திங்கள், 7 ஜூன், 2021

இறந்தவரின்(தந்தை) பெயரில் பத்திரமும் மகனின் (நான்) பெயரில் பட்டாவும் உள்ளது, இம்மனையினை விற்க எது செல்லுபடியாகும்?

 இறந்தவரின் பெயரில் உள்ள மனைப்பிரிவை ஒரு வாரிசுதாரர் இன்றி மற்ற வாரிசுதாரர் மீது பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலுமா?

இறந்தவரின்(தந்தை) பெயரில் பத்திரமும் மகனின் (நான்) பெயரில் பட்டாவும் உள்ளது, இம்மனையினை விற்க எது செல்லுபடியாகும்?

இரண்டு வினாக்களுக்கும் ஒரே விடை தான்.

சொத்தின் பத்திரம் என்பது, அது நம்மை வந்து சேர்ந்த வரலாற்றை சொல்லும்..உங்கள் அப்பாவின் காலத்திற்கு பின், நீங்கள் மட்டுமே வாரிசு என்றால், அதனோடு உங்களோடு இருக்கும் பட்டாவும் சொத்து விற்பனைக்கு தேவைப்படும்.


அது இல்லாமல், உங்களை தவிர்த்து மற்ற வாரிசுகள் இருந்தால், பட்டாவில் உங்கள் பெயர் இருப்பதாலேயே சொத்து உங்களுக்கு சொந்தமாகி விடாது.

அவர்களை தவிர்த்து விற்பனை செய்ய முயலாமல், அவர்களின் சம்மதத்துடன் , அவர்களுக்கு உரிய பங்கை கொடுத்து விற்பது, தேவையற்ற பண நேர விரயம், உறவு நாசம் , மனஉளைச்சலை தவிர்க்கும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...