அதிகார பத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகார பத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

இருநபர்கள் சேர்ந்து எழுதிக் கொடுத்த பவரை, அதில் ஒருவர் ரத்து செய்ய விரும்பினால் எப்படி செய்வது?

 இருநபர்கள் சேர்ந்து எழுதிக் கொடுத்த பவரை, அதில் ஒருவர் ரத்து செய்ய விரும்பினால் எப்படி செய்வது?

இரண்டு நபர்கள் சேர்ந்து பவர் பத்திரத்தை எழுதி கொடுக்கின்றனர் என்றால் அந்த சொத்துக் குறித்த உரிமை இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கும்.

அதில் உள்ள பிரிக்கப்படாத உரிமையைப்  பொறுத்து ஒருவர் மட்டும் கொடுத்த அதிகாரத்தை ரத்து செய்து தனியாக பத்திரம் பதியலாம்.

அது போன்ற சமயத்தில்,  பவர் கொடுக்கப்பட்ட நாளில் இருந்து, ரத்து செய்யும் நாளுக்குள்ளாக பவர் பெற்றவர் அந்த சொத்து குறித்து எடுத்த செயல்களை அது பாதிக்காது. உதாரணமாக கிரயம் செய்ய அதிகாரம் கொடுத்து, அதன் பேரில் அவர் ஒப்பந்தம் போட்டிருந்தால், அது நம்மை கட்டுப்படுத்தும்.

ஆனால் கூட்டு சொத்தில் பவர் கொடுத்து, பின்னர் ஒருவர் மட்டும் ரத்து செய்யும்போது, சில வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்தும்.

உதாரணத்திற்கு, பவர் கொடுத்த ஒருவரின் அதிகாரத்தை கொண்டு பவர் ஏஜென்ட் செயல்பட்டு ஒரு ஆவணம் ஏற்படுத்தி, அந்த பிரிக்கப்படாத சொத்தின் பாதி உரிமையை இன்னொருவருக்கு மாற்றும் போது, வில்லங்கமும் சேர்ந்து வரும்.

இப்படித்தான் ஒருவர்

அவரை Mr. x என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சகோதரர் மகனும் சேர்ந்து பவர் பத்திரம் இன்னொருவருக்கு எழுதிக் கொடுத்தனர். பவர் வாங்கியவர ஓர் கிரய ஒப்பந்தம் போட்டு கிரயத் தொகை வாங்கிவிட்டார். அது இரண்டு தரப்பிற்கும் கொடுக்கப்பட்டும் விட்டது.Mr. X இறந்துவிட்ட பிறகு, தற்போது அவர் வாரிசுகள், பவர் அதிகாரம் பெற்றவர் தங்கள் தந்தை இறந்தபின்பு பதிவு செய்யப்பட்டிருக்கும் கிரயம் செல்லாது என்று வழக்கு போட்டுள்ளனர்.

பவர் பத்திரம் பவர் கொடுத்தவர் இறப்பிற்கு பின்னர் செல்லாது

எனவே முடிந்த வரை, சமாதானமாக தீர்வு காண முயற்சிக்கவும்..

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...