"மிகவும் நேர்மையாக
இருக்காதீர்கள்
ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்
நேர்மையானவர்களே
முதலில் பழிதூற்றப்படுவார்கள். …….சாணக்கியா
அந்த காலத்திலேயே சாணக்கியர் , நேர்மையானவர்கள் துன்பப் பட நேரிடும்ன்னு எச்சரிததிருக்கிறார்.
இது சம்பந்தமாக நான் படித்த ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் புதிதாகப் போடப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 4,5 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க்கின்றன.
யாருமே அங்கில்லை. ரயில்கள் ஏதும் அப்போது வரும் நேரமில்லை என்பதால் அவர்கள் அங்கு விளையாடுவதை யாரும் பெரிதாகக் கண்டுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் அதனை ஒட்டி யுள்ள புழக்கத்தில் இல்லாத பழைய தண்டவாளத்தில் ஒரு குழந்தை மட்டும் தனியே விளையாடிக் கொண்டிருக்கிறது.
இப்போது திடீரென அந்த வழியே ஒரு ரயில் வருகிறது. தூரத்திலேயே ரயில் என்ஜின் டிரைவர் இந்த குழந்தைகளை பார்த்து விடுகிறார். வண்டி வரும் வேகத்திற்கு அதனை நிறுத்தவும் முடியாது. குழந்தைகளும் விளையாட்டு மும்முரத்தில் உள்ளன. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு. ….பெரிய ரயில் விபத்து நடக்காமல் தடுக்க அவர் என்ன செய்திருப்பார் சொல்லுங்கள்……………….
ஆமாம். புழக்கத்தில் இல்லாத அந்த பழைய ரயில் தண்டவாளத்திற்கு தன ரயில் பாதையை திருப்பி விடுகிறார். அதனால் அங்கு விளையாடும் குழந்தையின் கதி அவருக்குத் தெரியு,ம். ஆனால் அந்த 4,5 குழந்தைகளைக் காப்பாற்ற, அந்த ஒரு குழந்தையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.
இப்போது சொல்லுங்கள்? அந்த ஒரு குழந்தை செய்த தவறு என்ன? ஆட்கள் புழக்கம் இல்லாத பழைய ரயில்வே தண்டவாளத்தில் விளையாடியது தவறா? அல்லது புழக்கம் உள்ள தண்டவாளத்தில் இந்த குழந்தைகள் விளையாடியது தவறா?
ஆனால் தவறே செய்யாத குழந்தை தண்டிக்கப்பட்டது ஏன்?
ஏன் என்றால், இங்கு செய்யும் செயல் பார்க்கப்படவில்லை.. செய்த நபர்களின் எண்ணிக்கை பார்க்கப்படுகிறது. அதனால் தான் தவறுகள் செய்பவர்கள் அதிகமாகப் பாதுகாக்கப்படுகின்றனர். தவறு செய்யாத சிலர் இடையூருக்கு உள்ளாகின்றனர். துன்பப்படுகின்றனர். காரணமின்றித தண்டிக்கப்படுகின்றனர்.
இதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள் தானே? "புகழ் பெற்றது எல்லாமே சரியானதல்ல. சரியானதெல்லாம் புகழ் பெற்றதில்லை."
சரி நேர்மையானவர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் கஷ்டப்படுகின்றனர். நேர்மையற்றவர்கள் யார்? லஞ்சம் வாங்குபவர்களா?.

உண்மையை சொல்ல்லுங்கள். அவர்கள் மட்டும் தான் குற்றவாளியா ? கொடுப்பவர்கள் இல்லையா? இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்ட விரோதமானது என்று தெரிந்தும் தன்னுடைய காரியம் முடிந்தால், சரி, என்று எண்ணி அதற்கு ஒத்துழைப்பவர்களும் தானே அதற்கு காரணகர்த்தா?
லஞ்சம் ஏதும் கொடுக்காமல் இங்கே எதுவும் நடக்காது என்று நீங்கள் நினைத்த தருணம் எது? அந்த அனுபவத்தை பகிருங்களேன். என்று தான் நினைப்பதும் இல்லாமல் மற்றவர்களின் அனுபவங்களையும் கேட்கும் அளவிற்கு இது தவிர்க்கமுடியாதது என்று எண்ணும் அளவிற்கு ஒரு குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் என்னென்ன?
- இலஞ்சம் எங்கும் உள்ளது.
- இலஞ்சம் எப்போதும் உள்ளது.
- இலஞ்சத்தை ஒழிக்க முதலில் நம் மனமாற்றம் தேவை.
- இலஞ்சம் மோசமானதல்ல. நாம் கொடுக்கும் பணத்திற்கு நம் வேலை நடந்து விடுகிறது.
- இலஞ்சம் மேலிடத்திலிருந்து இருக்கிறது. சிஸ்டமே சரியில்லை.
இப்படி சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு இலஞ்சம் எதற்கு கொடுக்கிறார்கள். கூர்ந்து பார்தீர்களேயானால், சில காரணங்கள் புரியும்:
- நம்முடைய வேலை சீக்கிரம் முடியனும்.
- வசதி……நமக்கு அந்த வேலை சம்பந்த நடைமுறைகள் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. நேரமும் இல்லை. பணத்தைக் கொடுத்தால் அவனே எல்லா வேலையும் செய்துக் கொடுத்து விடுவான்.
