புதன், 23 ஜூன், 2021

பாதையை பஞ்சாயத்துக்கு எழுதி வைக்க வழிமுறைகள் என்ன?

 வரப்புக்காக சண்டைபோட்டவங்க நிலத்தையே வித்து கேசு நடத்துனாங்குலாம்"ன்னு கிராமத்திலே ஒரு பேச்சு வழக்கு இருக்கு.

இந்த பொது பாதை, வாய்க்கால் வரப்பு மீதான உரிமை இவைஎல்லாம் கிராமங்களில் ஒரு உரிமையோடு கூடிய கவுரவப் பிரச்சினையாக மாறி அதுவே சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகி, கொலையிலும் போய் முடிந்து விடுகிறது.

அரூவா மீசை….. கொடுவா பார்வை… ஆறுமுகம் தான் கைய வச்சா தூள் ….…….ன்னு நம் ஊர்களில் முன்பு பட்டைய கிளப்பிக்கிட்டு இருந்த இதெல்லாம் குறைந்து, இப்போது தான் மக்கள் சுய உனர்வுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

என் பாதை என் உரிமை என்பதெல்லாம் கிடையாது……இன்னொருவரின் நிலமாக இருந்தாலும், அதில் ஒருவருக்கோ, அல்லது, பொதுவாகவோ நடந்து செல்லும் உரிமையை தருவது தான் இந்திய வசதியுரிமைகள் சட்டம், 1882

நன்றி கூகிள் அண்ணா..

இந்த உரிமை கிடைக்கவேண்டும் என்றால், சில நிபந்தனைகள் உண்டு.என்னென்ன?

  • காலம் காலமாக அந்த ஊரே அந்தப் பாதையை தான் பயன்படுத்துதுனால்.
  • அப்படியில்லை சம்பந்தப்பட்ட நிலத்துக்காரர் கிட்ட அனுமதி வாங்கி, (அது எழுத்து மூலமா இருந்தால் நல்லது) உபயோகம் பண்ணினோம் என்றால்.
  • நாங்க எங்க முப்பாட்டனார் காலத்திலே இருந்து அது வழியாதான் போறோம்ங்கிரீங்களா? குறைஞ்சது ௨௦ வருஷமாவது அப்படி உபயோகம் பண்ணியிருக்கணும். இந்த ௨௦ வருஷம்ன்கிறது தொடர்ச்சியா இருக்கணும்.

இதுலே ஒன்னை டிக் அடிச்சீங்கன்னாலும் , அந்த பாதை வசதி உரிமை உங்களுக்கு வந்துடுது.

இன்னொரு முக்கியமானது அந்த பாதையை தவிர்த்து வேறு பாதை உங்கள் நிலத்துக்கு போறதுக்கு இருந்தா, இந்த உரிமையை கேட்க முடியாது.

பொதுவாக நிலங்களை பிரித்து பிளாட் போடுபவர்கள், அதில் ஒரு பொது பாதை எனக் குறிக்கப்படுவதை அந்த ஊர் பஞ்சாயத்துக்கு எழுதி கொடுப்பது வழக்கம். அதை ஒரு செட்டில்மென்ட் பத்திரம் மூலமா செய்யலாம்.

இன்னொன்னும் இங்கே சொல்லனும். பாதை அவங்களோடது , பயணம் மட்டும் தான் நம்மோடதுன்னு இருந்தால் மேற்கொண்டு வம்பும் இல்ல, வழக்கும் இல்ல.

ஆமாஞ சொல்லிட்டேன்.அப்புறம் என்னை வந்து குத்தம் சொல்லப்படாது………

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...