Vigilantibus non dormientibus jura subveniunt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vigilantibus non dormientibus jura subveniunt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 ஜூன், 2021

ஐந்து பேருக்கு வர வேண்டிய சொத்தை ஒருவர் மட்டும் பெற்றோரிடம் சாதகமாகப் பேசி எழுதி வாங்கியுள்ளார், இது UDR சர்வே சட்டம் மூலம் போனால் மீதி உள்ள நான்கு பேருக்கும் சொத்து கிடைக்குமா?

         யூ.டிஆர். சர்வே விதிகளுக்கும் நில உரிமை மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை.

        யூடிஆர் என்ற இந்த டேட்டா அபடேட் ரெஜிஸ்ட்ரி, என்பது 1979_ 89 வாக்கில் தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் வகைப்படுத்தப்பட்டு  அளவிடப்பட்டு ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றின் விஸ்தீரணம் , உரிமையாளர் எல்லாம் கணினியில் ஏற்றப்பட்டது .அப்போது கொடுக்கப்பட்ட து தான் யூடிஆர் பட்டா எனப்படுவது

        அதே சொத்தில் நாங்களும் தானே 30 வருடமாக கூட்டாக அனுபவித்து கொண்டு இருந்தோம், ஒருவருக்கு பெயர் மாற்றி, மற்றவரை விட்டால் எப்படி அது சரி? என்கிறீர்களா?

        அதுவும் சரி தான்.ஆனால் அதை கேட்டிருக்க வேண்டியது யு.டி.ஆர் பட்டா கொடுத்த போதே.. முன்று தசாப்தம் கழித்து வந்து கேட்டால்?

        நல்ல தூக்கத்தில் இருந்தோமா?


        நமக்கு அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது தெரியும் அல்லவா ?

        நாம் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை ஆர்டிகில் 21 மூலம் பெற்றிருக்கிறோம். இந்த "தூங்குவது" கூட அந்த அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கியது . தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை தேவையில்லாமல் யாரும் தொந்தரவு செய்வது என்பதை சட்டம் அனுமதிக்காது . அதை உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.timesofindia.com/india/right-to-sleep-a-fundamental-right-says-supreme-court/articleshow/12025358.cms&ved=2ahUKEwjC4-TtjbzxAhVGT30KHYiKAXQQFjABegQIAxAC&usg=AOvVaw3g1oX4K0ayqff3n9NDulH3

        அதேபோல தன் உரிமைகளை கேளாமல், தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கும்/, இருந்தவர்களுக்கும் ,சட்டம் உதவாது!!

Vigilantibus non dormientibus jura subveniunt

        இது ஒரு லத்தீன் மாக்ஸிம் . இதன் பொருள் என்னவென்றால் "சட்டம் விழிப்போடு இருப்பவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை பெறுவதற்கு உதவி செய்யும் தூங்குபவர்களுக்கு அல்ல" என்பது

        அவரது உரிமையைப் பொருட்படுத்தாதவர்களுக்கு சட்டம் உதவாது.. ஒருவர் தன் உரிமையை கோர, அந்த உரிமையைக் கவனிக்க வேண்டும். . அவரது உரிமைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சட்டத்தின் நன்மைகளை பெற தகுதியுடையவர்கள்.. அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்கும் நபர்களுக்கு சட்டம் அவர்களுக்குண்டான உரிமைகளை வழங்குகிறது.

        வழக்கமாக, ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நிவாரணம் பெற, செயல்படுத்துவதற்கு , சட்டரீதியான வரம்புகளை, சட்டம் பரிந்துரைக்கிறது. இல்லையென்றால்,கால வரையற்றதாக போய்க்கொண்டே இருக்குமே..பிரசுனைக்கு தீர்வு என்று ஏதாவது ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம்?

        ய.டி.ஆர் பட்டா கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிவிட்டது . சட்டப்படி, தொடர்ச்சியாக 30 வருடங்கள் ஒரு பட்டா ஒருவரின் பெயரில் இருக்கும் பொழுது, அந்த சொத்து அவருக்கு ஏகபோக உரிமையாகவும் ஆகிவிடும் .

        நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான காலத்திற்குப் பிறகு ஒருவர் வழக்குத் தொடுகக முடியாது. சட்டரீதியான காலக்கட்டத்தில் "சும்மா" இருந்த ஒருவர், சட்டரீதியான வரம்புக்குப் பிறகு உரிமை கோர முடியாது.   எனவே யு.டி.ஆர்.பட்டாவில், இப்போது உரிமை மாற்றம் என்று கேட்பதை கால வரையறை சட்டம் அனுமதிக்காது .

        என் தாத்தா பாட்டிக்கு அந்த அளவிற்க்கு விவரம் தெரியாது அப்பா அம்மாவுக்கு. தெரியாது .அந்த அளவிற்கு எங்களுக்கு எல்லாம் சட்ட அறிவு அப்போது இருக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்களா?    அதையும் சட்டம் அனுமதிக்காது .

ஏனென்றால் ...

