லஞ்ச தடுப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லஞ்ச தடுப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூன், 2021

பணிபுரியும் இடத்தில் நேர்மையாக இருந்தால் இடையூறுகள ஏற்படுகிறது ஏன்? இலஞ்சத்தை ஒழிக்க முடியாததற்கு காரணமாக இருப்பது கொடுப்பவர்களா? வாங்குபவர்களா? லஞ்சம் ஏதும் கொடுக்காமல் இங்கே எதுவும் நடக்காது என்று நீங்கள் நினைத்த தருணம் எது? அந்த அனுபவத்தை பகிருங்களேன்.

 "மிகவும் நேர்மையாக

இருக்காதீர்கள்

ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்

நேர்மையானவர்களே

முதலில் பழிதூற்றப்படுவார்கள். …….சாணக்கியா

அந்த காலத்திலேயே சாணக்கியர் , நேர்மையானவர்கள் துன்பப் பட நேரிடும்ன்னு எச்சரிததிருக்கிறார்.

இது சம்பந்தமாக நான் படித்த ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் புதிதாகப் போடப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 4,5 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க்கின்றன.

யாருமே அங்கில்லை. ரயில்கள் ஏதும் அப்போது வரும் நேரமில்லை என்பதால் அவர்கள் அங்கு விளையாடுவதை யாரும் பெரிதாகக் கண்டுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் அதனை ஒட்டி யுள்ள புழக்கத்தில் இல்லாத பழைய தண்டவாளத்தில் ஒரு குழந்தை மட்டும் தனியே விளையாடிக் கொண்டிருக்கிறது.

இப்போது திடீரென அந்த வழியே ஒரு ரயில் வருகிறது. தூரத்திலேயே ரயில் என்ஜின் டிரைவர் இந்த குழந்தைகளை பார்த்து விடுகிறார். வண்டி வரும் வேகத்திற்கு அதனை நிறுத்தவும் முடியாது. குழந்தைகளும் விளையாட்டு மும்முரத்தில் உள்ளன. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு. ….பெரிய ரயில் விபத்து நடக்காமல் தடுக்க அவர் என்ன செய்திருப்பார் சொல்லுங்கள்……………….

ஆமாம். புழக்கத்தில் இல்லாத அந்த பழைய ரயில் தண்டவாளத்திற்கு தன ரயில் பாதையை திருப்பி விடுகிறார். அதனால் அங்கு விளையாடும் குழந்தையின் கதி அவருக்குத் தெரியு,ம். ஆனால் அந்த 4,5 குழந்தைகளைக் காப்பாற்ற, அந்த ஒரு குழந்தையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

இப்போது சொல்லுங்கள்? அந்த ஒரு குழந்தை செய்த தவறு என்ன? ஆட்கள் புழக்கம் இல்லாத பழைய ரயில்வே தண்டவாளத்தில் விளையாடியது தவறா? அல்லது புழக்கம் உள்ள தண்டவாளத்தில் இந்த குழந்தைகள் விளையாடியது தவறா?

ஆனால் தவறே செய்யாத குழந்தை தண்டிக்கப்பட்டது ஏன்?

ஏன் என்றால், இங்கு செய்யும் செயல் பார்க்கப்படவில்லை.. செய்த நபர்களின் எண்ணிக்கை பார்க்கப்படுகிறது. அதனால் தான் தவறுகள் செய்பவர்கள் அதிகமாகப் பாதுகாக்கப்படுகின்றனர். தவறு செய்யாத சிலர் இடையூருக்கு உள்ளாகின்றனர். துன்பப்படுகின்றனர். காரணமின்றித தண்டிக்கப்படுகின்றனர்.

இதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள் தானே? "புகழ் பெற்றது எல்லாமே சரியானதல்ல. சரியானதெல்லாம் புகழ் பெற்றதில்லை."

சரி நேர்மையானவர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் கஷ்டப்படுகின்றனர். நேர்மையற்றவர்கள் யார்? லஞ்சம் வாங்குபவர்களா?.

உண்மையை சொல்ல்லுங்கள். அவர்கள் மட்டும் தான் குற்றவாளியா ? கொடுப்பவர்கள் இல்லையா? இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்ட விரோதமானது என்று தெரிந்தும் தன்னுடைய காரியம் முடிந்தால், சரி, என்று எண்ணி அதற்கு ஒத்துழைப்பவர்களும் தானே அதற்கு காரணகர்த்தா?

லஞ்சம் ஏதும் கொடுக்காமல் இங்கே எதுவும் நடக்காது என்று நீங்கள் நினைத்த தருணம் எது? அந்த அனுபவத்தை பகிருங்களேன். என்று தான் நினைப்பதும் இல்லாமல் மற்றவர்களின் அனுபவங்களையும் கேட்கும் அளவிற்கு இது தவிர்க்கமுடியாதது என்று எண்ணும் அளவிற்கு ஒரு குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் என்னென்ன?

  1. இலஞ்சம் எங்கும் உள்ளது.
  2. இலஞ்சம் எப்போதும் உள்ளது.
  3. இலஞ்சத்தை ஒழிக்க முதலில் நம் மனமாற்றம் தேவை.
  4. இலஞ்சம் மோசமானதல்ல. நாம் கொடுக்கும் பணத்திற்கு நம் வேலை நடந்து விடுகிறது.
  5. இலஞ்சம் மேலிடத்திலிருந்து இருக்கிறது. சிஸ்டமே சரியில்லை.

இப்படி சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு இலஞ்சம் எதற்கு கொடுக்கிறார்கள். கூர்ந்து பார்தீர்களேயானால், சில காரணங்கள் புரியும்:

  1. நம்முடைய வேலை சீக்கிரம் முடியனும்.
  2. வசதி……நமக்கு அந்த வேலை சம்பந்த நடைமுறைகள் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. நேரமும் இல்லை. பணத்தைக் கொடுத்தால் அவனே எல்லா வேலையும் செய்துக் கொடுத்து விடுவான்.
  3. பயம் மற்றும் ஒரு விடுதலை உணர்வு.

நிறையப் பேருக்கு அரசாங்க அலுவலகத்திற்கு ஒரு வேலை விஷயமாக போகவேண்டும் என்றாலே பயம். இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நம்மை அல்லது நம் சம்பந்தப்பட்ட வேலையில் ஏதேனும் கோளாறுஆகிவிடுமோ என்று.

இது தேவையில்லாதது. தாசில்தார் அலுவலகத்திலும் RTO அலுவலகத்திலும் ஏன் இலஞ்சம் தலை விரித்தாடுகிறது ? ஏனென்றால் அதை ஊக்குவிப்பது நாம் தானே…புது வண்டி, வீடு வாங்குறோம். டிப்ஸ் போல நாம சந்தோஷத்திலே கொடுக்கிறது தானே .என்ற நினைத்து கொடுத்து கொடுத்து, இப்போ அது வாங்கவில்லை என்றால் அங்கே வேலையே ஓட என்ன நடக்கவே மாட்டேங்குது.

4. அறியாமை மற்றும் கற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை

நமக்கு எந்த விஷயத்தையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு அரசாங்க ஆபீசில் நாம் மனு போட்டால், அதை இத்தனை நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என்று அவர்களுக்கு ஒரு நடைமுறை உத்தரவு உள்ளது. அதற்கு கருவியாகத் தான் தகவல் அறியும் சட்டம் இருக்கிறது. நம் மனு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்கு. நம் கையில் இருக்கும் போர்க் கருவிகளைப் பற்றி நமக்கு தெரியவில்ல, தெரிந்துக் கொள்ளும் ஆர்வமில்லை. சும்மா அந்த ஆயுதத்தை தூக்கித தூரப் போட்டு விட்டு , அவர்களின் உதவியை நாடுகிறோம்.

5. . தரகர்கள் மற்றும் புரோக்கர்கள் சொல்லும் தவறான தகவலை நம்புவது

நம்முடைய வேலை சம்பந்தப்பட்ட அலுவலக நடைமுறைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமல், அதற்கான முயற்சி ஏதும் எடுக்காமல், தரகர்கள் மற்றும் புரோக்கர்கள், அது சிக்கலான நடைமுறை என்பதையோ, மேலதிகாரி பணம் கேட்கிறார் என்று சொல்வதையோ நம்பி இலஞ்சம் கொடுப்பது. இங்கே ஒருவர் முதல் தகவல் அறிக்கை நகல் பெற ரூபாய் ஐந்தாயிரம் இலஞ்சம் கொடுத்ததை எழுதி இருந்தார். இறப்பு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை உடன் பதிவு செய்து, பிரேத பரிசோதநாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் உடன் செய்ய வேண்டும். , இதில் தாமதம் ஏற்படுவதாக புகார் அவர் உயர் அதிகாரிக்கோ, அல்லது லஞ்ச ஒழிப்புத துறைக்கோ தெரிவித்தால் அவர் வேலைக்குத் தான் ஆபத்து. எனவே அலுவலக நடைமுறை தெரிந்து நாம் செயல் பட்டால், இலஞ்சம் கொடுக்கத் தேவை இருந்திருக்காது.

இலஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற காலம் காலமாக இருக்கும் எண்ணம் தான் இதற்கு காரணம்.

