திங்கள், 7 ஜூன், 2021

ஜீவனாம்சம் கொடுக்க சொல்லும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையிடுவதாலேயே அதை கட்டாமல் தவிர்க்க முடியுமா?

 தன்னை தானே பராமரித்துக் கொள்ளமுடியாத மனைவி, குழந்தை, பெற்றோரை காக்கத் தவறும் நபரின் மீது ஜீவனாம்சம் கோரி கு.வி.மு.ச. 125 (1) ன் கீழ் மாஜிஸ்திரேட்டு முன் மனு போடலாம் என்பது நமக்கு தெரியும்.

அந்த ஜீவனாம்ச உத்தரவை திரும்ப பெறுமாறு மற்றொரு மனு போடுகிறார். ஆனால் மாஜிஸ்திரேட்டு அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு போடுகிறார். இதை எதிர்த்து வழக்கு போடுகிறார் உயர் நீதிமன்றத்தில்..

உயர் நீதிமன்றமோ, மனுதாரருக்கு உள்ள மேற்படி பராமரிக்கும் கடமையானது, தொடர்ந்து வரக்கூடியது, அதனால் மாஜிஸ்திரேட்டு போட்ட உத்தரவு சரியே என்று சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.இது நடந்தது அலகாபாத்தில் என்றாலும், இங்கும் அதே நிலை தான்.

அவர் அந்த ஜீவனாமச பணத்தை கட்டிவிட்டேன் என்று சொன்னபோது, அதையும் அந்த நீதிமன்றத்திலேயே முறையிட சொல்லியுள்ளது..

சட்டத்தை தள்ளி வையுங்கள்… .

கன்னிகாதானம் பெற்று, ஏழு அடி எடுத்து வலம் வந்து, உன் சுக துக்கங்களில் பங்கு பெறுவேன் என்று அக்கினி முன்பு உறுதி சொல்லி மணம் புரிந்தவர், அந்த கடமையை தவறலாமோ?

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...