Ignorantia juris non excusat

இதுவும் ஒரு லத்தீன் மாக்ஸிம் தான்! .இதன் பொருள்
"சட்டத்தின் அறியாமை என்பது தவிர்க்கக் கூடிய காரணம் இல்லை ”.

        நாமெல்லாம் பொதுவாக நினைத்து கொள்கிறோம்..
"இந்த சட்டம் அப்படிங்கிறது எல்லாம் வக்கீல்களுக்கும் ஜட்ஜ்களும் மட்டும்தான் தெரிஞ்சுக்க வேண்டியது நமக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது வக்கில போய் பார்த்து, கோர்ட்டுக்கு போனா போதும் அப்போ அவர் சொல்ற சட்ட விதிகளின்படி நடந்தா போதுமம்னு" நினைக்கிறோம் ஆனால் உண்மை அப்படி கிடையாது

        ஒரு குடிமகனாக இருப்பவன், அந்த நாட்டின் அடிப்படை சட்ட விதிகளை தெரிந்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பது அவனுடைய கடமைகளுள் ஒன்று. அந்தக் கடமை தவறி, அதனால் அதனை காரணமாக வைத்து உரிமையும் கோரவும் முடியாது!
சட்டத்தின் கடுமையிலிருந்து தப்பிக்க அறியாமையை ஒரு பாதுகாப்பாக மன்றாட உங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி அனுமதித்தால், எல்லோரும், சட்டத்தையும் அதன் விளைவுகளையும் தெரிந்துக்  கொண்டு கூட, அறியாமையை ஒரு பாதுகாப்பாக முன்  வைக்க முடியும் இல்லையா?,

        நிறைய இடங்களில், இந்த பட்டாவில், தாத்தா பெயரில் அப்பா பெயரில் பங்காளி பெயரில் பட்டா இருப்பதை பெயர் மாற்றம் செய்யாமலும், அதில் உள்ள அளவுகள், சர்வே எண் தவறாக குறிக்கப்பட்டுள்ளதை திருத்தம் செய்யாமலும் இருக்கிறார்கள்.  அப்படியே திருத்தம் செய்ய கோரிக்கை மனுக்களும் நிலுவையில் இருக்கின்றன .அவற்றை பொருத்துதான் சரி செய்து கொடுப்பார்களே ஒழிய, 30 வருடங்களுக்கு முன்னர் ,பட்டா யார் பெயரில் இருந்ததோ அதனை தற்போது உரிமை மாற்றம் செய்துக் கொள்வதற்கான சட்டத்தில் வழிவகை இல்லை. அதற்கான நடவடிக்கை எடுத்தாலும் பலன் கிடையாது என்பதே நிதர்சனம்..

        அதுக்காக, அஞ்சு பேருக்கு உரிமையிருக்கிற சொத்தை, நான்கு பேரை விட்டுவிட்டு தன் பெயருக்கு மட்டும் மாற்றி இருக்காரே. அதை, நீக்குவதற்கான வழியாவது இருக்கான்னு கேட்டால், அதுவும் கிடையாது

        இங்கே ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கும். "கெடுவான் கேடு நினைப்பான்" அப்படிங்கறது நம்முடைய மூதுரை
எல்லாருக்கும் கிடைக்க வேண்டியதை தனக்கு மட்டுமே ஒருத்தர் வாங்கிக் கொண்டு போனாலும், அதற்கு உண்டான கர்மங்களை அவர் அனுபவிப்பார்.   அதை நாம தான் போயி அவருக்கு காட்டணும் அப்படிங்கறது கிடையாது. ஒவ்வொரு கர்மாவுக்கும் உண்டான பலன்களை , அது முதிர்ச்சி அடைந்து சரியாக போய் காட்டும் என்பதை தான் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" அப்படின்னு சொல்றாங்க..

        இப்படித்தான்..சீடர்கள் குருவிடம் கல்வி கற்று முடித்து, கிளம்பும்  போது, "தர்மத்தைக் காத்து நீதியின் வழியாக நடங்கள்" என்று ஆசீர்வாதம் சொல்றாரு. இதைக் கேட்ட சீடர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது "என்ன குருவே நீதி வேறு தர்மம் வேறா?" அப்படின்னு கேட்கும் பொழுது அவர் சொல்றாரு
"நீதி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாறக் கூடியது. ஒருத்தர கொலை செய்தது சட்டப்படி குற்றம் என்றாலும் கூட ,அது அவருடைய தற்காப்புக்காக அந்த கொலையை செய்தா, அது குற்றமாகாது அது போல நீதி அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடியது ஆனால் தர்மம் அப்படி அல்ல அது நிலைத்து நிற்கக் கூடியது அதனால்தான் தர்மத்தை காத்து நீதியின் வழியில் நடந்து"ன்னு ஆசீர்வாதம் சொன்னேன் என்றார்

        நம்ம உச்ச நீதிமன்றத்தின் லோகோ கூட என்ன தெரியுமா?
"Yato Dharma Tato Jaya
  

பொருள்: "தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கிறது"



நன்மையே விளையட்டும்!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...