6.. தவறு செய்து விட்டு அதற்கு இலஞ்சம் கொடுப்பது. உதாரணமாக சாலை விதிமுறையை மீறி விட்டு அதற்க்கு இலஞ்சம் கொடுத்தால் போலீஸ் விட்டு விடுவார்கள், அல்லது கோர்ட்தில் போடும் அபராதத்தை விட குறைவாகத் தானே இலஞ்சம் கொடுத்தேன், அதனால் என் பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம் என்று சொல்பவரா நீங்கள்? நீதிமன்றத்தில் நிலையை சொன்னால்,இதை விட குறைவாக கட்ட வாய்ப்பு உள்ளது. ஏன் இந்த சிறு குற்றங்களுக்கு, அதை ஒத்துக் கொண்டால், நீதிமன்றத்திற்கு நேரில் போகாமல், தபாலிலேயே கட்டலாம் என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?

. 7.. சரி உண்மையாகவே சம்பந்தப்பட்ட அதிகாரி இலஞ்சம் பெறுவதற்காக நமக்கு உடனடியாக கிடைக்க வேண்டிய அத்யாவசிய தேவைகளைக் கூட உடன் செய்யாமல் ஒத்தி போடுகிறார் என்றால் என்ன செய்வது ……….இலஞ்ச ஒழிப்புத் துறையை அணுகி அவர்களுடன் சென்று இலஞ்சம் கொடுப்பது போல் செய்வது தான்.

உங்களுக்கு தெரியும் தானே. அவ்வாறு செய்யும் போது தான் இலஞ்சம் கொடுப்பது குற்றம் கிடையாது. ஏனென்றால் இப்போது இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இலஞ்சம் வாங்குபவர் மட்டுமல்லாமல், இலஞ்சம் கொடுப்பவர் மேலும் குற்ற வழக்கு பதியப் படும் என்று?

திங்கள், 7 ஜூன், 2021

பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்காமல், பத்திர எழுத்தாளர், வழக்கறிஞர் இல்லாமல் நாமே நேரடியாக பத்திரம் தயார் செய்து பதிவு செய்வது எப்படி? ஏதாவது அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா?

 பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கத் தேவையில்ல்லை. பதிவு செய்ய அவர்களே வழிகாட்டுவார்கள்.

ஆனால் பத்திரம் எழதுவதை முறையாக பயின்ற பத்திர எழுத்தாளர் அல்லது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பதே நல்லது.

ஏன்?

  • பத்திரம் என பெயர் வந்ததே அது சொத்து நம்மிடம் இருக்கும் காலம் வரை பத்திரப்படுத்தி வைக்கவே.
  • அதற்கு செலவு கணக்கு பார்த்தீர்களானால் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால் பின்னால் சரி செய்வது கடினம்
  • கூகிள்லே மருத்துவம் பத்தி தெரிஞ்சிக்கிற யாரும் தனக்கு வைத்தியம் தானே பார்க்கிறதில்லை. அது போல தானே. பத்திரம் தயாரிப்பது குறித்து தெரிஞ்சுக்கோங்க. சரியா தயாரிக்கப்பட்டிருக்கான்னு பார்த்துக்க உதவும் அவ்ளோ தான்.


இந்த நாகரிக உலகத்தில் தற்போதும் வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் போக்குவரத்து காவலர்கள் வெளிப்படையாக லஞ்சம் வாங்குவது எதை காட்டுகிறது?

 ஏன் வாங்குகிறார்கள்?

நாம் கொடுப்பதால்…

நாம் ஏன் கொடுக்கிறோம்?

ஒரு குற்றத்தை செய்து விட்டதை மறைக்க…

நாம் ஏன் மறைக்க வேண்டும்?

தண்டனையிலிருந்து தப்பிக்க…

தப்பிக்க வேண்டாமென்றால்?

அபராதத்தை கட்ட வேண்டும்.

அதனால் நமக்கு நன்மையா?

கண்டிப்பாக நன்மை தான்.

எப்படி?

அடுத்த முறை இந்த குற்றத்தை செய்ய மாட்டோம்..

இப்போது பதில் சொல்லலாம்…

இந்த நாகரீக உலகில் தற்போதும் வெளிப்படையாக கூச்சமே இல்லாமல், செய்த குற்றத்தை மறைக்க, போக்குவரத்து காவலர்களிடம் வெளிப்படையாக லஞ்சம் கொடுபது எதை காட்டுகிறது?


என்ன தான் லட்சகணக்கில் சம்பளம் வாங்கினாலும், ஒரு சில அரசு அலுவலர்கள் பிச்சை(லஞ்சம்) எடுப்பது ஏன்?

 அவர்கள் கடமையாக செய்ய வேண்டியதை செய்ய, பிச்சை போட்டு செய்ய நாம் பழக்கியதால்…


ஒரு அரசு ஊழியன் வரிசையில் செய்ய வேண்டியதை முன்னுரிமை கொடுத்தும், செய்யக்கூடாததையும் செய்ய வைக்க, நாம் அவர்களுக்கு கொடுப்பது, ஒரு குற்றத்தை செய்ய தூண்டிவிடுதல் என்று ஆவதால், இப்போது கொடுப்பவனும் குற்றவாளியே!!

வாங்குபவனை மட்டும் குறை சொல்வது, எப்படி இருக்கிறதென்றால், தன் தேவைக்கு போபவன், அவளுக்கு மட்டும் "விபச்சாரி" என்று பட்டம் சூட்டுவது போலவும், இவர்கள் அனைவரும் ஒழுக்க சிகாமணிகள் என்று காட்டும் யுக்தி!!😃

முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்போம்..பின்னர் மற்றவரிடம் குறை காண்போம்!!

ஒன்று சொல்கிறேன்.தன் பணியை தாமதப்படுத்தினால் பணம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில்(அப்படி பழகிவிட்டார்கள்)ஒரு அரசு ஊழியர் செய்யும்போது, நாம் எடுக்கும் நடவடிக்கையில், தன் வேலைக்கே ஆபத்து வந்துவிடும் என்ற பயம் வந்தால், அந்த பயம் தொடர்கதையானால், திரும்ப அவ்வாறு செய்ய அவருக்கு தைரியம் வராது. அந்த தைரியத்தை கொடுப்பதே நாம் தான்.

எனக்கு தெரிந்த ஒருவர், இப்படி பட்டா மாறுதல் கேட்டார். இவர் போய் சம்பந்தப்பட்டவரை பார்க்கப் போன போது அவர் வழக்கம் போல 'பேசினார்'.இவர் ஒன்றும் பேசாமல் வந்து விட்டார்.அடுத்த முறை இவர் போனபோது, அவரிடம் ஒரு cd யை கொடுத்துவிட்டு வந்து விட்டார். ஒரே வாரத்தில் இவர் வேலை முடிந்து விட்டது.

அந்த சிடியில் இவர்கள் பேச்சு பதிவாகியிருந்தது!!

அடுத்து ஒவ்வொரு முறை இவர் செல்லும்போதும் இவர் வேலை சரியாக நடந்து விடும்.!!

ஒரு முறை நானே ஒரு பட்டா மாறுதலுக்கு மனு செய்திருந்தேன்.அவர்கள் கேட்ட விளக்கம், நில ஆய்வு என்று அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் ஹெட் சர்வேயர் அறிக்கை, சோனல் தாசில்தார் கையெழுத்து என்று நீண்டது.கடைசியாக ஒரு மனு நாளில், நேரே குறை கேட்பு இடத்தில், மனுவை தாசில்தாரிடம் கொடுத்து, "எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள்? " என்று கேட்டேன். சுற்றி உள்ள பொதுமக்கள், ஊழியர் முன்னிலையில் அவர் பதிலே சொல்லவில்லை. மாலை வர சொன்னார்கள்.நான் போனபோது ஆன்லைனில் ஏற்றியாகிவிட்டது என்று புது பட்டாவை கொடுத்தார்கள்.☺️

நாம் தான் நம் வேலைக்கு சிறிது மெனக்கெட வேண்டும்.குறுக்கு வழியில் போய் விட்டு, மற்றவரை குறை சொல்லக்கூடாது.நமக்கு தான் தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளது.லஞ்ச ஒழிப்பு துறை உள்ளது. இவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல், பழியை மற்றவர் மீது போடக் கூடாது..எந்தப் புற்றில் எந்த பாம்பு😀 உள்ளதோ என்ற பயம் வந்தால் தன்னால் மாறி விடுவர்.இல்லையெனில், "இவர் தான் தூண்டினார் " என்று நம்மை மாட்டிவிட்டாலும் விடுவர்.இன்று சட்டம் அப்படித்தான் உள்ளது!

அதே போல, அவரவர் தரப்பில் முடிந்தவரையில் தர்மம் பிறழாமல் நடந்தால், தர்மம் தன்னைத் தானே காப்பாற்றி கொள்ளும்.அதை விட்டுவிட்டு, நாம் அதர்மம் செய்துவிட்டு…😀

நான்கு விரல் நம்மை நோக்கியிருக்க, ஒற்றை விரலால் இன்னொருவரை சுட்டுவதோ?

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...