தவறு நடக்கும்போது அதைக் கண்டு கோபம் வரும்…வர வேண்டும். அப்படி கோபம் வந்தால் தான் அவன் மனிதத்துவத்துடன் இருக்கிறான் என பொருள். .
அதனால் தான் "ரௌத்திரம் பழகு " என்று கற்று கொடுக்கிறான் பாரதி.
அதற்காக.எதற்கு எடுத்தாலும் கோபபட்டுக் கொண்டிருக்க முடியுமா?
அதை கற்றோர்கள் ரசிப்பார்களா?
எந்த கோபம் அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய கோபமாக இருக்கும்?
உணர்வு ரீதியான தவறையோ சட்ட மீறல் என்ற தவறையோ செய்திருந்தால் அதனால் வரும் கோபம் இயற்கையானது தான். ஆனால் சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடியது எதுவோ அதற்கு எழும் கோபம் தான் கற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏன்?
அப்படிப்பட்ட கோபம் வரும்போது தான் அந்த தவறை சரி செய்ய முனைப்பு ஏற்படும்.செய்தவர்கள் தனடிக்கப்படுவர். சமூக ஒழுங்கு வரும்.
சரி
எது சமூகத்திற்கு கெடுதல் தரக்கூடியது?
உணர்வு ரீதியான தவறா, சட்ட மீறல் என்ற தவறா?
பொய் சொல்லுதல் கூடாது என்னும் வள்ளுவரே பொய்மையும் வாய்மையிடத்து என்கிறார்.அப்படியெனில் அது நன்மையை சமூகத்திற்கு கொடுக்கும் எனில் குற்றம் ஆகாது.என்றாகிறது.
அதே போல ஒரு பெண் கொலை செய்வது சட்ட ரீதியான குற்றம்.ஆனால் அதுவே தன்னை காத்துக்கொள்ள செய்கிறாள் என்றால் குற்றமாகாது.
அப்படி என்றால் எப்படி ஒரு குற்றம் சமூகத்திற்கு எதிரானது என்று கண்டுகொள்வது?
இங்கே பலவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது.
இதில் எது சரியானது?
இதில் எது அதிக பாதிப்பை சமூகத்திற்கு கொடுக்கும்?
வேறெங்கும் தேட வேண்டாம்.இதற்கு விடை நம் இராமாயணத்திலேயே உள்ளது.
ஏன் இராமாயணத்தை உதாரணமாக எடுக்க வேண்டும்?
இராமாயனம், மஹா பாரதம் இரண்டுமே நமக்கு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதுதான்.ஆனால் நாம் அதிகம் மேற்கோள் காட்டி பேசுவது இராமாயணத்தை தான்.
ஏன்?
இராமனும் அவன் சகோதரர்களும் போல, கௌரவர்களும் பாண்டவர்களும் சகோதரர்கள் தானே?
சகோதரர்கள் எப்படி இருக்கக்கூடாது என்று சொல்வது மஹாபாரதம்.என்றால், எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவது இராமாயணம்.
சுருக்கமாக சொல்லின், எப்படி வாழக் கூடாது என்று பாரதம் சொல்கிறது, எப்படி வாழவேண்டும் என்று சொல்வது இராமாயணம்.
எனவே இராமாயணத்தில் உள்ள ஒரு அம்சத்தை பார்ப்போம்.
அதிலே, கோபமே படாத லக்ஷ்மணன் மூண்று பேர்களிடம் கோபம் கொண்டதாக வரும்.. இதில் யாரிடம் கொண்ட கோபம் கற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோபம்?
ஒருவன் பரதன்.இரண்டாவது கைகேயி. அதற்கு காரணம் நமக்கு தெரியும். தன் அண்ணன் இராமன் பட்டாபிஷேகம் கொள்ள முடியாமல் தடுத்தவர்கள் என்ற கோபம்.
ஆனால் லட்சுமணன் அவர்கள் மீது கொண்ட கோபத்தை இராமன் தட்டிவிடுகிறான். .தன் தாய், சகோதரன் என்பதால் மன்னிக்கிறான் என்று அதை நம்மால் ஏற்றுக கொள்ளமுடியாது. அதுவும் அவன் அளவுக்கு யாருக்கு தயாள மனம் வரும்?
கூர்ந்து ஆராயும்போது, பரதன் ஒரு பாவமும் அறியாதவன். கைகேயியின் செயல் தெரிய வந்தபோது, தன் தாயையே , " ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். அண்ணன் இராமன் கோபம் கொள்வான் என்பதால் உன்னை கொலலாமல் விட்டேன்" என்றவன் .
அப்படிப்பட்ட பரதனை °நின்னிலும் நல்லன்” என்று புகழ்ந்து இராமனிடத்துச் சொன்ன கோசலையே ஒரு இடத்தில் சந்தேகம் கொண்டு கேட்கிறாள்."நீ அறிந்திலை போலுமால்?'
இதைக் கேட்டு பரதன் துடித்து போய்
நான் அறிந்து இந்த கொடுஞ் செயல் நடந்திருக்குமேயானால் இவர்களுடைய பாவஙகள் எல்லாம் என்னை வந்து சூழட்டும்" என்று ..புலம்புகிறான்
"கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,ஐய! .அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்,பிறன்கடை நின்றவன், பிறரைச் சீறினோன்,மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்,துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன். 98
அவன் கதறுவதை பார்த்து கோசலையே வருந்தி அவள் மேல் தவறு இல்லை என உணருகிறாள்.
அதன்படி பார்க்கும்போது, பரதன் மீது உணர்வு ரீதியான குற்றம் இல்லை.அவன் தாய் செய்த தவறுக்கு அவனை பொறுப்பாளியாக்க முடியாது. என்பதால் அவனை சட்ட ரீதியாகயம் குற்றம் சொல்ல முடியாது.
அடுத்து லக்ஷ்மணன் கோபம் கொண்டது கைகேயியின் மீது.
அவளும் தன் மகன் நாடாள வேண்டும் என்று நினைத்தாளே தவிர , இராமன் மீது அதிக பாசம் கொண்டவள்.அதனால் தான் இராமன் பட்டம் சூட்ட அறிவித்தவுடன் தன் தாயிடம் கூட முதலில் போகாமல், கைகேயியை காண வந்தவன். எனவே அவள் செய்தது உணர்வுபூர்வமாகவும் சட்டரீதியாகவும் குற்றமல்ல.அவளுக்கு கொடுக்கப்பட்ட வரத்தை பெற்று கொண்டாள் அவ்வளவு தான்.
ஆனால் மூத்தவன் பட்டத்திற்கு இருக்க, இளையவனுக்கு பட்டம் சூட்ட வைத்ததால், அவள் சட்ட ரீதியாக குற்றம் செய்தாள் எனலாம்.
அப்படியானால் தசரதன் குற்றவாளியா என்றால் அதுவும் கிடையாது. மனைவி மீது வைத்த அதீத அன்புடன் கூடிய நம்பிக்கை, அது போன்ற வரத்தை கொடுக்க வைத்தது.
எனவே உணர்வு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பரதன் குற்றம் செய்யவில்லை ஆனால் கைகேயி சட்ட ரீதியாக குற்றம் செய்கிறாள். ஆனால் அது சமூகத்திற்கு கேடு உண்டாக்கியதா என்றால் எதிர்மறையாகத் தான் சொல்லவேண்டும்.
அடுத்து லக்ஷ்மனன் கோபம் கொண்டது சூர்பனகை மீது.
சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் கண்டு மோகம் கொள்கிறாள். அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். தான் அரக்கியாய் இருப்பது அதற்குத் தடை என்று நாணுகிறாள். அழகியாய் உருமாறி அண்ணலின் முன் நடக்கிறாள். அண்ணலுக்கும், இளவலுக்கும் இடையில் நகைபகடையாய் உருட்டி விளையாடப் படுகிறாள் அவள் மீது கொண்ட கோபத்தின் காரணமாக அவள் மூக்கை வெட்டி எரிகிறான் லக்ஷ்மணன்.
சூர்ப்பனகை அத்தகைய இழி குலப்பெண்ணா?
அவளை கம்பர், அன்பானவள், மென்மையானவள்.என்று தான் வர்ணிக்கிறார். அந்த இடத்திற்கு அவள் வரும் போது கூட, தாமரை யொத்த மலர் பாதத்தை மெல்ல அடி எடுத்து வருவதாகத் தான் கம்பர் பாடுகிறார்..
சகோதர ரூபத்தில் விதி அவள் மகிழ்ச்சியான வாழ்வில் சூறாவளியை ஏற்படுத்திவிட்டது. சமயமும் சந்தர்ப்பமும் அவளை எதிர்நிலையில் நிற்கவைத்துவிட்டது.
அவள் அண்ணன் இராவணன் காட்டிய மணவாளனை மணம் செய்து, வாழ்ந்தபோது சூழ்ச்சி செய்து அவனை தங்கை கணவன் என்றும் பாராமல் கொல்கிறான் இராவணன். அவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள். அதே சமயம் பழி தீர்க்கும் எண்ணமும் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிகிறது.
சீதையை கவர்ந்து வந்தால் தன் மனைவியைக் காப்பாற்ற ராமன் போர் புரிந்து ராவணனை அழித்து அவளை மீட்டுச் செல்வான். அதே சமயம் கற்புக்கரசி சீதையை கவர்ந்து வந்து அவளை அடைய பலவந்தப்படுத்தினால் ரம்பையின் சாபப்படி ராவணனே தலை வெடித்துச் செத்து விடுவான். எது எப்படி நடந்தாலும் ராவணனின் மரணம் உறுதி என்ற கணக்கைப் போட்டே காய் நகர்த்தினாள் சூர்pபனகை.
சூர்பனகையின் பதிபக்தியும், தன் வாழ்வை நாசமாக்கியதால் பழி தீர்த்த மன உறுதியும் அதற்காக அவள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட களங்கமும், எப்பெண்ணும் இழக்க தயாராகாதவற்றை தன் இலக்குக்காக இழந்ததும், அவளின் மதியூகமும் கவனிக்கப்பட வேண்டியவை.
ராவண வதம் நடக்க வேண்டும் என்ற விதிக்கு காரணியாக இருந்தவளே சூர்ப்பனகைதான். அவள் தன்னையொத்த பெண்ணான சீதையின் துயரை நினைக்காமல் தனது பழிவாங்குதல் நோக்கு ஒன்றே பெரிதாக நினைத்தமையால், எதிர்மறை குணசித்திரமாகவே இன்றளவும் அறியப்படுகிறாள் சூர்ப்பனகை.
நல்லவை, தீயவை சேர்ந்து தானே மனிதர்கள்! தீமையெனும் மலரினைச் சூடியவர்களை காலம் தோறும் தவறான முன்னுதாரணமாகவே அறியப்படுகிறார்கள் என்பதற்கு சூர்ப்பனகை சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
எனவே உணர்வு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் குற்றம் செய்தவள் சூர்ப்பனகையே என்பதால் லக்ஷ்மணன் அவள் மீது கொண்ட கோபம் தான் கற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.. அவளை பெண் என்றும் பாராமல் சிதைத்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் படி பார்க்கும் போது,ஒரு செயல் உணர்வு மற்றும் சட்ட ரீதியாகவும் குற்றமாக இருந்தால் மட்டுமே, அதை செய்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்றுக கூறி கொண்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக