திங்கள், 7 ஜூன், 2021

வங்கி கடனை வாங்கிவிட்டு அதை கட்டாமல் குத்தகைக்கு விட்டு தலைமறைவாக இருக்கும் உரிமையாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

 வங்கி கடனை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அந்த சொத்தை கையகப்படுத்தி ஏலம் விட்டு, அந்த கடனுக்கு ஈடாக்குவார்கள்.

அப்போது அந்த சொத்தில் குடியிருப்பவரை காலி செய்ய சொல்வர்.

குத்தகையின் பேரில் குடியிருந்தால், அதை காட்டி காலி செய்ய மறுக்கலாம்.

தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால், நீதிமன்றம் அணுகி, குத்தகை பணம் கழியும் காலம் வரை அந்த இடத்தை தன் வசம் வைத்துக் கொள்ள அனுமதி பெறலாம்.

பொதுவாக வங்கி, குத்தகை பணம் திரும்ப கொடுக்காது. அந்த பணத்தை வாடகையாக கழித்துக்கொண்டு. , பின் இடத்தை ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதிப்பர்

எப்படியும் நம் உரிமை பாதிக்காமல் தான், வங்கி தன் கடனை வசூலிக்க..முடியும்.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...