திங்கள், 7 ஜூன், 2021

தனது அம்மாவின் சொத்தை பாகபிரிவினை மூலம் பெற்ற ஒருவர் அதை விற்கும்போது, வயது வந்த அவரது மகன் மற்றும் மகள் கையெழுத்து இல்லாமல் விற்கபட்டால் எதிர்காலத்தில் இதில் ஏதேனும் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறதா? சட்டம் சொத்தை வாங்கியவரை பாதுகாக்குமா?

 அம்மாவின் சொத்தை பாகப்பிரிவினை மூலம் பெற்றாலும், அதற்கு . அவரே முழு உரிமையாளர்.

தாத்தாவின் சொத்தில் தான் பேரப்பிள்ளைகளுக்கு உரிமை உண்டே தவிர, பாட்டியின் சொத்தில் அல்ல.அதை அவர் விருப்பம் போல பிரித்து கொடுக்கும் போது, அந்த பங்கினை பெற்ற நபரும் முழு உடிமையாளரே.

இதற்கென்று மகன், மகள் கையெழுத்து பெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர் பெற்றது பரம்பரை சொத்தில் பங்கு அல்ல..

தாத்தாவின் சொத்து மற்றும் பாட்டியின் சொத்து இரண்டின் மீது பேரப்பிள்ளைகளுக்கு ஏற்படும் உரிமை வேறானது. முன்னது அவர்கள் கருவில் இருக்கும்போதே உரிமை கிடைக்கிறது. பின்னது, அவர் இறந்தபின், அவர் பிள்ளைகள், கணவரில்லாத போது, உரிமை கிடைகிறது.

ஒரு இந்து விதவையின் பெற்றோர் தரப்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களை ‘அந்நியர்கள்’ என்று கருத முடியாது என்றும், அவரது சொத்துக்கள் இந்து வாரிசு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் , சமீபத்தில் மான்புமிகு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது..

நீதிபதிகள இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 15 (1) (ஈ) ஐக் குறிப்பிடுகையில், , இந்த பிரிவை ஆய்வு, செய்கையில், தந்தையின் வாரிசுகளும், சொத்தின் வாரிசுளாக குறிக்கிறது, என்றும், அவர்கள் வெற்றிபெற முடியும். ஒரு பெண்ணின் தந்தையின் வாரிசுகள் என்று வாரிசுரிமை உள்ள நபராக சேர்க்கப்படும் போது, ​​அவர்கள் அந்நியர்கள் என்றும், குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்ல, என்றும் கருத முடியாது, ”என்று பெஞ்ச் கூறியது.

அப்படி என்ன தான் அந்த சட்டப் பிரிவு 15 சொல்கிறது?

பிரிவு 15 - உயில் எழுதாமல் ஒரு பெண் இறக்கும்போது, அவள் சொத்து பின்வரும் வரிசையில் அவள் வாரிசுகளை போய் சேரும்:

அ.) மகன் மற்றும் மகள்(முன்னரே இறந்த மகன்/மகளின் வாரிசுகள் உட்பட) மற்றும் கணவர்; (ஆ) கணவரின் வாரிசுகள் மீது; (இ) தாய் மற்றும் தந்தை மீது; (ஈ) தந்தையின் வாரிசுகள் மீது; (இ) கடைசியாக, தாயின் வாரிசுகள் மீது. ”

குழந்தை இல்லாத விதவை ஒருவர் தனது சகோதரரின் மகனுக்கு ஆதரவாக எழுதிய செட்டில்மெண்ட் பத்திரம் செல்லும் என்று அனுமதித்த ஐகோர்ட் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில், ஜக்னோ என்ற பெண் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் சொத்திற்கு முழுமையான உரிமையாளரானார்.

குழந்தை இல்லாத அவர் ஒரு குடும்ப செட்டில்மெண்ட் மூலம், தனது சகோதரின் மகன்களுக்கு ஆதரவாக சொத்தை எழுதினார். அதை எதிர்த்து அவரது கணவரின் சகோதரரின் குழந்தைகள் போட்ட வழக்கில் தான மேற்கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Thank you 👍

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...