பெண்களுக்கு தனி தொகுதிகள் கொண்டு வரப்பட்டதன் நோக்கமென்ன?
கண்டிப்பாக அங்கேயாவது பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவார்கள் , அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கட்டாயம் ஏற்படுத்தியது எதற்காக?
இப்படி கட்டாயப்படுத்தி கொண்டு வரப்படுவதாலேயே பெண்களுக்கு சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ சம உரிமை கொடுத்து விட்டதாகுமோ?
அதே போல தானே.. பெண்களை அதிக அளவில் போட்டியிட வைத்தது மட்டுமே பெண்ணுரிமை பேசும் தகுதியை கொடுத்து விடுமா?
எப்போது அந்த முடிவெடுக்கும் தலைமை பதவியை பெண்கள் அதிக அளவில் வகிக்கிறார்களோ அப்போது தானே அப்படி சொல்ல முடியும்?
இந்த விதத்தில் பெண் தலைவர்களை எண்ணிப்பாரத்தால் எண்ணிக்கை குறைவே…
வீட்டை ஒழுங்காக நிர்வகிப்பவளால் நாட்டை செய்ய முடியாதா?
கொடுத்த வேலையை பொறுப்பாக செய்து முடிப்பவர் ஆணை விட பெண்ணே என்கிறோமே..அப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போகும் , நமக்காக நம் தொகுதிக்காக வேலை செய்ய தகுதியானவர் ஆணா அல்லது பெண்ணா?
உடனே சொல்லாதீர்கள். பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று.
ஒரு விஷயம் கவனித்தோமா….. விடுதலை போராட்ட வீரர்கள் என்றால் நம்மில் பலர் சட்டென்று சொல்வது ஆண் தலைவர்கள பெயரை தானே!!
குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் போதும் இப்படி தான்..
ஒரு பெண் கூட அந்த படங்களில் இல்லையேன்னு தேடினா எத்தனை பெண் சுதந்திர போராட்ட வீரர்கள் வர்றாங்க..
விடுதலை வீரர்கள்னாலே இவர்களையும் சேர்த்து தானே சொல்லணும். ஏன் தனியா பிரிச்சு பார்க்கிறாங்க?
இது இப்போ நேத்திக்கு மட்டுமில்லீங்க..ஆதியிலேயிருந்தே..நடந்து வர்ற கதை..
முகலாய சாம்ராஜ்ஜியத்திலும் இந்த கதை தானே..தன் சகோதரர்களை விட திறமையானவராக இருந்தும் , அரசனே தன் மகள் ரசியா சுல்தானா தான் அடுத்து அரசாள வேண்டும் என்று உத்தரவிட்டாலும், மந்திரிகள் ஏற்றுக் கொண்டார்களா? ரசியாவை ஆட்சி செய்ய விட்டிருந்தால், வரலாறே மாறியிருக்குமே!!
இந்திரா காந்தி கூட ஆண் வாரிசு இல்லை என்பதால் தானே கொண்டு வரப்பட்டார்..
இப்படி காலம் காலமாக தகுதியிருந்தும் பெண்கள் அரசியலில் முன் நிறுத்தப்படுவது அந்தந்த குடும்பத்தாலேயே தடுக்கப்படுகிறது..
இன்றைய தேதியில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபம்.
அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள், பெண்களை பற்றி கொண்டிருக்கும் கணோட்டத்தை பாருங்களேன்..
இவர்கள் போய், பெண்களை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ தனக்கு சமதையாக இருக்க செய்வர் என்று எதிர்பார்க்களாகுமா?
சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணைக்குழுவை வழங்க தன்னிச்சையாக வைக்கப்பட்ட இராணுவத்தின் மதிப்பீட்டு அளவுகோல்களை எதேச்சதிகாரமானது என்று சொன்னபோது இவ்வாறு குறிப்பிட்டது
' இது, ஆண்களுக்கான ஆண்களால் உருவாக்கப்பட்ட நமது சமூகத்தின் கட்டமைப்புகள்'[1]
எனவே ஆண்கள், பெண்களை மேலே கொண்டு நிறுத்துவர் என்று நினைப்பது ..எதிர்பார்ப்பது. என்பது 😂.
பெண்களுக்கு சம உரிமை பற்றி பேச ..நிறைய பெண்களே முன்வரவேண்டும்..
அவர்களும் வருகிறார்கள் தான்…🤔
இன்னமும் வருவார்கள்..
அதே சமயம் பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதாலேயே அவர்கள் தேந்தெடுக்கப்படும் தகுதி வந்து விடாது..
இந்த சமயத்தில், நாம் தான், நமக்கு தேவையானவர் வேலைக்காரர்களா அல்லது எஜமானர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும்…
அதை கொடுக்கிறேன் இதை கொடுக்கிறேன் என்பவர்கள் நமக்கு எஜமானர்கள் என்ற எண்ணத்தில் தானே உள்ளனர்…😣
இந்த தருணத்தில் நேர்மையாக இருக்கப் போகிறோமா, அல்லது கையேந்தி அடிமையாக இருக்கப் போகிறோமா என்பதை பொறுத்தே நம்மிடத்தில் நல்ல மாற்றம் வரும்..
அடிக்குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக