அரை ஏக்கர் ஒருவருக்கு ஆவணம் பதிவு செய்யப்பட்டது. 1994. அந்த சர்வே எண் ஒரு ஏரி என்று தெரியவந்தது. சரி, அந்த சர்வே எண் நிலத்தை ஒரு சார் பதிவாளர் எப்படி ஒரு பயனர் பெயரில் பதிவு செய்து கொடுப்பார்? . யாரிடம் இழப்பை கோருவது?
ஆங்கிலத்தில் சொல்வார்கள் " buyers beware' என்று .
வாங்குபவர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வில்லங்கம் உள்ளதா என்று பார்க்காமல் வாங்கியது யார்?
சார் பதிவாளர் பணி, தன்னிடம் கொடுக்கும் ஆவணத்தில் முத்திரை கட்டணம், சொத்து மதிப்பு சரியாக உள்ளதா, பதிவு நடைமுறைகள் சரியாக பின்பற்றபட்டதா என்று பார்ப்பது மட்டுமே..
நீங்கள் எல்.ஐ.சி.யை விற்க வேண்டுமாயினும் பதிவு செய்து கொடுப்பார்!!
அப்படியானால், யாரிடம் இழப்பை கோருவது?
வேறு யார்…?
விற்பனை செய்பவர் தான், அந்த சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று உறுதி கொடுத்து, அப்படி வருமாயின் தானே முன்னின்று அதை தீர்த்து வைப்பதாக கிரய பத்திரத்திலேயே சொல்லி கையெழுத்திட்டு இருப்பாரே. அவரை தான் பிடிக்கணும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக