இந்து வாரிசுரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து வாரிசுரிமை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2022

எனது அண்ணன் மகன் இறந்து விட்டார் அவரது பெயரில் உள்ள வீடு அவரது சட்ட படியான வாரிசுகள் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது தந்தையாகிய எனது அண்ணன் உயில் எழுதி வைக்கலாமா?

நம் நாட்டில் சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்ததே. ஆனால் நீங்கள் எந்த மதம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இருந்தாலும், மூர்த்தி பெரியசாமி, நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் என்ற எண்ணத்தில் கீழே பதில்:

        உங்கள் அண்ணன் மகன் இறந்து விட்டார். அவர் சொத்துக்களுக்கு  உங்கள் அண்ணன் உயில் ஏதும் எழுதி வைப்பதா? முதலில் அவருக்கே அந்த சொத்தில் உரிமை இல்லை.... அது தெரியுமா அவருக்கு?!

        இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 8 ன் படி, உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு இந்து ஆணின்  சொத்துகளை அவரின் சட்டப்பூரமான வாரிசுகள் என்று,  முதல் பட்டியலில்  இருக்கும், அவர் மனைவி, பிள்ளைகள், அவர் தாயார் என்று சமமாக  பங்கு பிரித்து கொடுக்கப்படும். 

    இந்த வாரிசுகள் யாரும் இல்லையென்றால் மட்டுமே அவரின் தந்தைக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளது. (இப்படியிருக்க உயிலாவது, எழுதுவதாவது!!.....

    உடனே...என்ன.".என் அண்ணன் சொத்தில் அவன் பிள்ளைக்கு பங்கு இருக்கும் போது, பிள்ளை சொத்தில் அவன் அப்பாவுக்கு பங்கில்லையா?"  என்று பொங்கக் கூடாது!! இதுவே ஒரு இந்து பெண் உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால், அவளின் பெயரில் உள்ள சொத்து எப்படி பங்கிடப்படும் தெரியுமா?

    அவள் பிள்ளைகள் மற்றும் கணவனுக்கு சமமாக..

அவர்கள் யாரும் இல்லையென்றால், அடுத்து அவள் கணவனின் வாரிசுகளுக்கு: அவர்களும் இல்லையென்றால் தான் அவள் அப்பாவின் வாரிசுகளுக்கு இல்லை அம்மாவின் வாரிசுகளுக்கு...இந்த வரிசையில் தான் சொத்து போய் சேரும்.

        ஆனால் இதுவே அந்த சொத்து அவள் பெற்றோர் மூலமாக பெற்றது என்றால், அவள் பிள்ளைகளுக்கும், அவர்கள் இல்லையென்றால், அவள் அப்பாவின் வாரிசுகளுக்கும் போகும்.

        அதுவே அந்த சொத்து அவள் மாமனார், மாமியாரிடமிருந்து பெற்றிருந்தால், அவள் பிள்ளைகளுக்கு முதலிலும், அவர்கள் இல்லையென்றால்,  அவள் கணவனின் வாரிசுகளுக்கு போய் சேரும்.

        இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிரானது, பாலின பாகுபாடு காட்டுகிறது என்றெல்லாம் சொல்லி, வழக்கு போட்டார்கள்.. "அதெல்லாம் சரியாகத்  தான் இருக்கிறது.  எங்கிருந்து வந்ததோ அங்கேயே தான் போய் சேர வேண்டும்" என்று சொல்லி விட்டது நீதிமன்றம்...வேறு என்னத்தை சொல்ல!!

        இந்த பதிலை முடிக்கும முன் என் சிறு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.   இன்றைய உலகில் மலிவாக..இல்லையில்லை இலவசமாக  கிடைப்பது இன்னொருவருக்கு கொடுக்கும் அறிவுரை தான். ஆனால்  அதையே பனம்  கொடுத்து  நாம் பெற்று கொள்வது டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் தான். ஏனெனில் இரண்டுமே அவர்களின் உயிரையே குடிக்கக் கூடியது. அதே சமயம், ஆலோசனை/அறிவுரை சொல்லும் மருத்துவரும்  வழக்கறிஞரும் தங்களை,  கண நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தத்தம்  துறையில் பயின்றுக்  கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் , அவர்கள் செய்யும் தொழிலுக்கு PRACTISE எனப்பட்டது. 

        அப்படிப்பட்ட கடினமான ஒரு துறையில் ஒருவர் சந்தேகம் கேட்கும் போது, அது பற்றிய விஷய  ஞானம் இல்லாமல்  சிலர் பதில் கூறுவது சரியானதல்ல.  அதை  விவரமில்லாத பலர் நம்பி ஏமாறக்  கூடும்..வழி மாறி போகக் கூடும்!!

( இஸ்லாந்து  எங்கேயிருக்கிறதுன்னு கண்டுபிடிககிறதுகுள்ள...!!)

  

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

என் தந்தை வாரிசு சான்றிதழ் பெற என் பெரியப்பா சம்மதிக்கவில்லை. அதை சட்டப்படி பெற ஏதாவது வழி இருக்கிறதா?

 ஒருவர் இறந்தபின், அவருக்கு இன்னின்னார் தான் வாரிசுகள் என்று அரசு கொடுக்கும் சான்றிதழ் தான் சட்டப்படி செல்லுபடியாகும்.

உங்கள் தந்தைக்கான வாரிசு சான்றிதழ் பெற அவரின் வாரிசு என்ற முறையில் பெற, உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு வேறு நபரின், அது உங்கள் பெரியப்பா என்றாலும் அவரின் சம்மதம் தேவையில்லை. 

