திங்கள், 7 ஜூன், 2021

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா?

 


 இந்த கேள்வியை பார்த்ததும் சமீபத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் நினைவுக்கு வந்தது.

பாலியல் குற்றச்ச்சாட்டுக்கு உள்ளான ஒருவனுக்கு பிணை கேட்டு வந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?

"அந்த பெண்னின் கையில் ராக்கி கட்டவேண்டும்"

அத்தோடு நிற்கவில்லை. அந்த 26 வயது குற்றவாளிக்கு பிணை வழங்கிய அந்த உத்தரவில் மேலும் சில நிபந்தனைகளை கேட்டால்…

"ரக்க்ஷா பந்தன் அன்று அந்த பாதிப்பிற்கு உள்ளாகிய பெண்ணிற்கு. ராக்கி கட்டுவதோடு மட்டுமல்லாமல், அவளுக்கு, சகோதரர்கள் கொடுப்பது போல பணமாக ரூபாய் 11,000 கொடுக்கவேண்டும்.

மேலும் அவள் பிள்ளை துணிமணிகள், இனிப்பு வாங்க அவர்களுக்கு ரூபாய் 5000 கொடுக்க வேண்டும்"

இனிப்பு கொடு..கொண்டாடு என்கிறதோ?!😣

நல்ல வேளை. உடன் இடை மறித்தது மாண்புமிகு உச்ச நீதிமன்றம்…🙏

"உயர்நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள், இத்தகைய கொடூரமான குற்றத்தை அற்பமாக்குவதில் தான். முடிவடையும்,.

மேலும் இது போன்ற உத்தரவுகள், அடிப்படையில் அந்த குற்றத்தை இயல்பாக்குவதற்கு வழிவகுக்கும், அது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ”என்ற கருத்தக்கூடிய வலுவான வாய்ப்பு உள்ளது”. என்று வருத்தம் தெரிவித்ததோடு

அந்த உத்தரவுக்கு தடை விதித்தது,.

அது மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள், இதுபோண்ற வழக்குகளில் பிணை உத்தரவு போடும்போது கருத்தில் கொள்ளவேண்டிய சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது…

அந்த ஏழு கட்டளைகள் என்னென்ன?

  1. குற்றவாளி எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொள்வதை அனுமதிக்கவோ, கட்டாயப்படுத்துவது போலவோ பிணை உத்தரவு இருக்கக்கூடாது.அந்த நிபந்தனைகள், புகார்தாரரை குற்றவாலி மேலும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாதவாறு இருக்கவேண்டும்.
  2. குற்றம் சாட்டப்பட்டவர்; பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துவதற்கான சாத்தியமான அச்சுறுத்தல் இருக்கலாம் என்று நீதிமன்றம் நம்புவதற்கான சூழ்நிலைகள் இருந்தாலோ அல்லது அப்படியொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டாலோ, காவல்துறையினரிடமிருந்து அது சம்பந்தமான அறிக்கைகளை பெற்றபின், அந்த பெண்ணின் பாதுகாப்பின் தன்மை தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவருடன் எந்த தொடர்பும் செய்யக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக; ஒரு உத்தரவும் போடவேண்டும்.
  3. இது போன்ற வழக்குகளில், ஜாமீன் வழங்கப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக புகார்தாரருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு நாட்களுக்குள் அவருக்கு / அவளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவின் நகல்; கொடுக்கவேண்டும்.
  4. ஜாமீன் நிபந்தனைகள் மற்றும் உத்தரவுகளில், பெண்களை பற்றியும் சமூகத்தில் அவர்களின் இடம் பற்றிய ஒரே மாதிரியான அல்லது ஆணாதிக்க கருத்துக்கள் பிரதிபலிப்பதைத் தவிர்க்க வேண்டும், மேலும் கண்டிப்பாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பஉத்தரவு இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புகார்தார்ரின் உடை, நடத்தை அல்லது கடந்தகால “நடத்தை” அல்லது “ஒழுக்கநெறிகள்” பற்றிய விவாதம், ஜாமீன் வழங்கும் தீர்ப்பில் நுழையக்கூடாது;
  5. நீதிமன்றம் பாலினம் தொடர்பான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையில் திருமணம் செய்து கொள்ள, பரிந்துரைக்கவோ கூடாது (குற்றம் சாட்டப்பட்டவருக்கும் உயிர் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் எந்தவொரு வடிவத்திலும் மத்தியஸ்தம் பரிந்துரைக்க அல்லது கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் அதிகாரங்களுக்கும் அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டது என்பதால் சமரசம் செய்யக்கூடாது.
  6. ;நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போதும் அல்லது வாதங்களின் போதும் தங்கள் உணர்வுத்திரன் வெளிப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,
  7. நீதிபதிகள் ஒரு பக்கச்சார்புடனோ பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையை குறைக்கக்கூடிய அல்லது அசைக்க்கக்கூடிய எந்தவொரு வார்த்தையையும் குறிப்பாக பேசவோ அல்லது எழுதவோ பயன்படுத்தக்கூடாது,

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலின் உதவியை கோரியுள்ளது.

மேற்படி. ஜாமீன் உத்தரவை “நாடகம்” என்று கூறி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசும்போது,. ~இதுபோன்ற உத்தரவுகளை கண்டிக்க வேண்டியது அவசியம் என்றும், நீதிபதிகள் பாலின உணர்திறன் குறித்த பயிற்சியையும் பெற வேண்டும்" என்றும் பெஞ்சிற்கு தெரிவித்திருந்தார்.

" நீதி வழங்கினால் மட்டும் போதாது. நீதி வழங்கப்படுகிறது என்ற தோற்றமும் இருக்க வேணடும்" என்ற விதிக்கேற்ப, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள, மேற்கண்ட கட்டளைகளை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றுகின்றனவா என்று நாமும் உன்னிப்பாக கவனிப்போம்..

நமக்கும் சமூக கடமையுள்ளதே

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...