உச்ச நீதிமன்றம் இன்னமும் வேளாண் சட்ட விவகாரத்தில் தீர்ப்பு வழங்கவில்லை. இடைக்கால தடை மட்டுமே வழங்கியுள்ளது.
சரி பொதுவாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாளுமன்றம் நிறுத்தும் அதிகாரம் கொண்டதா?
இதை தெரிந்து கொள்ளும் முன், நம் ஜனநாயக அமைப்பு முறை பற்றி தெரிவதும் அவசியம் .
ஜனநாயகத்தின் மூன்று தூண்களாகிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகார வர்க்கம், சட்டங்களை இயற்றும் சட்டமன்றம், மற்றும் சர்ச்சைகளைத் தீர்க்கும் நீதித்துறை - தனித்தனியாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் அதனதன் அதிகார வரம்பில் செயல்படுமாறு உள்ள இந்த கோட்பாடு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களுக்கு உள்ள சிறப்பு அந்தஸ்து என்ன?
அரசியலமைப்பில் கோட்பாட்டிலிருந்து விலகி எந்தவொரு சட்டமும் நிறைவேற்றப்படக்கூடாது, திருத்தமும் செய்யப்படக்கூடாது என்ற அடிப்படையில், சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் செயல்பாட்டை, நீதித்துறை, மதிப்பாய்வு செய்கிறது.
படிமப்புரவு கூகிள்
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களுக்கு உள்ள வரையறை என்ன?
"நீதிமன்றங்கள் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதித்துறை ஒரு எச்சரிக்கை மணியாக மட்டுமே செயல்பட வேண்டும்; "[1]
அரசியலமைப்பு சட்டம், தன் குடிமக்களுக்கு உறுதி செய்த உரிமைகள் குறித்து "செக் " வைத்தது என்றால் தி அரசியலமைப்பு (இருபத்தி நான்காவது திருத்தம்) சட்டம், 1971 தான்.
அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவொரு ஏற்பாட்டையும் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதை வெளிப்படையாக சொல்வதற்காக அதன் பிரிவு 368 ஐ திருத்தியது. அதற்கு, ஜனாதிபதி தனது ஒப்புதலை வழங்குவதும் கட்டாயமாக்கியது .
இந்த திருத்தங்கள் நம் நன்மைக்கானதா?
இவை அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள குடிமக்களின் பாதுகாப்புகளை வலுப்படுத்துவதற்காக இயற்றப்பட்டவையா என்றால் எதிர்மறையாகத் தான் சொல்லவேண்டும்.
வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தமே எதிர்காலத்திற்கான தொனியை கூறுவதாக அமைத்தது.
"நோக்கங்கள் நன்றாக இருந்தால்", அரசாங்கத்தின் மீதான தடைகளை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று தெளிவாக இருந்தது.
தனிநபர் உரிமைகளை பாதுகாக்க அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உத்தரவாதங்களை நிலைநிறுத்துவதன் மூலம் நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை செல்லாததாக ஆக்கும் போதெல்லாம் , அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் அந்த தடையை நீக்கி பாராளுமன்றம் அதற்கு பதிலளித்தது. பதிலளித்தும் வருகிறது.
ஒன்று கவனித்தீர்களா?
ஒரு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பாளர்கள் அரசியலமைப்பின் நகல்களைத் தான் எடுத்து வருகின்றனர்.
ஏன்?
அது மட்டும் தான் அவர்கள் உரிமைகளை மீட்டுத் தர முடியும் என்று நம்புவதே..
கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் நடத்திய பயணத்தை கூர்ந்து கவனித்தோமானால், நமது அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்த பெரும்பான்மையான உரிமைகள் இழப்பு, மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக நடந்த போராட்டம். ஆகியவை புரியும்.
அரசியலமைப்பு சட்டம் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே, அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று கண்டறியப்பட்டு எதிர்க்கப்பட்டன. கம்யூனிஸ்டான ரோமேஷ் தாப்பர் வெளியிட்ட ஆங்கில வார இதழ் கிராஸ் ரோட்ஸ் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக சென்னையில் தடை செய்யப்பட்டது. முஸ்லீம்-விரோத உணர்வுகளைத் தூண்டுவதாக வெளியீட்டாளர் பிரிஜ் பூஷனின் அமைப்பாளர் டெல்லியில் தடை செய்யப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு போடப்பட்டபோது, மாண்புமிகு உச்சநீதிமன்றம் தாப்பர் மற்றும் பூஷனின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உறுதிசெய்ததுடன், “பொது ஒழுங்கை” பாதுகாப்பது பிரிவு 19 (2) இன் கீழ் சுதந்திரமான பேச்சுக்கான விதிவிலக்குகளில் ஒன்றல்ல என்று கருதினர்.
நில சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது மற்றொரு சிக்கல். ஜமீன்தாரி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, சில மாநிலங்கள் பணக்கார ஜமீன்தார்களுக்கு தங்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்காக குறைந்த இழப்பீடு வழங்கின. இது சில உயர்நீதிமன்றங்களால் அரசியலமைப்பு சட்டத்தின்14 வது பிரிவுக்கு முரணானது என்று கூறி, பணக்கார ஜமீன்தார்களை மீண்டும் பாகுபாடு காட்ட அனுமதிக்காமல், சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பை உறுதி செய்தன,
அரசும், பஸ் போக்குவரத்து வழிகள் போன்ற சேவைகளில் மாநில ஏகபோகங்களை தேசியமயமாக்க முயற்சித்த போது தனியாரின் வாழ்வாதாரத்திற்கான உரிமையை அவை பறித்ததால், வழக்கை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
அடிப்படை உரிமைகளை கடுமையாக அமல்படுத்திய நீதிமன்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அப்போதைய தற்காலிக பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியது. கருத்துத் சுதந்திரத்திற்கான உரிமைக்கான “பொது ஒழுங்கு” மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமைக்கான விதிவிலக்குகள் போன்ற விதிவிலக்குகளில், முதல் திருத்தம் நடந்தது..
அப்போது ஜமீன்தாரிகள் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தனர், மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் 14 வது பிரிவு உத்தரவாதம் அளித்த சமமான பாதுகாப்பை பலவீனப்படுத்துவது தவறான ஆலோசனையாகக் கருதப்பட்டது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான 31வது பிரிவுக்கு விதிவிலக்குகளைச் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் , ஒன்பதாவது அட்டவணை எனப்படும் 31 பி பிரிவு ஒன்றை அரசியலமைப்பு சட்டத்தில் புதிதாக உருவாக்கியது.
இந்த ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள எந்த வொரு சட்டமும் அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் அடிப்படை உரிமைகளை மீறியிருந்தாலும் கூட, அவை, நீதித்துறையின் மறு ஆய்விலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
நிலச் சீர்திருத்தத்தை செயல்படுத்தும் 13 சட்டங்களின் பட்டியலாகத் தொடங்கப்பட்டவை, தேசியமயமாக்கல், நாணயக் கட்டுப்பாடுகள், விலை மற்றும் அளவு கட்டுப்பாடுகள் மற்றும் அவசரகாலத்தின் அதிகப்படியான செயல்களைச் செயல்படுத்தும் 282 அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான , சட்டங்களாக விரிவடைந்துள்ளன.
எப்போதெல்லாம் அரசாங்கத்தின் சோசலிச கொள்கை மற்றும் நலத்திட்டங்களை கட்டுப்படுத்துவது போல, இந்த அடிப்படை உரிமைகள் காணப்பட்டபோது, திட்டங்கள் அல்ல …அடிப்படை உரிமைகள் அடிக்கடி திருத்தப்பட்டன. மேலும், சோசலிச திட்டமிடலுடன் தனிநபர் உரிமைகள் மோதும்போதும், பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, அதை கொள்கைக்கு ஏற்றவாறு மாற்றியது
இந்த அரசியலமைப்பு சட்டம், தற்போது 117,000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டுள்ளது (450 ஆர்டிகில்கள் மற்றும் 104 திருத்தங்கள்).
இப்போது சொல்லுங்கள்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாராளுமன்றம் நிறுத்த வேண்டுமா?
அடிக்குறிப்புகள்