கூட்டு குடும்ப சொத்தாக ஒரு வீடு இருக்கும்போது, அதனை விற்று அவரவர் பங்குபணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு செய்யும்போது, பங்குதாரர் யாரேனும் அதை தானே கிரயம் பெற கேட்கும்போது, அவருக்கு முன்னுரிமை உண்டு. இது அவரின் சட்டப்பூர்வமான உரிமையும் கூட.
அதுக்காக பணம் குறைத்து கொடுக்கனும்ன்னு இல்லே..!
அவர் மற்றவருக்காண பங்குப் பணத்தை கொடுத்துவிட்டு தன் பெயருக்கு பதிவு செய்யலாம்.
ஆனால் அசையும் சொத்தை பொறுத்து, அது ரொம்ப சிக்கலான விஷயம்…
அதாவது விற்பதிலோ வாங்குவதிலோ அல்ல..அதுக்கு பின்னர் நடக்குமே.. அதுல 😀
இப்படித்தான் என் அண்ணனுக்கு பணமுடை ஏற்பட்டது.வீடு வாங்க பணம் கொஞ்சம் புரட்ட முடியலை. அண்ணன் மனைவியிடம் பேசி அவர் நகைகளை விற்க கொடுத்தார்.என் அண்ணன் என்னிடம் "எல்லாம் புது நகையாக உள்ளது.வெளியில் விற்றால் விலையை குறைப்பார்கள்.தெரிந்தவர் யாருக்கும் வேண்டுமென்றால் அவருக்கே விற்கலாம்" என்றார்.நானும் சரியென்று ஒரு உறவினருக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
எல்லாம் சரி தான்….அப்புறம் தான் கிளைமாக்ஸ்!!
அதுக்கப்புறம்..ஏதாவது ஒரு குடும்ப நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக் கொண்டால்,
மாப்பிள்ளை அவருதான்; ஆனா சட்டை என்னுடையது :😂🤣
என்னுடையது :😂🤣
இவங்களுக்கு நடுவிலே மாட்டிக்கிட்ட ஆளு..😫😫
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக