சனி, 12 ஜூன், 2021

முத்தலாக் என்றால் என்ன?

 1982 களில் வந்த இந்த படம் ஞாபகம் இருக்கிறதா?

முத்தலாக்கை முஸ்லிம் சமுதாயம் எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதையும் அது குறித்த சமூக பார்வையையும் இந்த படம் சொல்லும்.

ஹைதரும் நிலோபரும் ஒரே பல்கலை கழகத்தில் படிக்கிறார்கள். நிலபார் மீது ஹைதருக்கு காதல் ஏற்பட்ட பின்பு தான் தெரிகிறது அவளுக்கு ஏற்கெனவே வாசிமுடன் நிச்சயம் ஆகி விட்டதென்று. தன்னுள்ளே அதை புதைததுக் கொள்பவன் பின்னாளில் புகழ் பெற்ற கவிஞராகிறான். ஒரு இதழையும் நடத்தி வருகிறான். இதற்கிடையே நிலோபாருக்கும் வாசிமிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் வேலையில் மிகுந்த நாட்டம் கொண்ட வாசிமின் நடத்தையால் அவர்களின் இல் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகின்றது. முதல் திருமண நாளன்று ஏற்பாடு செய்த பார்ட்டிக்குக் கூட வாசிம், வராததால்; இரண்டு பேருக்கும் சண்டை முற்றுகிறது. இதில் கோபத்தில் வாசிம் நிலோபரை பார்த்து மூன்று முறை "தலாக் தலாக் தலாக்" என்று சொல்கிறான்.(இது தான் முத்தலாக்). அதன்படி அவர்களுக்குள் விவாகரத் தானபடியால் நிலாபர் அவள் தாய் வீடு திரும்புகிறாள். மனமாற்றம் வேண்டி வேலை போகத தீர்மானிக்கும் போது, ஹைதரின் அலுவலகத்தில் அவள் வேலைக்கு சேர நேரிடுகிறது. அவன் தன பால் கொண்ட ஒரு தலைக் காதல் இன்றும் இருப்பதை அறிந்த நிலாபர் அவனை திருமண செய்து கொள்ள சம்மதிக்கிறாள். அவர்களின் திருமனமும் நடக்கிறது. அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் அதே சமயத்தில், தான் நடந்து கொண்டதனால் நிலாபரை இழந்த வாசிம், மீண்டும் அவளுடன் சேர துடிக்கிறான். இது சம்பந்தமாக மத குருவிடம் கேட்கும்போது, அவர் சொல்கிறார்.. "அவள் மீண்டும் ஒரு திருமணம் செய்து அவனுடன் வாழந்த பிறகு அவனை விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவனை மறுமணம் அவள செய்ய முடியும்" என்று (இது முத்தல்லாக் ஆன தம்பதிகள் மீண்டும் சேர உள்ள நிபந்தனை. இவ்வளவு மோசமான நிபந்தனை விதிக்கப்பட்ட காரணமே யாரும் முததலாக் செயல் படுத்தக கூடாது என்பதற்குத் தான்)

எனவே நிலாபருக்கு வாசிம் ஒரு கடிதம் அனுப்புகிறான், சீக்கிரமே ஹைதரை அவள் விவாகரத்து செய்து விட்டு வரும் படி. இந்த கடிதம் படித்த ஹைதர் இருவருக்கும் இடையே இன்னும் காதல் உள்ளது என்று நினைத்து, வாசிமையும் கூடி வந்து நிலாபருக்கு தான் விவாகரத்து கொடுக்க சம்மதம் கொடுப்பதாக தெரிவிக்கிறான். இது கேட்டு நொந்து போன நிலபர் பேசும் வசனம் தான் படத்தின் ஹை லைட்.

முஸ்லிம் பெண்கள் இந்த சட்டத்தினால் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவள் அழகாக படம் பிடித்து காட்டுவாள். தான் தொடர்ந்து ஹைதருடனேயே வாழ விரும்புவதாக சொல்ல, வாசிம் அவர்களை வாழ்த்தி விட்டு விடை பெறுகிறான்.

அந்த காலத்தில் மிகப பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் இது.

பின்னாளில் இந்த விவாகரத்தை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், இந்த முததலாக் சட்ட விரோதமானது என்றும், அவ்வாறு உச்சரிப்பதாலேயே திருமணம் முடிவுக்கு வராது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்பபளித்தது. அதன்பிறகு ௨௦19ல் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் 19.9.௨௦19 லிருந்து அது தண்டனைக்குரிய குற்றமாகியது.

என்றாலும் இன்றும் தலாக்கை மூன்று முறை ஒவ்வொன்றுக்கும் இடையே இரண்டு கால இடைவெளியிலும் ஓவ்வொரு இடைவெளியும் மூன்று மாத கால அவகாசம் கொண்டதாகவும் இருந்து சொல்லும்போது அது செல்லும். அதன்படி செய்யும் போது, விவாகத்தை ரத்து செய்து விடும்.

முதன் முதலில் முஸ்லிம் பெண்களுக்கு இருந்த, திருமணத்தின் பிடிமானத்தின் மீதிருந்த அச்சம் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அந்த சமூக அவலத்திற்கு ஒரு தீர்வு காண இந்த திரைப படம் பெரிதும் காரணமாகும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...