ஒருவேளை உங்கள் தாத்தாவின் வாரிசு சான்று  பற்றி கேட்கிறீர்கள் என்றால் அதை பெற உங்கள் பெரியப்பா ஒத்துழைக்க வில்லையென்றால் உங்கள்  தந்தை வடடாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யலாம்.அவர்களே சம்பந்தப்பட்டவரை விசாரித்து சான்று வழங்குவர்.

வாரிசு சான்று பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, தாசில்தார் அலுவலகத்தில் மனு செய்து அதை பெறலாம்.



வியாழன், 16 டிசம்பர், 2021

என் தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை அவர் இறந்த பிறகு, என் அப்பா உட்பட 4 பெரியப்பா, பாகப்பிரிவினை பத்திரத்தின் மூலம் பங்கு பிரித்து கொண்டனர். இப்பொழுது என் அப்பாவின் பெயரில் உள்ள பங்கை, அப்பா என் பெயருக்கு மாற்றும்போது, என் சகோதரி கையெழுத்து அவசியமா?

 நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், பெரும்பான்மையோர் பின்பற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற அனுமானத்தில் விடையளிக்கிறேன்.

இந்து வாரிசு (திருத்தம்) சட்டம், 2005 மூலம் மூதாதையர் சொத்தில் பெண்களுக்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், பரம்பரை சொத்திற்கு உங்களோடு சேர்ந்து உங்கள் சகோதரியும் இணையான உரிமையாளர் என்ற அந்தஸ்தையும் வழங்குகிறது.
 இதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனம்மா v. அமன் & ஓர்ஸ்.; (2018)3SCC343. என்ற வழக்கில் உறுதிப்படுத்தியும் உள்ளது.

என்ன சட்டம் இயற்றினாலும், ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கும்போது உங்கள் அப்பா, பூர்வீக சொத்தை உங்கள் சகோதரியை தவிர்த்து விட்டு உங்களுக்கு மட்டும் கொடுக்க விரும்புவது பெரும்பாலோரின் மனப்பான்மையை ஒட்டியது தான் என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்..

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஆண் மட்டுமே தன சந்ததியை கொண்டு செல்பவன் என்பதால் ஆண் பிள்ளையை மட்டுமே வாரிசாகப்  பார்க்கும் வழக்கம் இன்று நேற்றல்ல, முற்காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்று தங்கள் செயலுக்கு நியாயம் சொல்வார்கள்.

ஆனால் வேத காலப் பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் தான் புதிதாக இந்த உரிமைகளை பெண்களுக்கு கொடுத்தன என்றும் . ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. அதற்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது மனுஸ்மிருதியை தான். 

ஆனால் மனு கூட , பெண்களின் தனியுரிமைகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கண்டிக்கவில்லை
வரலாற்றை பார்க்கும் போது, வேத காலத்தில் பெண் வாரிசுகளுக்கு பரம்பரையாக வந்து சேரும் சொத்து குறித்து ஒரு பாரபட்சம் இருந்ததென்னவோ உண்மை தான். . 

அசையாச் சொத்தைப் பெறுவதற்கான உரிமை ஒரு கட்டுபாட்டிற்கு உட்பட்டதாக தான் இருந்தது. இன்று போல் மகள்கள் சொத்தில் இணைப் பங்காளிகளாகக் கருதப்படவில்லை. இதற்கு முதன்மைக் காரணம், மகள்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டவுடன், அவரது கணவரின் குடும்பத்தில் இணைகிறார் என்பதாலும் குடும்ப சொத்தைப் பிரிக்க யாரும் விரும்பவில்லை என்பதுமே ..

தந்தையின் சொத்தை வாரிசாக அனுபவிக்கும் உரிமை ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே அங்கீகரிக்கபட்டது, ரிக் வேத காலத்திலிருந்து தான் இது கி.மு 400 வரை தொடர்ந்து அசையாச் சொத்தைப் பெறுவதற்கு சகோதரர்களைக் கொண்ட மகள்களை அனுமதிக்கவில்லை.  இருந்தாலும், திருமணமாகாத மகளுக்கு ஒரு சகோதரன் இருந்த போதிலும், சொத்தில் அவளுக்கு பங்கு இருந்தது.

ஆனால் இன்று?

"உனக்கு என்று எந்த குடும்பமும் இல்லாத போது, தனியாக உனக்கு சொத்து எதற்கு" என்கிறோம்!!

"உனக்கு தனியாக வசிப்பிடம் கூட எதற்கு? என் வீட்டிலேயே ஒரு மூலையில் இருந்து கொள்" என்று தாராளம் காட்டுகிறோம்!!

இந்த நான்கு வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளைக் கொண்ட பழங்கால நூல்களின் அடிப்படையில் டாக்டர் ஏ.எஸ் அல்டேகர் மற்றும் உபாத்யா,நடத்திய ஆய்வில், வேதகால இந்தியாவிள் குடும்பத்தில் பெண்களின் நிலைப்பாட்டை ப் பொறுத்து, சொத்து மீது அவர்களுக்கு பல்வேறு வகையான உரிமைகள் இருந்ததை காட்டுகின்றன.

"அசையும் சொத்துகள்" என்றாலே சொல்லப்படும் சீதனத்தின் மீது பெண்களுக்கு முழு உரிமை இருந்தது. 

" சீதனம்" என்றால் என்ன? என்பதை குறிப்பிட்டு வரையறுக்க முடியாததாய் இருந்தது. அதை மனு தான் வரையறுத்தார்.  பெண்ணிற்கு அவள் பெற்றோரும், சகோதரரும் திருமணத்தின் போதும் அவளை கணவனின் வீட்டிற்கு செல்லும் போதும் , திருமணத்திற்கு பிறகு கணவனும் அவளுக்கு கொடுக்கும் பரிசுகள் அனைத்தும் சீதனமாக கொள்ளப்பட்டன. அதில் அசையா சொத்துகளும் இருந்தன . இந்த சீதனப் பொருட்களின் மீது அவளுக்கு மட்டுமே ஏகபோக உரிமை இருந்தது. அதை அந்த பெண் தன விருப்பம் போல அனுபவித்துக் கொள்ளலாம். கணவனுக்கு கூட அதில் உரிமை இல்லை.!! அப்படியே அவள் கணவனுக்கு அது தேவை எனில், அதை அவன் வட்டியுடன் கூடிய கடனாக தான் பெறலாம்.!!

தற்போதும் சீதனப் பொருட்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 14 கீழ் பெண்ணுக்கு உள்ள தனி சட்ட உரிமையாகவும் ஆக்கப்பட்டது. அந்த சீதனத்தின் விளக்கத்தை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் Pratibha Rani vs. Suraj Kumar, 1985 (2) SCC 370 என்ற வழக்கில் கொடுத்துள்ளதை ஆர்வமுள்ளவர்கள் படித்து பார்க்கலாம்.

முடியாதவர்கள் ……………அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன சாராம்சத்தை கீழே படிக்கலாம்!!
“ திருமணமான இந்துப் பெண் தனது ஸ்ரீதன சொத்தின் முழு உரிமையாளராக இருக்கிறார், அதை அவள் விரும்பும் விதத்தில் பராமரிக்க முடியும், அது அவளுடைய கணவன் அல்லது அவளது மாமியார் பாதுகாப்பில் வைக்கப்பட்டாலும், அவர்கள் அதன் காவலர்களாகக் கருதப்படுவார்கள் . அவள் கேட்டால், அதையே திருப்பித் தரவும். அவர்கள் கட்டுப்படுவார்கள்"

ஆனால் இன்றைய நிலை?

அதை அப்படியே :தட்சணை" என்று மாற்றி கட்டாயபடுத்தி கணவன் வீட்டார் பெற்றதாலேயே, அதை தடுக்கும் சட்டமும் பின்னால் வந்து சேர்ந்தது.!!

இன்றும் கூட , பெண்ணிற்கு போட்டு அனுப்பும் நகையை கணவன் எடுத்து தனக்கும் தன குடும்பத்திற்கும் உபயோகப்படுத்துவதை பார்க்கிறோம்!!
கேட்டால், மனைவியிடம் உள்ளதில் கணவனுக்கு இல்லாத உரிமை என்று உள்ளதா என்ன? என்று திருப்பி கேட்கிறார்கள் பாவம்…

கணவனின் சொத்து என்றால் அதில் அவனுக்கு ஏகபோக உரிமையும் பின்னர் அவனின் வாரிசுகள் என்று சொல்லப்பட்டது போல, வாழும் காலத்தில் கணவனின் சொத்தில், கணவனும் மனைவியும் அந்த சொத்தின் கூட்டு உடைமை என்ற கருத்து வேத காலங்களில் இருந்தது தெரியுமா?
இன்று எத்தனை பேர் தன பெயரில் உள்ள சொத்தில், மனைவியையும் பங்குதாரராக மாற்றுவது இருக்கட்டும் அப்படி நினைக்காவாது செய்கின்றனர்?

அதே போல வேத காலத்தில், கணவனும் மகனும் இல்லாத நிலையில், கணவனின் சொத்தில் இருந்து அவளை பராமரித்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு இருந்தது. மைனர் மகனாக இருந்தால்,அவன் பாதுகாவலராகச் சொத்தை வாரிசாகப் பெற்று அதை அவனுக்காக பராமரிக்கும் உரிமை மட்டுமே அவளுக்கு உண்டு, சொத்தை மாற்றும் உரிமை இல்லை. மகனும் இல்லாத போது, அவள் வாழும் காலத்தில் அனுபவித்து முடித்த பிறகு, மீண்டும் அந்த சொத்து கணவனின் குடும்பத்திற்கே சென்று சேர்ந்து விடும்!! அது அவளின் கணவனின் சொத்தே என்றாலும், அவள் விருப்பம் போல கையாள முடியாது!! இந்த சட்ட நடைமுறை தான் இன்றும் தொடர்கிறது. இது குறித்து நான் எழுதிய விரிவான விடை சங்கடம் தவிர்க்கும் சட்டம் ப்ளாக்கில் உள்ளது. அதை திரும்பவும் இங்கே பதிவிட வேண்டாம் என்று நினைக்கிரேன்.


வேத காலத்துக்குப் பிறகு பெண்களின் உரிமைகள் படிப்படியாகக் குறைந்து, ஆங்கிலேயர் காலத்தில் மிகக் குறைந்த நிலையை அடைந்தன. அதற்கு காரணம் கல்வியில் சமூகத்திற்கு பெண்களின் பொருளாதார பங்களிப்பு ஆகியவை படிப்படியான சரிவு, அதன் பிறகு தான் ஆங்கிலேயர்கள் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு என்று தனி பள்ளிகள், கல்லூரிகள் நிறுவினார்கள். நான் படித்த பள்ளி மற்றும் கல்லூரியும் அவர்கள் நிறுவியது தான் !!

சொத்துரிமை என்று பார்த்தால், சுதந்திரத்திற்குப் பிறகுதான், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 போன்ற சட்டரீதியான தலையீடுகள் மூலம் பெண்களுக்கு பல்வேறு சொத்துரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நவீன இந்தியாவின் இந்துப் பெண்கள், வேதகாலப் பெண்களை விட அதிக உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் சொத்துரிமை பற்றிய கருத்து வேத காலப் பெண்களுக்கும் அந்நியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எஎன்பதும் தவறானது.

