ஆபாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆபாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 நவம்பர், 2021

ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

        ஆபாசம் என்பது பார்க்கும் பார்வையில் உள்ளது என்பது என் கருத்து.

        அதை மறைத்துக் கொண்டு மற்றவர் அணியும் உடையில் உள்ளது என்று குற்றத்தை மடை மாற்றுவார்கள்!!

        இப்போது அடுத்த படியாக தாய்மையும் ஆபாசம் என்ற நிலைக்கு வந்து  விட்டனர்!!

        பாலூட்டும் பெண்ணை தன் தாயாக, சகோதரியாக பார்க்கும் நிலை போய், தன் காம இச்சையை தூண்டும் தன்மையாக பார்த்ததும் இல்லாமல், அது "அசிங்கம்" என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரும் அளவிற்கு தரம் குறைந்து விட்டது!

        " 'தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணின்' படம் உள்ள பத்திரிக்கையின் அட்டை ஆபாசமானதாக அறிவிக்க கோரி மனு போடப்பட்டது இங்கல்ல...

        கற்றோர் அதிகம் உள்ள கடவுளின் நாடான கேரளத்தில்.


        ஆனால் அதை மறுத்த மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம் "ஒருவரின் ஒழுக்கத்தை பற்றிய கருத்து அதிர்ச்சியடையச் செய்கிறது" என்றும் இது ஒரு "மழுப்பலான கருத்து" என்றும் கூறியுள்ளனர்.

        "ஒருவருக்கு ஆபாசமாக தெரிவது மற்றொருவருக்கு பாடல் வரிகளாக தெரியும்": என்றும் குறிப்பிட்ட. மாண்புமிகு தலைமை நீதிபதி ஆண்டனி டோமினிக் மற்றும் நீதிபதி தாமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர், “நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தாலும், ஆபாசத்தை எங்களால் பார்க்க முடியவில்லை." என்றனர்.

        அத்தோடு, நம் பண்டைய வரலாற்றை சுட்டிக்  காட்டி," இந்தியாவின் நீண்ட வரலாறு முழுவதும், இந்தியாவின் கலைகள்-காட்சி மற்றும் இலக்கியம்-மனித உடலின் அழகை தொடர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள், இதை பற்றிய குறிப்புகளை, அப்போதைய மிகவும் பாராட்டப்பட்ட பயண எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள் நூலில் உள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல், அதை தங்கள் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

.         "யோகாவின் பாரம்பரியம், என்பது, அதை முழுமையாக்குவதையும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று தொடரும் அவர் "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடலை கடவுளை போல மாற்றும் நோக்கம் கொண்டதே யோகக் கலை. இந்த பாரம்பரியத்தில் தெய்வீகம். , உணர்வு மற்றும் புனிதமானவை எதிர்க்கப்படவில்லை. உண்மையில் உணர்வுபூர்வமானது என்பது, புனிதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான் பார்க்கப்பட்டது.   அதனால் அவர்கள் கடவுள்களும் எப்போதும் மனிதாபிமானமுள்ளவர்களாக, மிகுந்த அழகுடையவர்களாக சித்தரிக்கப்பட்டனர்" என்று  அவர் குறிப்பிட்டதை கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்!

"காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"

'One Man's Vulgarity Is Other Man's Lyric': Kerala HC Refuses To Declare 'Breastfeeding Woman On Magazine's Cover' As Obscene | Live Law 'One Man's Vulgarity Is Other Man's Lyric': Kerala HC Refuses To Declare 'Breastfeeding Woman On Magazine's Cover' As Obscene via @livelawindia William Dalrymple on Twitter

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...