ஞாயிறு, 6 ஜூன், 2021

95% பொய்யான வரதட்சிணை கொடுமை புகார் கொடுக்கும் பெண்கள் தண்டிக்கப்படுவதில்லையே. இதற்கு காரணம் என்ன?

 வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வெளிப்படையாக வாங்குகிறார்களே…

வெறும் 5% பேர் தான் தண்டனை அடைகிறார்கள். வாங்கும் 95% பேர் தண்டிக்கப்படுவதில்லையே. இதற்கு காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தால், உங்கள் கேள்விக்கும் சொல்லிவிடலாம்….

எரிமலைகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவை திடீரென ஒரு நாள் வெடிப்பதில்லை.. வெகு காலமாக உள்ளுக்குள் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பஞ்சபூதங்களின் ஒத்துழைப்போடு நடப்பது அது…அதுவரை சாம்பல் பூத்தவண்ணம் அமைதியாய் உள்ள அவையா

இப்படி வெடித்தது ஏன்று ஆச்சர்யம் இருக்கும்..

பெண்ணின் நிலையும் இது தான்.

காலம் காலமாக குடும்ப உறவுகளுக்குள் இருந்த அழுத்தத்தால் போராடி மூச்சு முட்டி கொண்டு இருந்தவள், சுதந்திர காற்றை இப்போது தான் சுவாசிக்க ஆரம்பித்துள்ளாள்..

அந்த வேகத்தின் வெளிப்பாடே தன்னைக் காயப்படுத்திய புகுந்த வீட்டினரையும் காயப்படுத்த வரதட்சிணை புகார் கொடுப்பது..

உண்மையில் புகார் கொடுக்க முனைந்தால், தன் வாழ்வு பறிபோகும் என்று தெரிந்தே துணிந்தே வருவாள்.

அந்த திருமண உறவு கேள்விக்குறியான பிறகு தான் இந்த பெரிய அடியே எடுத்து வைப்பாள்..

அது பொய் புகாரோ உண்மையோ, மீண்டும் இல்லற வாழ்வு கூடி வருவது கடினம் என்னும்போது தானே இதை செய்கிறாள்..அந்த நிலைக்கு தள்ளியவர்கள் மீது கோபம் எழுவது இயற்கையே..

அதற்காக பொய் புகார் கொடுப்பவரருக்கு நான் வாக்காலத்து வாங்கவில்லை.

ஆனால் ஏழு அடி எடுத்து, "உன் இன்ப துன்பத்தில் பங்கெடுத்து கொள்வேன்" என்று உறுதி கூறியவனே மாறும்போது?.

சரி ..பொய் புகார் கொடுத்துள்ளாள் என்றே வைத்துக்கொள்வோம்..

நீதிமன்றத்திலும், குற்றமற்றவர் என்று தீர்ப்பாகிவிடுகிறது.

அடுத்து யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்?

"என்னை பொய் புகார் கொடுத்து, நோகடிக்கவைத்தார்.அவர மீது நடவடிக்கை எடுங்கள்" என்று விடுதலையானவர் தான் புகார் கொடுக்க வேண்டும்.

அய்யோ …திரும்பவும் முதல்லேயிருந்தா..?😶

ஆனால்..நாம என்ன செய்வோம்..

"தப்பிச்சோம்..பிழைச்சோம்னு" ஓடிறது..

யார் மேல தப்பு?!

சரி..திருமண உறவே அற்புதமானது. அதுல வாழ்க்கையை ஏன் போர்க்களம் போல ஆக்கிக்கணும் ?

சில முக்கிய விஷயங்களை, திருமண்ப் பொருத்தம் பார்க்கும்போதே கணித்து விட்டு தவிற்கலாமே..

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது குடும்பம் மற்றும் கூட்டு குடும்பத்தை குறிக்கும் இடம். ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் ஏழாம் அதிபதி எனப்படும் களத்திரஸ்தானாதிபதி, இரண்டாமிடத்தில் இருந்தால், திருமணமாகி திருமணத்தின் மூலம் நல்ல, குடும்ப வாழ்க்கையும், அவர்களை சார்ந்து வாழும்அமைப்பு உண்டாகும்.

ஆனால்…ஏழாம் அதிபதி (கடக, சிம்ம லக்னம்) சனியாகி , லக்னத்திற்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்தால்,திருமணம் தாமதமாகும் என்ற நிலை இருந்தாலும், திருமணத்திற்கு பின்னர், குடும்பத்தில் ஒரு பற்றற்ற நிலையை உருவாக்கும்.

சனி இரண்டாம் இடத்தில் அமர்ந்து அதோடு பாவ கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுக்கள் சூரியன், செவ்வாய் இருந்தால், அவர்கள் கூட்டு குடும்பமாக, வாழ அமைப்புஇருக்காது.

உடனே தனிக்குடித்தனம் போவது உத்தமம் இல்லைனா..குடும்பத்தில் தினசரி குண்டு வெடிக்கும்.

.ஜோதிடத்தில் ராகு, கேதுக்கள் என்பவை மாமனார், மாமியாரை குறிக்கும் .

நான் சொல்லலை…😀

அத்துடன் பாப கிரகமான சனி சேர்வது ஜாதகருக்கும், மாமனாருக்கும் மாமியாருக்கும் இடையே நல்லஉறவு முறையை கொடுக்காது.தாமரை இலைத் தண்ணீர் போல், மறைமுகமாக வாழவே இயலும்.

அப்ப தப்பு பொண்ணு மேல கிடையாது😀

அதே நேரத்தில் 2 க்குடைய கிரகம் இரண்டில் ஆட்சி ஆகி, குரு பார்வையில் இருந்தால் நிச்சயமாக கூட்டு குடும்ப அரவணைப்பில் வாழும் அமைப்பைக் கொடுக்கும்.

அப்படி ஒரு பொண்ணு கல்யாணம் செய்ய கிடைச்சா விட்டுறாதீங்க!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...