ஆனாலும் இன்று எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், பெண்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம், அவள் பிறந்த வீட்டிலும் சரி……….. கணவன் வீட்டிலும் செய்யத்தான் செய்கிறார்கள் அதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம்,

வினாவிற்கு திரும்ப வரும்போது, அப்பாவின் சுய முயற்சியால் பெற்ற சொத்தை மட்டுமே அவர் தன் விருப்பம் போல இன்னொருவருக்கு மாற்ற முடியும். இது உங்கள் தாத்தாவின் சொத்து என்பதால், உங்கள் சகோதரிக்கும் அதில் பங்கு உண்டு. அவர் தனக்கு உண்டான உரிமையை விட்டுக்  கொடுத்தால் மட்டுமே உந்களுகு மட்டுமாக அந்த சொத்தை உங்கள் அப்பா எழுதி கொடுக்க முடியும்.

தாய் தகப்பன் மற்றும் சகோதரனின் அன்பையும் பாசத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் உங்கள் சகோதரியும் தனக்கிருக்கும் சொத்தின் மீதான உரிமையை விட்டு கொடுக்கலாம்... அவள் கணவனும் அவள் குடும்பத்தாரும் அவள் கொண்டு வந்த சீதனப் பொருட்களின் மீது உரிமை பாராட்டலாம். அவள் உழைப்பில் சேர்த்த சொத்துகளுக்கு கணவன் உரிமை கொண்டாடலாம்... வாரிசு இல்லாத நிலையில், கணவனை இழந்த பிறகு தன்னை பராமரிக்க மட்டுமே அவன் சொத்துகளை அவள் பயன்படுத்தமுடியும் என்று முட்டுக்கட்டை போடலாம்....

ஆனால்…..

சக்கரம் சுழன்றுக் கொண்டு தான் இருக்கிறது. ..

இன்று அநாதரவாய் நம் சகோதரி…

நாளை அதே நிலையில் நம் மகள் அல்லது நம் பிரியத்துக்கு உரிய ஒரு பெண்?!!

கர்மா மிகவும் பொல்லாதது!!


வெள்ளி, 29 அக்டோபர், 2021

வாரிசு இல்லா சொத்து யாருக்கு சொந்தம்?

 அரசுக்கு தான் ..இதிலென்ன சந்தேகம்…

அதை விட, ஒருவருக்கு சொந்தமான இடத்தில் புதையல் கண்டு எடுத்தாலும் அரசுக்கு தான் அது சொந்தம்…அது நியாயமோ இல்லையோ …!!

சென்னை; உயர் நீதிமன்ற வளாகத்தில், தான் அரசு பேராட்சியர் மற்றும் சொத்தாட்சியர் அலுவலகம் உள்ளது. அதை நிர்வகிப்பது மாவட்ட நீதிபதி என்றாலும், அது அரசு அலுவலகம் தான்.வாரிசு இல்லாதவர்களின் சொத்துகளை அரசு தன நிர்வாகத்தில் எடுத்துக் கொள்ளும். அதன் சொத்தாட்சியராக, அந்த மாவட்ட நீதிபதி செயல்படுவார்.

சமீபத்தில் கூட ,பச்சையப்பன் அறக்கட்டளையை அரசு சொத்தாட்சியர் தான் நிர்வகிக்க வேண்டும் என்று மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கும். அது போல ஒரு பொது அறக்கட்டளையில் நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால், அரசே அதை தன நிர்வாகத்தில் எடுத்து கொள்ளும்… சொத்தாட்சியர் தான் அறங்காவளரும் கூட. ஆனால், நடைமுறையில், மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்பவே அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், தங்கள் உயிலின்படி சில சொத்துகளை ஒதுக்கி, அரசு நிர்வாகம் செய்து, தங்கள் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று எழுதி வைத்து விட்டு சென்றவர்களின் சொத்துகளும் அங்கு நிர்வகிக்கப்படுகின்றன. இன்றைய தேதியில் சுமார் 200 அறக்கட்டளை சொத்துக்கள் அவ்வாறு நிர்வகிப்படுகின்றன..

.சொத்தாட்சியருக்கு அந்த சொத்துகளை நிர்வகிப்பதில் ஏகபோக உரிமை, அதிகாரம் உள்ளது என்றாலும், அதை நிர்வகிப்பதில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வந்த பெருமை மாண்புமிகு நீதியரசர் ஆதிநாதன் அவர்களையே சாரும்.

அவர் சொத்தாட்சியராக அங்கு பணிபுரிந்த காலத்தில், அந்த எஸடேட்டுகளில சொன்ன, தான தருமங்கள் காலத்திற்கேற்ப ஏற்றம் பெறாமலும், ஆனால் அதன் எஸ்டேட் குமாஸ்தாக்கள் சம்பளம் மட்டும் உயர்ந்துக் கொண்டே வந்ததையும், அறக்கட்டளை சொத்துகள் உரிய முறையில் பராமரிக்கபடவில்லை என்பதையும், அதன் வருவாய் வீனடிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துக்கொண்டு, அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, அதற்கு மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்று அமுல்படுத்தினார்.

சொத்தாட்சியர், இதற்கென்றே இருக்கும் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபயரசரிடம் கலந்து ஆலோசித்து தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். அந்த நிர்வாக சீர்திருத்தங்கள் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

உயிலில் சொன்ன தரும காரியங்கள் மட்டுமல்லாமல், கல்வி உதவி பணம் வழங்குதல் போன்ற பொது நலுனுக்கும், , அந்த எஸ்டேட் பணம் வழங்கப்படுகிறது. . சமீபத்தில் கூட முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அவர்கள் கொடுத்ததாக செய்தி வந்தது நினைவிருக்கலாம்.

