திங்கள், 7 ஜூன், 2021

ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. நீ பணக்காரனாக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவாய் என்று ஏதேனும் தீர்ப்பு வழங்கப்பட்ட சரித்திரம் இருக்கிறதா?

 எத்தனையோ இருக்கிறதே…இதில் என்ன சந்தேகம்?

உதாரணத்திற்கு நமக்கு நன்றாக தெரிந்த சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் ரூ.7,000 கோடிக்கு முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அதன் நிறுவனர் பி.ராமலிங்க ராஜு (60), அவரது 2 சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதே.

ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரரும் நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநருமான ராம ராஜு ஆகிய இருவருக்கும் தலா ரூ.5.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 8 பேருக்கும் தனித்தனியாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சரி பக்கத்து ஊருக்கு. ஏன் போகணும்?

சென்னையில் மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு கிளைகளைப் பரப்பியிருக்கும் `சரவண பவன்' ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், பிரின்ஸ் சாந்தகுமாரைப் படுகொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாரே அதுவும் மறந்துருச்சா?!

அவர் அதை தடுக்க உச்ச நீதிமன்றம் வரை போனார்..மாற்ற முடிந்ததா?!

அதே போல ..இந்த கோரானா காலத்தை விடுங்கள்..சாதாரண காலத்திலேயே எப்படி வாழ்வு முடிந்தது என்ற மர்மத்தோடே போய் சேர்ந்தாரே முன்னாள் முதல்வர்..சிறைக்கு போவதை தடுக்க முடிந்தது..ஆனால்..?

இங்கே ஏழை, பணக்காரன் என்று எதுவும் வித்யாசம் கிடையாது. ."ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...