திங்கள், 7 ஜூன், 2021

ஆண்கள் என்றால் வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும், பெண் என்றால் கண்டிப்பாக என்ன தெரிந்திருக்க வேண்டும்?

 தாங்கள் செய்யும் வீட்டு வேலையின் மதிப்பை தெரிந்திருக்க வேண்டும்…

ஆண்கள் என்றால் அவர்கள் செய்யும் வேலைக்கு பணமதிப்பு உள்ளது..

ஆனால் பெண்ணிற்கோ…என்ன வீட்டு வேலை செய்தாலும், "வீட்டில் சும்மா இருக்கிறாள்"☺️ என்ற பெயரே…

முதல் முறையாக அரசியல் அரங்கில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைக்கு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் 160 மில்லியன் இல்லத்தரசிகள், உலகின் பிற பகுதிகளில் உள்ள பல பெண்களை போலவே, வீட்டினை சுத்தமாகவும், நேர்த்தியாக வைத்திருக்கவும் , சமைக்கவும், பாத்திரங்களை கழுவவும், குடும்ப நிதிகளை நிர்வகிக்கவும் செய்கிறார்கள். அவர்கள் உணவு, தண்ணீர் மற்றும் விறகுகளை எடுத்து, குழந்தைகள் மற்றும் அவர்களின் மாமியார் ஆகியோரை கவனித்துக்கொள்கிறார்கள்.

ஆண்களால், வீட்டு வேலை செய்ய சராசரியாக எடுத்துக்கொள்ளும் 31 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் ஒரு நாளைக்கு 297 நிமிடங்கள் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். 😃

நான்கில் ஒரு பங்கு பெண்களுடன் ஒப்பிடும்போது, ​​கால் பங்கு ஆண்கள் தான் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.!!

இத்தனை காலமாக கவனிக்கப்படாமலேயே இருந்த இல்லப்பணிக்கான மதிப்பு கொடுக்கப்படவேண்டிய கட்டாயத்திற்கு நாடு வந்துள்ளது.அதை முன்மொழிந்த விதத்தில் நடிகர் கமலஹாசன் பாராட்டிற்குரியவர்!!💐

ஏற்கெனவே நீதிமன்றங்கள் வாகன விபத்தில் இறக்கும் இல்லத்தரசிகளுக்கு, அவர்கள் செய்த இல்லப்பணிக்கேற்ப பண மதிப்பு கொடுக்கப்பட்டு நஷ்ட ஈடு கொடுத்து வருகின்றன…

  1. ஆனால் என்ன ..அது அவள் இறந்த பிறகு தானே!! 

முதன் முறையாக அவள் காலத்திலேயே அவள் செய்யும் இல்லப் பணிகளுக்குண்டான மதிப்பை அவள் அறிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது.

அரசியல் கட்சிகள் அது குறித்து தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னாலும், எந்த விதத்தில் அந்த பணம் அவளுக்கு கொடுக்கப்படும் என்ற தெளிவான விவரம் இல்லை..

பெண்கள் அது குறித்த விவரங்களை இனியாவது கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...