அங்கு நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துகளின் சொந்தக்காரர்களில் மறைமலை அடிகளார், புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் போன்றோரும் அடங்குவர். அவர்கள் இது குறித்து தங்கள் கைப்பட எழுதிய உயில் பிரதி அங்கு பாதுகாக்கபட்டு வருகின்றது. ,

வாரிசு இல்லையென்றால் தான் அரசு அந்த சொத்துகளை நிர்வகிக்க எடுத்துக் கொள்ளும் என்றில்லை., அது போல எடுத்துக்கொள்ள சொல்லி உயில் எழுதி வைத்தாலும் கூட , எடுத்து கொள்வது உண்டு என்பது தெரிகிறது அல்லவா…

அப்போதெல்லாம் நாடே தங்கள் வாரிசு என்று நினைத்த மாமேதைகள் இருந்தனர்.

ஆனால் இப்போது, நாடே தங்கள் சொத்து என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர்!!

பின்னே வாரிசுக்கு சாதாரண "சொத்தை!!" "வீட்டை கொடுப்பது கேவலமல்லவா??!!

புதன், 8 செப்டம்பர், 2021

அம்மா இறந்த பிறகு அம்மாவின் நகைகள் மகனுக்கா? அல்லது மகளுக்கா? சொந்தம் விபரம் சொல்லவும்.

 நம் முன் காலத்தில் இருந்தே தாயின் நகைகள் பெண்பிள்ளைகளுக்கு,  தந்தையின் சொத்துகள் ஆண் பிள்ளைகளுக்கு என்ற ஒரு முறை இருந்து வந்துள்ளது. ஆண் பிள்ளைகள் தான், ஒரு வம்சத்தின் தொடர்பை கொண்டு செல்பவன் என்ற நோக்கில் பின்பற்றப்பட்டது அது. 

 காலப்போக்கில்,  "என் அம்மாவிற்கு நான் தானே எல்லாம் செய்தேன்". "வீட்டின் பாரம்பரிய நகைகள் வீட்டிற்கு வாழ வந்தவளுக்கு தான் "  என்று மகன் சொல்வதும், கடைசிக்  காலத்தில் "நான் தானே அவரைக்  கவனித்தேன்"  என்று மருமகள்  சொல்லிக் கொண்டு மாமியாரின் நகைகளை எடுத்துக் கொள்வதும் தொடர்கதையானது. பெண்களாலும், தன்  சகோதரனை எதிர்த்துக்  கேட்க முடியாது. ...சொந்தம் விட்டுப் போகுமே என்று....காலம் முழுதும் தமையனோ தம்பியோ தான் தன்  பிள்ளைகளுக்கு தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து எந்த நல்லது கெட்டதும் பார்க்க வேண்டுமே...சீர் கொண்டு வருவதை ஏற்பதோடு திருப்தி கொண்டாள். 

அதன் பின்னர் தான் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் 2005ல் வந்தது. . சகோதரிகளை  பங்காளிகளாய் பார்க்கும் வகையில் சகோதரனின்  மனோபாவமும் மாறியது..  அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில்,  தகப்பனார் உயிருடன் இருந்து சொத்து பிரிக்கப்படும் போதிலிருந்தே அவளுக்கு உரிமை என்று சொல்லப்பட்டு சொத்தில் உரிமை கோருவதில் வரையறை நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் அது போன்ற தடை எதுவும் மகனுக்கு இல்லை. அவன் பிறக்கும் போதே, பெற்றோரின் வாரிசாக அறியப்படுகிறான். இந்த ஏற்றத் தாழ்வை தான் 2020ல்  மாண்புமிகு உச்ச நீதிமன்றம், விநீதா ஷர்மா எதிர் ராகெஷ் ஷர்மா என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பில் நீக்கியது.  

இதன் படி  இன்றைய நிலையில், பெண்களும் ஆண்களுக்கு  நிகராக அவர்களுடைய பெற்றோரின் அசையும் மற்றும்  அசையா சொத்திற்கு சம உரிமை கொண்டவர்கள்..ஆகிறார்கள்.   ஆனால் அவர்களுடன் சேர்த்து தாயின் அசையும் மற்றும் அசையா சொத்தில் பங்கு கோரும், அவர்கள்  மறந்து போன இன்னொரு பங்காளியும் உண்டு!! 

அவர் தான் தாயாரின் கணவர்.. அதாவது தந்தை...

பிள்ளைகளுக்கு சமமாக, மனைவியின் சொத்து என்ற முறையில் அந்த நகைகளில் அவருக்கும் சம உரிமை உண்டு.  

முன்னர் அது, மூன்றில் ஒரு பங்கு அவருக்கும், மீதி பங்கு பிள்ளைகளுக்கும் என்று இருந்தது. இப்போது அது திருத்தப்பட்டு சம உரிமை என்றாகி விட்டது..

 அம்மாவின் சொத்தோ, அப்பாவின் சொத்தோ எப்போதும் பிள்ளைகளின் உரிமை தான் முன்னிலையில் உள்ளதே தவிர தனித்து விடப்பட்ட தாய் தந்தையின் உரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரிவதில்லை!!

எங்கெல்லாம் உரிமை உள்ளதோ, அது கடமையுடன் சேர்ந்தே வருவது என்று நான் அடிக்கடி நினைவுபடுத்தி வருகிறேன்.  

பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளுக்கு உள்ள சம உரிமை குறித்து ௨௦௦5 ல் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பிள்ளைகள், அந்த பெற்றோர் தான் தங்களின் முதலும் பெரிதுமான சொத்து என்று உணரத் தவறி விட்டனர். அவர்களை பாதுகாப்பதில் தங்களுக்கு உள்ள கடமையை மறந்து விட்டதன் விளைவாக கொண்டு வரப்பட்டது தானே 2007ல் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்!!.  

ஒரு சமூகம் தன கடமையை செய்ய தவறும்போது, அதை செய்யுமாறு நிர்பந்தித்தும் , மீறுவோருக்கு தண்டனை அளிக்கவும் தானே சட்டமே வந்தது.!!

இதோ இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தைப் பாருங்கள்...

"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத பொழுதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில் இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர பராமரிக்க கடமைப்பட்டவர்கள். " 

அதாவது "சொத்துகள் ஏதும் இல்லாத நிலையிலும்..." என்ற வார்த்தைகளை கவனியுங்கள்...

பெற்றோருக்கு சொத்து ஏதும் இல்லை என்பதால் பராமரிக்க மறுத்த, தவறிய பிள்ளைகள் இருந்ததாலேயே தானே இந்த சட்டமே வந்தது.?!!.

சம உரிமை கேட்ட மகளுக்கு மட்டுமல்ல பேரன்களுக்கும், பேத்திகளுக்கும் இந்த கடமை உள்ளதை சட்டம் சுட்டிக்காட்டியது!!

அப்படி சொத்து இருந்தும், அதை தானமாவும், செட்டில்மென்ட் மூலமும், தங்கள் பெயருக்கு பெற்றோரிடமிடமிருந்து மாற்றிக்கொண்டு,  அவர்களை தவிக்க விட்ட பிள்ளைகளிடம் இருந்து மீண்டும் அந்த சொத்துகளை பெறவும் வழி வகை செய்தது அந்த சட்டம்!! அதற்கேற்றவாறு தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009 வகுக்கப்பட்டுள்ளன.

மனைவியை இழந்த கணவனின் துயர் ஒரு விதம் என்றால், கணவனை இழந்த பெண்ணின் நிலை இன்னும் மோசம். ..அவள் குடும்பத்தின் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறாள்.  அவளுக்கு முன்னரே அவள் கணவன் இறந்ததற்கும் அவள் துரதிர்ஷ்டமே காரணம் எனப்படுகிறாள்.  பிள்ளைகளின் மங்கள நிகழ்வான திருமணத்தின்போது கூட ஒதுக்கப்படுகிறாள்...அவளிடம் சொத்துகள் இருந்தாலும் பறிக்கப்படுகின்றன...அத்தோடு நிற்கின்றதா சில நல்ல உள்ளங்கள்??

கடவுள் கண்ணன் பிறந்த இடம் எனப்படும் பிரூந்தாவனத்தில், இன்றைய நிலையில் மட்டும் சுமார் இருபதாயிரம் கைபென்கள் உள்ளனர்!! அதுவும், . நகர் முழுதும் உடல் தளர்ந்து, மனம் பேதலித்த நிலையில், மொழி தெரியாமல் என்று...பல விதத்தில் உள்ளவர்கள்...

எப்படி இத்தனை வயதான கைப்பெண்கள் ஒரே இடத்தில்??

இனி அவர்களால் எந்த பயனும் இல்லை என்பதால் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, ரயிலிலும் வெகு தொலைவிருந்தெல்லாம்  கொண்டு வரப்பட்டு இங்கே விட்டு செல்லப்பட்டவர்கள்...

தங்களின் அன்றாட வாயிற்று பசிக்கு போதிய உணவின்றி கிடைக்கும் எளிய உணவிற்கு கண்ணனின் பஜன்களை பாடிக்கொண்டு தங்களின் இறுதி நாளை எதிர் நோக்குபவர்கள் ...

   

ஒரு சாதாரண நிலை பெண்ணின் வாழ்வு என்றுமே ஆணின் வாழ்வை ஒட்டியே அமைந்துள்ளது. தந்தை, கணவன், மகன் என்று ஒரு ஆணை சுற்றியே அவள் வாழ்வு  வருகிறது. ..

என்ன தான் சட்டங்கள் இயற்றப்பட்டு மகளுக்கு , அவளை பராமரிக்கும் சம கடமை உண்டு என்றாலும், பாரம்பரியம், அவளை மகளின் வீட்டில் தொடர்ந்து வசிக்க தடை செய்கிறது..

ஆனால் இப்போது நிலை மாறி வருவது நல்ல மாற்றம் என்றாலும், தன்  பெண்ணின் குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் மகள் மற்றும் மருமகனுக்கு வேண்டிய வீட்டு வேலைகளை செய்யவும் தான் அவள் உதவி பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது! ! 

ஏன்..திருமணமாகும் நிலையில் உள்ள பெண்கள், எத்தனை பேர் தங்களின் அம்மாவின்  வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கிறார்கள்?? இன்னொரு வீட்டில் போய் வேலை செய்யவும் தயார்..ஆனால் பெற்ற அம்மாவிற்கு ஓய்வு தேவை என்று எத்தனை உள்ளம் நினைக்கிறது?

புகுந்த வீட்டிற்கு போனாலும் அம்மாவின் வீட்டிற்கு வந்தால் மட்டும் ஒரு சின்ன வேலை கூட செய்யாமல், அம்மாவை பாசத்திலேயே கட்டிப்போடும்  வித்தை தெரிந்தவர்கள்!

தேவைகள் முடிந்த பின்னே தூக்கி எறியப்படுவதும் நடக்கிறது....

