பாகப் பிரிவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகப் பிரிவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 டிசம்பர், 2021

பாகப்பிரிவினை செய்வதற்கு முன்பே ஒருவர் சொத்தை வாங்கினால் என்னவாகும்?

 



பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஒருவர் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம், டிவைடென்ட் வழங்குவதாக அறிவித்து ஒரு குறிப்பிட்ட நாளை ரெக்கார்டு தேதியாக குறிப்பிடும். அந்த தேதியில் தான் அந்த பங்குகளை யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று சரிபார்த்து அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும். அதனால் அந்த தேதி வரை அந்த நிறுவன பங்குகள் மார்க்கெட்டில் வேகமாக ஏறிக்கொண்டேயிருக்கும். நிறைய பேர் அதை வாங்க முன் வருவார்கள்.. ஆனால் அதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், அந்த ரெகார்ட் தேதிக்கு முந்திய தினத்தில் யார் பெயரில் அந்த பங்குகள் உள்ளதோ அவருக்கு தான் அந்த தொகை கிடைக்கும். அந்த பங்குகளை அந்த தேதியில் யார் வாங்கியிருந்தாலும் அவருக்கு அது போய் சேராது...ஏனெனில் எந்த பரிவர்தனையும், அந்த நிறுவனத்தின் கணக்கிற்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், ரெகார்ட் தேதியில் வாங்கியவரின் பெயர் இருக்காது இதன் மூலம், அந்த பங்குகளை விற்றவருக்கு இரட்டிப்பு யோகம் அடிக்கும்.

ஒரு விதத்தில், பாகப்பிரிவினை செய்யப்படாத பங்கினை வாங்குபவரின் நிலையு ம், அது போன்ற நிறுவன பங்கினை வாங்குபவர் நிலையை ஒத்து இருக்கும்.

பாகம் பிரியம் போது தான், வார்சுகளில் யாருக்கு எந்த பகுதி நிலம் அல்லது சொத்து கிடைக்கும் என்பது உறுதியாகும்.

அதுவரை பிரிபடாத சொத்தின் கூட்டு உரிமையாளர்களாக தான் பங்காளிகள் இருப்பர். அந்த சமயததில் அந்த சொத்தை வாங்குவதென்றால், அனைவரும் மொத்தமாக கிரயம் செய்யலாம்.

அப்படியில்லாமல், பாகப்பிரிவினை செய்வது காலதாமதம் ஆகிறது என்று, பிரிபடாத கூட்டு சொத்தில், தன் பங்கை விற்கின்றனர். இதில் கிரயம் பெற்றவருக்கு, சில பிரச்சினைகள் உண்டு.

பாகப்பிரிவினை செய்யப்படும் சொத்தின் உரிமையுள்ளார் ஒரு குடும்பததை சேர்ந்தவராக இருப்பர். கிரயம் கொடுத்தவருக்கு உள்ள அதே உரிமை தான், அதை பெற்றவருக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் அது சாத்தியப்படாது. அவர்கள் ஒதுக்கும் பகுதியையே பெற்றுக்கொள்ள நேரிடும். கிரயம் கொடுத்தவர் தான் அவர்கள் குடும்ப உறுப்பினர. அவருக்காக சில விட்டுக்கொடுத்தல்கள் பாகப்பிரிவினையின் போது இருக்கும். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் மூன்றாம் நபருக்கு அதே சலுகை கிடைக்காது. இவரும் அதை உரிமையாக கோர முடியாது. இவருக்கு தான் முழுமையாக அடையாளப்படுத்தாத சொத்தின் ஒரு பகுதியை தானே பெற்றுள்ளார். அதுவும் பிரிக்கும் சக பங்காளிகள் ஒன்றாய் இருக்க, இவர் மட்டும் தனித்து இருப்பார். வேண்டுமானால் பாகப்பிரிவினை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சியாக தான் அமையும்.அது அவருக்கும் நல்லதல்ல.

அப்படியானால் என்ன தான் தீர்வு?

சம்பந்தப்பட்டவருக்கு உரிமையான பங்கு பாகபிரிவினையின் போது பெறும் வரையில் காத்திருந்து அவரிடமிருந்து வாங்கலாம்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...