யாரெல்லாம் சட்டப்படி சொத்துகளை வாங்க முடியாது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாரெல்லாம் சட்டப்படி சொத்துகளை வாங்க முடியாது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூலை, 2024

யாரெல்லாம் சட்டப்படி சொத்துகளை வாங்க முடியாது?

 



சொத்தின் உரிமையை வாங்குபவர்களுக்கு  சில தகுதிகளை சட்டம் விதிப்பது போல, அந்த உரிமையை பெறுபவர்களுக்கு  இருக்க வேண்டிய  தகுதியை குறித்து எந்த சட்டத் தடையும் இல்லை. 

ஆனால் சொத்துரிமை மாற்ற சட்டத்தில், ‘உரிமை மாற்றம் பெற தகுதியற்றவராக அவர் இருக்கக் கூடாது என்று’ மட்டுமே பிரிவு 6(h)(3)ல் சொல்லப்படுகிறது. 

அப்படி சட்டப்படி தகுதியற்றவர் யார் யார்?

 யார் யாரெல்லாம் ஒப்பந்தம் செய்ய தகுதி உடையவர் என்பதை இந்திய ஒப்பந்த சட்டத்தின் பிரிவுகள் 11 மற்றும் 12 சொல்கின்றன : சொத்து உரிமை மாற்று சட்டத்தில் சொல்லப்படும் ஒப்பந்தங்கள் குறித்த வாசகங்கள் , இந்திய ஒப்பந்த சட்டத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் பிரிவு  சொல்கிறது. அதே போல இந்திய ஒப்பந்த சட்டத்தில் சொல்லப்பட்ட "ஒப்பந்தம் செய்ய தகுதி உடையவர்" யார் யாரோ , அவர்களை தவிர்த்தவர்கள் "சட்டப்படி தகுதியற்றவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

Ø  அதன் படி பார்க்கும்போது, ஒப்பந்தம் போட தகுதி கொண்டவர் 

!.  18 வயது நிரம்பியவராக

2. திட சித்தம் கொண்டவராக

3. சட்டத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இல்லாமல்

   இருக்க வேண்டும்.


x

o    மைனர் :

சொத்தை வாங்குபவரும் ஆவணத்தில் கையேழுத்திட , வேண்டுமென்பதால்  மைனர் என்னும் போது அவர் நேரிடையாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது.  ஏனெனில் இந்திய பதிவு சட்டமும், எந்த பதிவு செய்யக்கூடிய ஆவணத்திலும் பதினெட்டு வயது நிரம்பாதவர் கையெழுத்திட முடியாது என்கிறது. 

எனவே  ஒரு இளவர் (Minor) ஒப்பந்தம் செய்ய ததியில்லாவர் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்டவர்  பதிவு செய்யாத ஒப்பந்தம் போட்டாலும் , அது இல்லா நிலையது (void ab initio ஆகும் என்கிறது மொகாரி பீபி எதிர் தர்மதாஸ் கோஷ் என்ற வழக்கின் தீர்ப்பு. சமீபத்தில் இந்த பிப்ரவரி மாதம் வழங்கிய தீர்ப்பில் கூட, உச்ச நீதிமன்றம் ,”Sale Agreement With Minor Void, Not Enforceable In Law” என்றுள்ளது. 

அதே போல ஒரு மைனருக்கு தானப்பத்திரம் மூலம், அவர் உறவினர் சொத்தை கொடுத்தாலும், தானம் பெறுபவர் அதை சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். இது போன்ற சட்டத்தடை இருந்தாலும் , அவர் சார்பாக அவரின் பாதுகாவலர் அதில் கையெழுத்திடலாம். கோடை என்னும் போது , அந்த மைனர் சார்பாக அவரின் பாதுகாவலர் அந்த தானத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

இது போன்ற உரிமை மாற்றம் சட்டப்படி செல்லக்கூடியது .அதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க தேவையில்லை ஏனென்றால்,

-èஇந்த உரிமை மாற்றத்தின் முக்கிய அம்சமான மறு பயன் “ எனப்படும் consideration அந்த மைனரால் செய்யப்பட்ட செயல்களாக இருக்கும். (அதாவது ‘அவரின் பால் கொண்ட ‘அன்பு’, பாசம்’  ..போன்றவை )

è மைனர் செய்ய வேண்டிய கடமை ஏதும் இருக்காது.

ð  இந்த உரிமை மாற்றம் மைனருக்கு நன்மை அளிக்கக்கூடியதே

ð  அதே சமயம், ஒரு மைனரால்,ஒரு  சொத்தை குத்தகைக்கு எடுக்க முடியாது. குத்தகை ஒப்பந்தத்தில் அவரின் பாதுகாவலர் கையெழுத்திட முடியாது. ஏனென்றால், குத்தகை பெறுபவரின் பேரில் சில கடமைகள் உள்ளன.   அதனால் மைனர் குத்தகைதாரராக முடியாது.  

 

மைனருக்காக மேலே சொல்லப்பட்ட விதிமுறைகள் அனைத்தும், ஒப்பந்தம் போடத் ததியில்லாத திட சித்தம் இல்லாதவருக்கும் பொருந்தும்.

 

Ø  சொத்துரிமை மாற்ற சட்டமும் சொத்துரிமை பெறுவதற்கு  சில தடைகளை விதிக்கிறது.

·        பிரிவு 136, Actionable Claim ‘ எனப்படக்கூடிய தொடர்தகு பாத்தியத்தை நீதிமன்றத்துடன் தொடர்படைய நீதிபதி, வழக்கறிஞர்கள் , அதன் அலுவலர்கள் அதை பெற தடுக்கிறது.

·        உரிமையியல் நடைமுறை தொகுப்பின் ஒழுங்கு 21 விதி 73ன் கீழ் இந்திய பொறுப்புரிமை சட்டம் (இந்தியன் டிரஸ்ட் ஆக்ட் பிரிவு 62 ன் கீழ் அதன் Trustee என்கிற பொரறுப்புரிமையரோ அல்லது அவர் முகவரோ பொறுப்புரிமை சொத்துகளை வாங்கக் கூடாது.

 

இந்த தகுதி நீக்கம் பெறாத, சட்டப்படி தகுதி கொண்ட நபர்கள் என்றாலும், மேலும் சில காரணங்களுக்காக சொத்துரிமையை பெற தடை இருக்கிறது . அவை:

 

Ø  உரிமை மாற்றத்தின் நோக்கம்

·        சட்டப்பூர்வமானாதாக இருக்க வேண்டும் ..பிரிவு 6

·        ஒப்பந்த சட்டத்தின் பிரிவு 23 ல் சொல்லப்பட்ட பொருளின் படி தான் அதன் நோக்கமும் மறுபயன் எனப்படும் consideration இருக்கவேண்டும். அவை சட்ட விரோதமானதாக இருந்தால், உரிமை மாற்றம் செய்ததே “இல்லா நிலையது”’ என்றாகி விடும்.

·   இந்த சட்டத்தின் பிரிவு 6 (h) (2) ல் சொல்லப்பட்டவை நொடிப்புநிலை சட்டத்தின் (Insolvency Act) வாசகங்களை முறியடிக்கும் நோக்கத்துடன், மறுபயனுடன் கூடி செய்திருந்தாலும், அதன் நோக்கம் சட்ட விரோதமானதாக இருபதால், அப்படி செய்யப்பட்ட உரிமை மாற்றம் ‘இல்லா நிலையது’ என்றாகும்.  

 அப்படி ஒரு உரிமை மாற்றம் பெற்றவருக்கு சொத்து போய் சேராது. அந்த மாற்றம் செய்தவருக்கே சொத்து தங்கியிருக்கும். ஒரு வேளை அந்த சொத்தின் அனுபக்கும் உரிமையை உரிமை மாற்றம் செய்தவர் கொடுத்திருந்தால் , அதை திரும்ப பெற முடியாது. சுவாதீனத்திற்காக வழக்கும் தொடர முடியாது. நீதிமன்றமும் அவருக்கு உதவி செய்யாது. நீதிமன்றத்திற்கு ஒரு பரிகாரம் கேட்டு வருபவர்  தூய்மையானவராக இருக்க வேண்டும் என்பது விதி. சட்டவிரோத செயலில் பங்கு கொண்டவருக்கு நீதிமன்ற உதவி கிடையாது. அதனால் சொத்தின் சுவாதீனத்தை இழந்திருந்தால், அதை திரும்பப் பெற முடியாது.  ஒருவேளை சுவாதீனத்தை பெறாமல் இருந்தால், உரிமை மாற்றம் பெற்றவர் அதை கோர முடியாது. சுவாதீனம் எங்கிருந்ததோ அங்கேயே தொடரும்.

 பொதுவாக குற்ற செயலில் பங்கு கொண்டவன் தன் பணத்தை திரும்ப பெற முடியாது. அது போல உரிமை மாற்றத்தில் குறிப்பிட்ட சட்ட விரோத நோக்கம் நிறைவேறாத போதே, உரிமை மாற்றம் பெற்றவர், உரிமை மாற்றவர் செய்தவர் போல சம அளவு குற்றம் செய்யாத போதே அல்லது மாற்றம் பெற்றவர் சொத்தினை தொடர்ந்து வைத்திருக்க அனுமதிப்பது, சட்டத்திற்கு அல்லது பொது கொள்கைக்கு எதிராக இருக்கும்போது, சொத்தினை திரும்ப பெற நீதிமன்றமுதவி செய்யக் கூடும். இருந்தாலும், இது போன்ற பொது கொள்கையை அடிப்படையாக கொண்டு, தீமைகளில் எது பெரியது அல்லது சிறிய என்பதை மனதில் கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கும்.


        சட்டத்தின் நோக்கம், சமுதாயத்தின் நன்மையை மேம்பட செய்ய          வேண்டுமென்பது தானே!!.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...