- பயம் மற்றும் ஒரு விடுதலை உணர்வு.
நிறையப் பேருக்கு அரசாங்க அலுவலகத்திற்கு ஒரு வேலை விஷயமாக போகவேண்டும் என்றாலே பயம். இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நம்மை அல்லது நம் சம்பந்தப்பட்ட வேலையில் ஏதேனும் கோளாறுஆகிவிடுமோ என்று.
இது தேவையில்லாதது. தாசில்தார் அலுவலகத்திலும் RTO அலுவலகத்திலும் ஏன் இலஞ்சம் தலை விரித்தாடுகிறது ? ஏனென்றால் அதை ஊக்குவிப்பது நாம் தானே…புது வண்டி, வீடு வாங்குறோம். டிப்ஸ் போல நாம சந்தோஷத்திலே கொடுக்கிறது தானே .என்ற நினைத்து கொடுத்து கொடுத்து, இப்போ அது வாங்கவில்லை என்றால் அங்கே வேலையே ஓட என்ன நடக்கவே மாட்டேங்குது.
4. அறியாமை மற்றும் கற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை
நமக்கு எந்த விஷயத்தையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு அரசாங்க ஆபீசில் நாம் மனு போட்டால், அதை இத்தனை நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என்று அவர்களுக்கு ஒரு நடைமுறை உத்தரவு உள்ளது. அதற்கு கருவியாகத் தான் தகவல் அறியும் சட்டம் இருக்கிறது. நம் மனு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்கு. நம் கையில் இருக்கும் போர்க் கருவிகளைப் பற்றி நமக்கு தெரியவில்ல, தெரிந்துக் கொள்ளும் ஆர்வமில்லை. சும்மா அந்த ஆயுதத்தை தூக்கித தூரப் போட்டு விட்டு , அவர்களின் உதவியை நாடுகிறோம்.
5. . தரகர்கள் மற்றும் புரோக்கர்கள் சொல்லும் தவறான தகவலை நம்புவது
நம்முடைய வேலை சம்பந்தப்பட்ட அலுவலக நடைமுறைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமல், அதற்கான முயற்சி ஏதும் எடுக்காமல், தரகர்கள் மற்றும் புரோக்கர்கள், அது சிக்கலான நடைமுறை என்பதையோ, மேலதிகாரி பணம் கேட்கிறார் என்று சொல்வதையோ நம்பி இலஞ்சம் கொடுப்பது. இங்கே ஒருவர் முதல் தகவல் அறிக்கை நகல் பெற ரூபாய் ஐந்தாயிரம் இலஞ்சம் கொடுத்ததை எழுதி இருந்தார். இறப்பு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை உடன் பதிவு செய்து, பிரேத பரிசோதநாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் உடன் செய்ய வேண்டும். , இதில் தாமதம் ஏற்படுவதாக புகார் அவர் உயர் அதிகாரிக்கோ, அல்லது லஞ்ச ஒழிப்புத துறைக்கோ தெரிவித்தால் அவர் வேலைக்குத் தான் ஆபத்து. எனவே அலுவலக நடைமுறை தெரிந்து நாம் செயல் பட்டால், இலஞ்சம் கொடுக்கத் தேவை இருந்திருக்காது.
இலஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற காலம் காலமாக இருக்கும் எண்ணம் தான் இதற்கு காரணம்.
6.. தவறு செய்து விட்டு அதற்கு இலஞ்சம் கொடுப்பது. உதாரணமாக சாலை விதிமுறையை மீறி விட்டு அதற்க்கு இலஞ்சம் கொடுத்தால் போலீஸ் விட்டு விடுவார்கள், அல்லது கோர்ட்தில் போடும் அபராதத்தை விட குறைவாகத் தானே இலஞ்சம் கொடுத்தேன், அதனால் என் பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம் என்று சொல்பவரா நீங்கள்? நீதிமன்றத்தில் நிலையை சொன்னால்,இதை விட குறைவாக கட்ட வாய்ப்பு உள்ளது. ஏன் இந்த சிறு குற்றங்களுக்கு, அதை ஒத்துக் கொண்டால், நீதிமன்றத்திற்கு நேரில் போகாமல், தபாலிலேயே கட்டலாம் என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?
. 7.. சரி உண்மையாகவே சம்பந்தப்பட்ட அதிகாரி இலஞ்சம் பெறுவதற்காக நமக்கு உடனடியாக கிடைக்க வேண்டிய அத்யாவசிய தேவைகளைக் கூட உடன் செய்யாமல் ஒத்தி போடுகிறார் என்றால் என்ன செய்வது ……….இலஞ்ச ஒழிப்புத் துறையை அணுகி அவர்களுடன் சென்று இலஞ்சம் கொடுப்பது போல் செய்வது தான்.
உங்களுக்கு தெரியும் தானே. அவ்வாறு செய்யும் போது தான் இலஞ்சம் கொடுப்பது குற்றம் கிடையாது. ஏனென்றால் இப்போது இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இலஞ்சம் வாங்குபவர் மட்டுமல்லாமல், இலஞ்சம் கொடுப்பவர் மேலும் குற்ற வழக்கு பதியப் படும் என்று?
