்கள் கூட பெரும்பாலும் மருத்துவ மற்றும் நடைமுறை
திறன்களில் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். தில்லியின்
இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த
மருத்துவர் ஒருவர் தி பிரிண்டிடம் கூறுகையில், “நோயாளியின்
மீது கானுலாவைக் கூட வைக்க முடியாத பட்டதாரிகளை தாங்கள்
சந்திக்க நேரிட்டஷாக கூறியுள்ளனர்.

        மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளராக
இருந்த போது மருத்துவக் கல்வித் துறையை யைக் கையாண்ட
முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் டாக்டர் விஸ்வாஸ்
மேத்தா ThePrint இடம் கூறியதாவது: “தான் ஆர்மீனியா, ஜார்ஜியா
மற்றும் ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்ற
போது, அங்கு நுழைவுத் தேர்வு இல்லை, மற்றும் கட்டணம்
நியாயமானதாக இருப்பதால், நிறைய பேர் அங்கு மருத்துவம்
படிக்க சென்றனர் என்றாலும், அங்குள்ள சட்டங்கள் மிகக்
கடுமையாக உள்ளன, என்பதால், மாணவர்கள் நோயாளியைத்
தொட அனுமதிக்க மாட்டார்கள், எனவே அவர்களுக்கு ஒரு
வடிகுழாய் அல்லது ஊசி போடுவது அல்லது பிரசவம் செய்வது
எப்படி என்று தெரியாது." என்று சொல்லியிருக்கிறார்.
            

        "வெளிநாட்டு மருத்துவ கல்வியின் தரநிலைகள் மிகவும்
வேறுபட்டவை. மேலும், அவர்களின் பட்டங்களை
அங்கீகரிப்பதற்காக இந்த நாடுகளுடன் பரஸ்பர ஏற்பாடு எதுவும்
இல்லை". அதனால் தான் இந்த தகுதி தேர்வு மிகவும் கடினமாக
இருக்கின்றது என்று கூறுகின்றனர் அனுபவம் வாந்தவர்கள்.
          

          இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள்
கிராமப்பறங்களில் வாழ்கின்றனர். தங்களின் அடிப்படை
உரிமைகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லாதவர்கள்.
அவர்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட மருத்துவ தொழிலை
மேற்கொள்ள இருக்கும் நபருக்கு தகுதிகளை நிர்ணயம்
செய்வதில் அரசு காட்டும் கடினத்துவம் நியாயமானதாகவே
இருக்கின்றது. அதே சமயம் நம் இளைய சமுதாயத்தின்
புத்திக் கூர்மையிலும் சந்தேகமில்லை. அவர்கள் இந்த தகுதி
தேர்வில் தேர்ச்சி பெறும் விகிதம் வரும் காலங்களில் கூடும் என்று
நம்புவோம்.

         

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...