சனி, 12 ஜூன், 2021

உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ சோதனை) உண்மையில் பயன் உள்ள ஒன்றா? ஏன் உச்ச நீதிமன்றம் அதனை தடை செய்திருக்கிறது?

 

போலிக்ராப் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை 9௦ சதவீதம் வெற்றிகரமானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான அதாரம் இல்லை என தேசிய ஆராய்ச்சி கவுன்சில், சொல்லியுள்ளது. அமெரிக்க மனோவியல் சங்கமும் "பெரும்பான்மையான உளவியலாளர்களும் இந்த சோதனை பொய் சொல்வதை சரியாக கணிக்கிறது என்பதற்கு சிறிதளவு சான்றே உள்ளது என ஒத்துக்கொண்டுள்ளனர்" என்று சொல்லியுள்ளது.

மான்புமிகு உச்ச நீதிமன்றமும் நார்கோ சோதனை., போலிக்ராப் சோதனைகள் குற்றவாளிக்கு செய்வது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. .குற்ற வழக்குகளில், இவற்றை வலுக்கட்டாயமாக குற்றவாளிக்கு செய்யப்படுவதை அனுமதித்தால் , அது போலிசாரின் நடவடிக்கையின தரத்தை பொறுத்து, வழுக்கும் உச்சியின் முதல் படியாகும்" என்று கூறியுள்ளது. என்றாலும், சம்மதத்தின் பேரில், தகுந்த பாதுகாப்புகளுடன் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...