அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதியில் உள்ள மிகச்சிறந்த ஓவியங்கள், ஓவியர் நந்தலால் போஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட கலைப்படைப்பு.. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு ஃபிரேம் போட்டது போல அமைத்தும், ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும், நந்தலால் போஸ் நமது தேசிய கலாசார அனுபவத்திலிருந்து சில காட்சிகளை சித்தரித்திருந்தார்.
வேத காலத்தை குறிப்பிடும் வகையில், குருகுலத்தின் ஒரு காட்சி , ராமர், சீதா மற்றும் லட்சுமணன் நாட்டிற்குத் திரும்புவதும்,
கிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிப்தும் போன்ற காட்சிகள் உள்ளன.
அவை மட்டுமல்ல புத்தர் மற்றும் மகாவீரரின் வாழ்க்கை சித்தரிப்புகள் உள்ளன.
அதைத் தொடர்ந்து அசோகா மற்றும் விக்ரமாதித்யா நீதிமன்றங்களின் காட்சிகள் உள்ளன.
நமது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அக்பர், சிவாஜி, குரு கோபிந்த் சிங்,
திப்பு சுல்தான், மற்றும் லட்சுமிபாய் ஆகியோர் படங்களும், சுதந்திர இயக்கத்தின் போது மகாத்மா காந்தியின் தண்டி அணிவகுப்பு
மற்றும் அமைதி வேண்டி அவர் நடத்திய நோகாலி சுற்றுப்பயணம் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் வெளிநாட்டிலிருந்து மகாத்மாவுக்கு வணக்கம் செலுத்துவதும்,
இந்தியாவின் விடுதலைப் போரில் அவரது ஆசீர்வாதங்களைக் கோருவதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அவை மட்டுமா …நமது நிலப்பரப்பின் அழகிய விளக்கங்களும் நமது கலையின் சில தலைசிறந்த படைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் பார்டர்களுக்கும் பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் கூட சாந்திநிகேதன் பாணியை எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால் இவை அனைத்தும் அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதியாக இல்லாமல். இந்திய கலாச்சாரத்தின் உதாரணங்களாகத் தான் பயன்படுத்தப்பட்டன..
அதே சமயத்தில், இந்த அசல் அரசியலமைப்பு சட்டத்தின் உண்மை நகலை பிரேம் பெஹாரி நாரியன் ரைசாடா என்பவரால் தன் கைப்பட காலியோஃக்ராபி முறையில் எழுதப்பட்டது என்பதையும் நினைவு கூர்வோம்.. அவர் பாரசீக மற்றும் ஆங்கிலம் ஒரு பிரபலமான அறிஞர் (தாத்தா) குடும்பத்தில் டபிறந்தவர். இந்த பணியைப் பெற ஒரு பென்னி கூட சம்பளமாக அவர் பெறவில்ல. அதற்கு பதில் தன் பெயரை ஒவ்வொரு பக்கத்திலும் இட்டுக்கொள்ள அனுமதி பெற்றுக் கொண்டார்.
அரசியல் சட்ட உண்மை நகலை பார்க்க ஆவலா? இங்கே பாருங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக