2011ஆம் ஆண்டு ஒரு வீட்டுடன் கூடிய இடத்தை வாங்கினோம். இன்று இடத்தை விற்க போனால் அது நீர்ப்பிடிப்பு பகுதியில் வருகிறது, விற்க முடியாது வேண்டுமானால் சந்ததிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்திர பதிவின் போது திருப்பி அனுப்பிவிட்டார்கள். எப்படி விற்பது?
"Buyers beware" என்பது தான் அடிப்படை..ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பானல்லவா?
வாங்கும் முன்பே வில்லங்கம் போட்டு பார்த்திருக்க வேண்டும் விசாரித்து இருக்க வேண்டும்..
இருந்தாலும், இப்போதைய நிலையில், உங்களையே விற்க அனுமதிக்காத நிலையில், உங்களிடம் விற்க எப்படி அனுமதித்தனர்?
அதே போல, இந்த கிரயத்தில் ஏற்படும் வில்லங்கத்திற்கு தான் பொறுப்பேற்பதாக கிரய பத்திரத்தில் விற்பனை செய்தவர் சொல்லியிருப்பார் ..
அதனால் இருவர் மீதும் வழக்கு தொடரலாம். அது ஒன்றே வழி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக