எது சட்டப் பூர்வமானது என்று இங்கு நினைக்கிறோமோ அது இன்னொரு இடத்தில சட்டவிரோதம்.அதே போல அங்கு சட்டப்படியானது , இங்கு சட்டவிரோதம். அப்படியெனில் இடத்திற்கு, இனத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருப்பது.
ஆனால் தர்மம்? அதற்கும் சட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
சட்டம் –
நிஜத்தை நிரூபிக்கக்கூட
பொய்யை –
சாட்சிக்கு அழைக்கும்..!தர்மமோ –
நிஜத்தையே
சோதனைக்கு உள்ளாக்கும்..!முன்னது –
சட்டத்தின் தர்மம்..
பின்னது –
தர்மத்தின் சட்டம்..!___கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
சரி..கேள்விக்கு வருவோம்…
எப்படியோ சட்ட விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருந்தாலும், நியாயம், தர்மம் மனசாட்சிப்படி தவறாக /எதிராக நடப்பவர்கள் யார் யார் என்று பார்ப்போமா?
நேராக நம் வீட்டிலுள்ள முகக் கண்ணாடி முன்பு போய் சற்று நிற்போம்…அடையாளம் தெரிகிறதா?…
அதெப்படி… நானா என்று தானே கேள்வி வருகிறது…?
வரும்...கண்டிப்பாக வரும்.😀..
மற்றவர் என்றால் நீதிபதியாகவும், தனக்கு என்னும் போது, வக்கீலாகவும் மாறுபவர் தானே நாம்?
சொல்கிறேன்.
- தொழில் செய்பவர்களை எடுத்து கொள்வோம்.பணம் வந்ததாக, செலவு ஆனதாக கணக்கு வழக்கு வைத்திருப்பர்.ஆனால் நியாயம் தர்மம் மனசாட்சிப்படி 100% அப்படியா?
- வேலை செய்கிறவரா?அவர் தாக்கல் செய்யும் வருமான வரி கணக்கில் உள்ளது 100% அப்படியா? அரசு கொடுத்திருக்கும் சலுகைகள் கழித்திருப்போம்.அது போல 100% உண்மையாக செலவழித்திருப்போம்?
- சரி வீட்டில் திருமணம் என்போம் நிச்சயம் செய்வோம்.சட்டப்படி வரதட்சணை வாங்காதது/கொடுக்காதது போல் தான் இருக்கும்.ஆனால்…?
- ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்போம்.ஆனால்…..?
- சரி நம்மை விடுங்கள்.நாம் தேர்ந்தெடுத்த அரசு, அது மாநிலமோ மத்தியோ, முன்னாளோ இந்நாளோ, பின்னே எப்படி இருக்கும்? அங்கேயும் கணக்கும் செயல்நடைமுறைகள் சட்டப்படியிருக்கும். ஆனால்..……..?..
- ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு வெளியே உறவு இருந்தாலும் சட்டப்படி சரி தான்..ஆனால்…?
- இந்த காரணத்தை சொல்லி குழந்தையை வளர்க்கும் உரிமையை பெண்ணிடம் இருந்து பறிக்க கூடாது என்கிறது சட்டம்.ஆனால்…….?[1]
- இப்போதெல்லாம் முதல் குற்றவாளி, இளங்குற்றவாளி, வயதான குற்றவாளி, பெண் குற்றவாளி என்று இனம் பிரித்து, அவர்களுக்கு சலுகை காட்டப்பட்டு, மன்னிப்பு, சமாதானம், குறைந்த தண்டனை, எச்ச்ரிக்கை விடுத்தல், போன்றவை சட்டத்தால் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.ஆனால் தர்மப்படி…?
- கருக்கலைப்பு தெரிந்தே செய்வது சட்டப்படி சரி.ஆனால்..?
- கடன் வாங்கிவிட்டு மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது…
இப்படி பட்டியல் நீண்டுக கொண்டே இருக்கும். அதனால் நிறுத்துவோம்.இங்கே சற்று…
சரி.. இதில் உள்ள பட்டியலில் ஏதேனும் ஒன்றுக்குள் நாம் வந்துவிட்டோம் தானே!!☺️
சட்டப்படி தான் நாம் நடந்துக் கொள்கிறோமே, இந்த தர்மம்/நியாயம் எல்லாம் யார் பார்க்கிறார்கள் என்று தானே நினைக்கிறோம்.
உண்மையை சொல்லுங்கள்..
சட்டத்திடமிருந்து கூட தப்பலாம்.ஆனால் நம் மனசாட்சியிடமிருந்து தப்பிக்கவே முடியாது இல்லையா..
மனசாட்சியின், தர்மத்தின், நியாயத்தின் விதி தான் என்றும் எங்கும் வியாபித்திருக்கும் நிலையான சட்டம். அதனுடைய நீதிமன்றம் நம்முடைய மனமே.அதுவே குற்றம் எது என்று தீர்மானித்து, உடன் தண்டனை கொடுத்து விடும். .அதே போல நியாய்ப்படி, சரியாக நடப்பவருக்கு,
என்றும் தர்மம் தலை காக்கும்..தக்க சமயத்தில் உயிர் காக்கும்…
சட்டமும் தர்மமும் வெவ்வேறாக இருந்தால் தர்மம் ஒரு நாள் சட்டத்தை தண்டிப்பது உறுதி. தர்மத்தை காக்கத் தான் சட்டமே தவிர சட்டத்தின் போக்குக்கு தர்மத்தை வளைக்க கூடாது.
அடிக்குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக