ஜீவனாம்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜீவனாம்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஏப்ரல், 2022

மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை என்றால் தமிழ்நாட்டில் விவாகரத்து வழக்குகள் ஒரே நாளில் ஒரு கோடி தொடும் அல்லவா?

 மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை எனபது இப்போதும் சட்டத்தில் இருக்கிறது. என்ன...அதற்க்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது.

  1.  மனைவி திருமண உறவை தாண்டிய உறவில் உள்ளார் என்று  அவள் கள்ளத்தொடர்பு  கொள்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியபோத்து, பொங்கி எழுந்த ஆண் குலம், அதற்க்கு முன்னர் தாங்கள் அதை அனுபவித்து வருவதை வசதியாக மறந்து போனார்கள்!!  ஆனாலும் ஒன்று  அந்த காலத்திலிருந்து ஒரு ஆணை இகழ்வாக பேச வேண்டும் என்றால் அவன்  வீட்டில் உள்ள பெண்ணின் ஒழுக்கத்தை தான் தரக்குறைவாக பேசுவது இன்றும் நடக்கிறது. திருமண உறவில் விரிசல் தொடங்கும் பொத்து ஆண் உபயோகப்படுத்தும் முதல் அஸ்திரமே இது தான்.... பெரும்பான்மையான பெண்கள் இந்த அடியிலேயே 'விழுந்து'விடுவார்கள்!1 இன்னொன்றும் கூட..இந்த திருமணத்திற்கு வெளியேயான இந்த உறவை நிரூபிப்பதும் சற்று கடினம்...
  2. தன் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்னும்போது 
  3. வாழ்க்கை துன்னை இன்னொரு திருமணம் செய்தது கொள்ளும் போது.
  4. ஜீவனாமச  உத்தரவு போட்ட பின்பு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தால், அதாவது வேலையை இழப்பது, நொடித்து போவத்து போன்ற நிலையில், அதனை தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவில் மாற்றம் கோரலாம். அடகே போல மனைவியும், இந்த நிரந்தர வாழ்க்கை  பராமரிப்பு தொகை உத்தரவு போட்டபின்பு, கணவரின் ஊதியத்தில் உயர்வு ஏற்பட்டால், தனக்கு உள்ள பரமாரிப்பு சிக்கலை விவரித்து, ஏற்கனவே நிர்ணயத்த தொகையை உயர்த்த கோரலாம்.

  5. ஒரு மனைவி மற்றவரை விட அதிகமாக சம்பாதிக்கும் போது, ​​அதிக வருமானம் ஈட்டும் மனைவி மற்றவருக்கு நிதிப் பொறுப்பாக இருப்பார்.உதாரணமாக, அவள் வாழ்வதற்கு மட்டுமே போதுமான பணம் சம்பாதிப்பாள், ஆனால் திருமணத்தின் போது சிறந்த வாழ்க்கை முறையை வழிநடத்துகிறாள் என்றால், அந்த வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதற்காக அவளுடைய சம்பாதிப்பிற்கு கூடுதலாக பணம் செலுத்துமாறு கணவனை நீதிமன்றம் கேட்கலாம்.
  6.  ஜீவனாம்சத் தொகையைப் பெறும் முன்னாள் மனைவி மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இறக்கும் வரை அல்லது பணம் செலுத்தும் மனைவி மறையும் வரை கொடுப்பனவுகள் தொடரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் செலுத்துபவர் அவர்களின் இயற்கையான வாழ்நாள் முழுவதும் செலுத்த முடியும். பணம் பெறுபவர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாத குறிப்பிடத்தக்க மற்றவருடன் வாழ்ந்தாலும், அவர்கள் தொடர்ந்து பணம் பெறலாம். இது அதிகமாக நடக்கும் ஒன்று.குறிப்பாக அந்த ஊனம் முன்னாள் மனைவி வேலையிலிருந்து பணம் பெறுவதைத் தடுக்கிறது அல்லது வேலை செய்யும் திறன் குறைவாக இருந்தால்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களின் மதத்திர்கேற்ப அவர்களின் சட்டங்களும் மாறுகின்றன

எப்போதும் கணவர் மட்டுமே நிரந்தர வாழ்க்கை படி கொடுக்க வேண்டுமா?

பொதுவாக, கணவன் தன் மனைவியை அவள் வாழ்நாள் வரை பராமரிக்க வேண்டும் என்றாலும் இந்து திருமண சட்டத்தின் படி, கணவனோ மனைவியோயருவரில் யார் வேண்டுமானாலும், தன்னை தானே பாதுகாத்து கொள்ள இயலா

சமீபத்தில் பாக்யஸ்ரீ v ஜகதீஷ் மேற்கோள் : 2022 லைவ் லா (போம்) 112 என்ற வழக்கில் , கணவர் தன மனைவி மாதம் பதினைதாயிரம் ரூஒபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று இந்த சட்டபிரிவின் கீச்ழ் வழக்கு தொடர்ந்தார். தன மனைவி கலூரி பெராரிசிரியராக இருப்பாதாக சினார். கணவருக்கு ஒரு மளிகை கடை வைத்திரோதாகவும், ஆட்டோ வைத்து இதன் மூலம் வருமானம் ஈடுவதாக மனைவி தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இத்தனைக்கும் விவாகரத்து பெறப்பட்ட்ட 23 வருடங்கள் கழித்து இந்த மனுவை தைகள் செய்தார்.





த பொது, மற்றவரிடம் இருந்து இந்த தொகையை கோரி பெறலாம்..இதுவே இருவரும் மனமொத்து விவாகரத்தி கோரும்போது, இருவருக்கும் இடையில் ஏற்படும் ஒப்பந்தப்படி யாருக்கு யார் கொடுப்பது என்பது தீர்மானிக்கப்படும். 
இதுவே இரண்டு தரப்பும் எதிர்த்து வழக்கு நடத்தும்போது, நீதிமன்றம் இந்த தொகையை முடிவு செய்யும். 

அப்போது என்னவெல்லாம் கணக்கில் கொள்ளும் தெரியுமா? 

  1. கணவரின் நிலை அவரது வருமானம், அவரது சொத்துக்கள் மற்றும் அவரது வாழ்க்கை முறை
  2. மனைவியின் நியாயமான தேவைகள்\
  3.  நீதிமன்றம் கணவரின் நிலை மட்டுமல்ல, மனைவியின் நிலை மற்றும் சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். மனைவி வேலை செய்து நல்ல சம்பளம் வாங்கும் பட்சத்தில், நீதிமன்றம் அதை கணவரின் வருமானத்துடன் கருத்தில் கொண்டு, வழக்கின் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனைவிக்கு ஜீவனாம்சம்  வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும்.  


ஆனால்.....சிறப்பு திருமண சட்டம் .  1954 படி மனைவி மட்டுமே இத கோரி பெறலாம்.\\ 
இதுவே ஜீவனாம்சம் சரியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றியதும், துணை வாழ்க்கைத் துணைக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால், விளைவுகள் உள்ளன; தண்டனைகள் போன்ற மனைவிக்கு எதிராக நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்


வியாழன், 10 ஜூன், 2021

கணவனுடன் குடித்தனம் செய்ய மறுத்து விவாகரத்து ஆன மனைவி, ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

 "மனைவி" என்ற ஸ்தானத்தை அடைபவளுக்கு தான் எத்தனை பெயர்கள்..

கிரிஹினி இல்லத்தரசி, மதி மந்திரி,, சகி [அவரது கணவரின் தோழி]., கிரிஹ லக்ஷ்மி, அர்தாங்கினி (அவனது பாதி) ,சமராஜி என்று. ..

அவள் தான் தர்மம், அர்த்த மற்றும் காம சாஸ்திரத்தின் ஆதாரம் மட்டுமல்ல, மோட்சத்தின் மூலமும் கூட என்கிறது . மகாபாரதம்.

அவள் தான், தனது கணவரின் ஆத்மா என்கிறது இராமாயணம்.

எல்லாம் சரி தான்…ஒரு குடும்பத் தேரின் இரண்டு சக்கரங்களான கணவனும் மனைவியும், காலப்போக்கில் ஒரு கருத்து வேறுபாட்டிற்குள் நுழைந்தால்? .

அது ஊடல் என்றில்லாமல், தீர்க்க முடியா சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளும் போது,?

அந்த விவாகம், ரத்தாகிறதோ இ8ல்லையோ, தன்னைத் தானேபராமரிக்க முடியாத அவளையும் அவன் குழந்தைகளையும் பராமரிப்பதற்கான சட்டபூர்வமான உரிமைகளை இந்து திருமணம் பாதுகாக்கிறது என்று சட்டம் சொல்கிறது.

இந்து திருமண சட்டம்1955, இந்து வாரிசு சட்டம் 1956, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் இந்து பாதுகாவலர் மற்றும் வார்டு சட்டம் 1956 என்று ஏகப்பட்ட சட்டங்கள், பெண்ணிற்கான பராமரிப்பைப் பற்றி தான் பேசுகிறது

எது பராமரிப்பு?

இந்திரா காந்தி சொன்னது போல, கானா, "கப்டா அவுர் மகான்"( உணவு, உடை, உறையுள்) இத்தோடு, மருத்துவச் செலவு,, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணமாகாத மகளின் திருமணத்திற்கான செலவுகள்,..  இப்படி பட்டியல் இடுகிறது இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 பிரிவு 3

இந்த சட்டங்களின் நோக்கம் தான் என்ன?

"கணவனால் பிரிந்து, தனித்து வாழும், மனைவி மற்றும் அவள் குழந்தைகளை வறுமையிலிருந்து பாதுகாப்பது தான், பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை பொருள்" என்று 2020ல் தங்கள் முன் வந்த ஒரு வழக்கில், விளக்குகிறார்கள் நீதிபதி மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர்   தங்கள் 67 பக்க தீர்ப்பில்..

இந்த பராமரிப்புக்கான உரிமையே ஒரு பிரிக்கப்படாத குடும்பத்தின் கருத்திலிருந்து தான் வருகிறது.

இன்று வரை ஒரு "இந்துக் குடும்பம்" என்பது ஒரு கூட்டு குடும்பமாகத் தான் பார்க்கப்படுகிறது.ஒரு பெண்ணை தங்கள் வீட்டுப் பையனுக்கு பார்த்து, நிச்சயம் செய்து, மணமுடித்து கூட்டி வரும் போது, அவளை பராமரிக்கும் கடமையும் அவர்களுடையது தானே?..

வரும் பெண், . புகுந்த வீட்டினருக்காக உழைக்கக் வேண்டும்.. ஆனால், தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள முடியாத மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் கணவன் இறந்தால், அவளுடைய புகுந்த வீடு அவளை பராமரிக்க கடன்பட்டதா? 

இதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...