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது??

 தாயின் பாசம் அப்படியே இருந்தாலும், அது பிள்ளைகளிடம் எதிரொலிக்கவில்லையோ என்றே தோன்றும்..இல்லை, எங்களுக்கும் பாசம் அதிகம் உண்டு, ஆனால் எங்கள் மனசுக்குள்ளேயே கிடக்கிறது என்பவரா நீங்கள்?

சிலரிடம் பேசும் போது பார்த்திருக்கிறீர்களா? அம்மா என்றாலே நெகிழ்து போய் விடுவார்கள்.. அவர்களிடம் தாய் பாசம் இயல்பாகவே அதிகம் இருக்கும்...அவர்கள் எல்லாம் ரிஷப  மற்றும் கடக லக்கினம் அல்லது இராசிக்காரர்களாகத்  தான் இருப்பார்கள்.  

என்ன காரணம்? 

கடகத்தின் அதிபதி சந்திரன் என்றால், ரிஷபத்தில் அது உச்சமாக இருக்கும்!!.

வானத்தில் ஒளி வெள்ளமாகிய சந்திரனை மாதாகாரகன் என்போம். அதனால் தானோ என்னவோ, அவருக்கு எந்த கிரகமும் பகையே கிடையாது!!இராசியே அவர் நின்ற இடத்தில் இருந்து தானே கணிக்கப்படுகிறது!! 

அவருடைய பிள்ளை என்று அறியப்படும் புதனுக்கு அன்னையான சந்திரனை பிடிக்காது. ..ஆனால் மாதாவுக்கு அப்படியா ? புதனின் மீது கொள்ளைப் பிரியம்!! 

எந்த அளவிற்கு என்றால் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி தான் மாராகாதிபதி என்றாலும், ஏழாம் பாவம் அங்கு கடகம் அல்லவா? அதன் அதிபதி சந்திரன் தன பிள்ளையான புதனுக்கு எப்படி தீங்கு செய்வாள்.."மிதுனத்தை சந்திரன் கொல்லான் " என்ற சொல்வடையே உண்டு...

அப்படியானால் அம்மா பிள்ளைகளின்  பாசத்திற்கும் கிரகங்களே காரணமாக இருக்குமா ?  என்றால் ஆமாம். அம்மா பிள்ளையின் உறவு எப்படியிருக்கும் என்பது ஒவ்வொரு இலக்கினத்திற்கும் சந்திரனும் புதனும் கொண்டுள்ள இணைவை பொறுத்து உள்ளது..  

அமாவாசையை நெருங்கும் சந்திரன், நல்ல நிலையில் உள்ள புதனை கெடுக்கவே செய்வார். அதாவது நல்ல புத்திசாலியாக மகன் இருப்பார்.  ஆனால் நல்ல திசையில் அவர் புத்தி செல்லாது...அதற்கு காரணம்  "கெட்ட அம்மா"  தான்.  அதாவது ஒளியில்லாத, அதாவது   வசதியில்லாத, சொத்தில்லாத அம்மா தான்...அம்மாவால் ஒரு பிரயோஜனமும் இல்லை , அவளால் தனக்கு கஷ்டம் தான் என்றால் அவள் "கெட்ட அம்மா" தானே பிள்ளைக்கு?!!

ஆனால் அதுவே சுக்கிரன், குருவின் பார்வை இருந்தால், நிலைமை தலைகீழ் மாற்றம் நடக்கும்.!!

பின்னே வசதியுள்ள அம்மாவாயிற்றே!! 

 சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கும் புதன் அவஸ்தையில் இருப்பார்.  மாதா ஆட்சியில் இருக்கும் வீட்டில் அல்லவா இருக்கிறார். .இருந்தாலும் பொறுத்துக்கொண்டு இருப்பார்!! 

 ஆனால் மிதுனத்தில் அவரின் ஆட்சி.அங்கு உள்ள சந்திரன் பதன் இணைவின் போது,  அமாவாசை நிலையில் இருந்தும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்.!! ஆனால் இதுவே பவுர்ணமி சந்திரன் புதனும் இணைவு என்றால், கன்னியை போலவே  மிதுனத்தில் இருக்கும்போதும், மகன் ஜோதிடத்தில் வானவியல் சாத்திரம் கணிதம் என்று பயங்கர புத்திசாலியாக இருப்பான்.. 

அதுவே புதனுக்கு ஆகாத செவ்வாய் ஆட்சி வீடான மேஷம் விருச்சிகத்தில் இருக்கும்போது அம்மாவின் ஆதரவில் இருப்பார்.விருச்சிகத்தில் சந்திரன் நீச்சமாக இருந்தாலும், பெரிதாக மாற்றம் இருக்காது.  அதுவே சந்திரன் நீச்ச பங்கம் ஆனால் புதன்  நிலை நன்றாக இருக்கும்...

அதுவே மீனத்தில் புதனும் நீச்சம். சந்திரனும் அமாவாசை நிலையில் இருக்கும்.  சுத்த மோசமான நிலையில் இருப்பான்  டாஸ்மாக் கடை வாசலில் வீழ்ந்து கிடக்கும் மகனை போல....சுக்கிரனும் குருவும் தம் பார்வையால் காப்பாற்றினால் உண்டு.  அங்கும் சந்திரன் தன பலத்தை புதனுக்கு கொடுத்து தான வலு சேர்ப்பார்.  

வானவியல் சாஸ்திரத்தில் கூட, மகனான புதனின் இணைவினால் மாதா சிறக்கமாட்டாள்..அவளின் தன்மையாலேயே மகன் அதிபுத்திசாலி ஆவான்!!

அப்படியென்றால் பிள்ளைகள் செய்யும் வினைகளுக்கு எல்லாம் கிரகங்களே காரணமா என்றால்,  அதிர்ஷ்டம், பூர்வ புண்ணியம் என்பதெல்லாம் நம் முன்ஜென்ம கர்மாவால் மட்டுமல்ல  பெற்றோரை நாம் நடத்துவது என்னும் இன்றைய  கர்மாவுடனும் இணைந்து உள்ளது. நம் பிறந்த நேரத்தில் இருந்த கோள்களின் நிலையையும் இன்றைய கோள்களின் நிலையையும் இணைத்து கணித்து சொல்வது தானே ஜோதிடம்...

 "தீதும் நன்றும் பிறர் தர வாரா"  என்று நாம்  இப்போது செய்யும் கர்ம வினையே கோள்சாரத்தின்படி நமக்கு விளைவாக திரும்புகிறது  

பெற்றோரும் அவர்கள் உடன் இருக்கும் தருணம் தான்  சிறந்த சொத்து என்பதை உணர்வோம். !!

"யதோ தர்மஸ் ததோ ஜெயா"

 


புதன், 23 ஜூன், 2021

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பற்றி 2020 உச்ச நீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது? இந்தத் தீர்ப்பினால் ஏற்கனவே உள்ள 2005 இந்து வாரிசு சட்டத்திற்கு மாறான வேறு விளைவுகள் ஏற்படுமா?

 குடும்ப சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் ௨௦௦5 அதன் முந்தைய காலக் கட்டத்திற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குத் தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி, இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம பாதி சொத்து உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக sசெயல் பட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

பெண்களுக்கான உரிமைகள்

  • முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
  • ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
  • ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
  • கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
  • அதேபோல் அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
  • பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
  • பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

'ஆனாலும் அந்த திருத்தச் சட்டத்திண் படி அது இயற்றப்பட்ட காலத்திற்கு பிறகு தான் பெண்களுக்கு சம சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆண் மகனுக்கு அந்த வித்யாசம் இல்லை. இந்த வேற்றுமையை நீக்கித் தான் அந்த சட்டம் அதற்கு முந்திய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

ஒரு பெண் திருமணமானாலும் அவள் தகப்பனாருக்கு என்றும் அன்பிற்கு உரியவள் தான் என்று தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  • பெண்ணுக்கு கணவன் மற்றும் மாமனார் மூலமாக வரும் சொத்துகள் எப்படி கணவனின் வாரிசுகளுக்கு போகும் எனக் கருத்துப் பகுதியில் கேட்கப்பட்டுள்ளது. உயில் எதுவும் எழுதாமல் அவருக்கு வந்தால் அதை முழு உரிமையுடன் பயன்படுத்த முடியாது. அவர் காலம் வரை அனுபவித்த பின்னர் மீண்டும் கணவரின் வாரிசுகள் என்ற முறையில் அவர் சகோதரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போய்விடும். அவர்கள் குடும்ப சொத்து அவர்களுக்கே போய் சேரும்.
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டென்பது பழைய சட்டமாயிற்றே. புதிதாக என்ன மாற்றம் செய்தார்கள் என்று பெருமை கொள்கிறார்கள்?
ஸ்ரீஜா சுப்ரமணியன் இன் தற்குறிப்பு போட்டோ

குடும்ப சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் ௨௦௦5 அதன் முந்தைய காலக் கட்டத்திற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குத் தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி, இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம பாதி சொத்து உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக sசெயல் பட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

பெண்களுக்கான உரிமைகள்

  • முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
  • ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
  • ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
  • கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
  • அதேபோல் அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
  • பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
  • பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

'ஆனாலும் அந்த திருத்தச் சட்டத்திண் படி அது இயற்றப்பட்ட காலத்திற்கு பிறகு தான் பெண்களுக்கு சம சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆண் மகனுக்கு அந்த வித்யாசம் இல்லை. இந்த வேற்றுமையை நீக்கித் தான் அந்த சட்டம் அதற்கு முந்திய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

ஒரு பெண் திருமணமானாலும் அவள் தகப்பனாருக்கு என்றும் அன்பிற்கு உரியவள் தான் என்று தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  • பெண்ணுக்கு கணவன் மற்றும் மாமனார் மூலமாக வரும் சொத்துகள் எப்படி கணவனின் வாரிசுகளுக்கு போகும் எனக் கருத்துப் பகுதியில் கேட்கப்பட்டுள்ளது. உயில் எதுவும் எழுதாமல் அவருக்கு வந்தால் அதை முழு உரிமையுடன் பயன்படுத்த முடியாது. அவர் காலம் வரை அனுபவித்த பின்னர் மீண்டும் கணவரின் வாரிசுகள் என்ற முறையில் அவர் சகோதரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போய்விடும். அவர்கள் குடும்ப சொத்து அவர்களுக்கே போய் சேரும

பரம்பரை சொத்தை உயில் மூலம் மகனுக்கே அளிக்கமுடியுமா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சுய சம்பாத்தியத்தில் உள்ள சொத்துக்கள் மட்டுமே உயில் மூலம் எழுதி வைத்தல் செல்லுபடி ஆகும். ஒரு இந்து குழந்தை வயிற்றில் ஜனிக்கும்போதே பரம்பரை சொத்திற்கு உரிமை உடையது ஆகிறது. அதை உயில் மூலம் தடுக்க முடியாது.

படித்தற்கு நன்றி .புதிய உபயோகமான தகவலை தெரிந்துக் கொண்டீர்கள் எனில், ஆதரவு வாக்கிடுங்கள்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...